பலாத்காரம் செய்யப் போறாங்க: மனதளவில் தன்னை தயார்படுத்திய பிரபல நடிகை
நியூயார்க்: முகமூடி கொள்ளையர்கள் தன்னை பலாத்காரம் செய்யப் போகிறார்கள் என நினைத்து மனதார அதற்கு தன்னை தயார்படுத்தியதாக நடிகை கிம் கர்தாஷியன் தெரிவித்துள்ளார்.
அமெரிக்க டிவி ரியாலிட்டி ஷோ நடிகையான கிம் கர்தாஷியன் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் பிரான்ஸ் தலைநகர் பாரீஸுக்கு சென்றார். அவரது ஹோட்டல் அறைக்குள் புகுந்த முகமூடி கொள்ளையர்கள் அவரிடம் இருந்த விலை உயர்ந்த நகைகளை கொள்ளையடித்துச் சென்றனர்.
அது குறித்து கிம் தற்போது கூறியிருப்பதாவது,

துப்பாக்கி
கொள்ளையர்களின் கையில் துப்பாக்கியை பார்த்து பயந்தேன். அவர்களிடம் இருந்து தப்பித்து ஓடுவதா வேண்டாமா என்று முடிவெடுக்க வேண்டிய நிர்பந்தம்.

கிம்
கொள்ளையர்களிடம் இருந்து தப்பித்து ஓட முயன்றால் நிச்சயம் துப்பாக்கியால் சுட்டுக் கொன்றுவிடுவார்கள் என்று தோன்றியது. என்ன செய்வது என்று தெரியாமல் இருந்தேன்.

கொள்ளையன்
கொள்ளையன் ஒருவன் என் வாயில் டேப்பை ஓட்டிவிட்டான். அவன் என் கால்களை பிடித்து படுக்கையின் முன்பகுதிக்கு இழுத்தான். நான் உள்ளாடை எதுவும் அணியவில்லை.

பலாத்காரம்
கொள்ளையன் என்னை பாலியல் பலாத்காரம் செய்யப் போகிறான் என நினைத்தேன். ஓகே, பலாத்காரம் தான் செய்யப் போகிறார்கள் என்று மனதளவில் என்னை நானே தயார்படுத்திக் கொண்டேன். நல்லவேளையாக அவர்கள் என்னை ஒன்றும் செய்யவில்லை என்றார் கிம்.


Click it and Unblock the Notifications











