Don't Miss!
- Sports CSK vs LSG : தோனி பேட்டிங்.. அலறிய வாட்ச்.. பதறிய டி காக் மனைவி.. ரசிகர்கள் செயலால் நடந்த சம்பவம்
- Lifestyle 2024 குரு பெயர்ச்சியால் உருவாகும் குபேர யோகம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு பணக்காரராகும் வாய்ப்பிருக்கு..
- News தென் சென்னை தொகுதியில் 2019ஐ விட 10% அதிகரித்த வாக்குப்பதிவு.. இது யாருக்கு லாபம்!
- Automobiles இந்தியாவில் விவசாயம் பார்ப்பவர்கள் அதிகமாகி விட்டார்களா என்ன? மஹிந்திரா டிராக்டர்ஸ் சேல்ஸ் டாப் கியரில்!!
- Technology சுந்தர் பிச்சையின் இன்னொரு முகம்.. Ad Blocker ஆப்களுக்கு ஆப்பு அடிச்ச Google.. யூசர்களுக்கு Warning.. இனிமேல்?
- Finance 9 GB டேட்டா ரூ. 1.20 கோடியா.. அதிர்ச்சியில் புளோரிடா தம்பதி!
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
கணவர் கள்ளக்காதலியுடன் எஸ்கேப்: பணக் கஷ்டத்தில் நடிகை
மும்பை: தொழில் அதிபர் கணவர் கள்ளக்காதலியுடன் சென்றுவிட்டதால் பாலிவுட் நடிகை கிம் சர்மா தனிமையில் வாடுவதுடன் பணம் இல்லாமல் கஷ்டப்படுகிறாராம்.
ஆதித்யா சோப்ராவின் மொஹப்பத்தைன் இந்தி படம் மூலம் பிரபலமானவர் நடிகை கிம் சர்மா. சில படங்களில் நடித்த அவர் கென்யாவில் ஹோட்டல்கள் வைத்து நடத்தும் அலி பஞ்சானியை காதலித்து கடந்த 2010ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.
திருமணத்திற்கு பிறகு அவர் கென்யாவில் செட்டில் ஆனார்.
கணவர்
அலி பஞ்சானிக்கு வேறு ஒரு பெண்ணுடன் கள்ளத்தொடர்பு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அவர் கிம்மை விட்டுவிட்டு கள்ளக்காதலியுடன் சென்றுவிட்டாராம்.
கிம்
கணவர் வேறு ஒரு பெண்ணுடன் சென்றுவிட்டதால் கிம் வேறு வழியில்லாமல் கென்யாவில் இருந்து கிளம்பி மும்பைக்கு வந்துவிட்டார். அவர் மும்பைக்கு ஜாகையை மாற்றியதுமே அவரது திருமண வாழ்வில் பிரச்சனை என்று பேச்சு எழுந்த நிலையில் உண்மை தெரிய வந்துள்ளது.
ஹோட்டல்கள்
அலி கென்யாவில் நடத்தி வரும் ஹோட்டல்களின் சிஇஓவாக இருந்தார் கிம். கணவர் பிரிந்து சென்றதால் கிம் அந்த பதவியை ராஜினாமா செய்துவிட்டாராம்.
பணக் கஷ்டம்
மும்பையில் தனிமையில் இருக்கும் கிம் பணம் இல்லாமல் கஷ்டப்படுகிறாராம். முன்பு குண்டாக இருந்த அலி கள்ளக்காதலி வந்த பிறகு ஸ்லிம்மாகிவிட்டதாக கூறப்படுகிறது.