Don't Miss!
- Automobiles நம்ம இந்திய நிறுவனத்தின் தயாரிப்பா இதுனு எல்லாரும் வாயடைச்சு போயிட்டாங்க! எஃப்77 மேக்2 இ-பைக் அறிமுகம்!
- Finance சிங்கப்பூர் அடுத்து ஐரோப்பா கொடுத்த ஷாக்.. அச்சுறுத்தும் எத்திலீன் ஆக்சைடு கெமிக்கல்..!!
- News எத்தனை பேர் வந்தாலும்.. கிரிக்கெட்டில் சச்சின் டெண்டுல்கர் "மட்டும்" ஏன் ஸ்பெஷல்?
- Lifestyle கோடையில் இரவு தூங்கும் முன் இதை முகத்தில் தடவுங்கள்.. உங்கள் சருமம் அழகாகவும் பளப்பளப்பாகவும் இருக்கும்..!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
- Technology OnePlus முரட்டு அடி.. AMOLED டிஸ்பிளே.. 32GB மெமரி.. GPS கனெக்டிவிட்டி.. 500mAh பேட்டரி.. எந்த மாடல்?
- Sports இன்னும் 6 போட்டி.. 3ல் அடிவாங்கினால் சோலி முடிஞ்ச்.. பிளே ஆஃப் செல்ல சிஎஸ்கே என்ன செய்ய வேண்டும்?
- Education இலவச கட்டணத்துடன் தனியார் சுயநிதி பள்ளிகளில் சேர வேண்டுமா...ஆன்-லைனில் அப்ளை பண்ணுங்க....!!
கமலுடன் கிஷோர்.. முதல் முறையாக.. தூங்காவனத்தில்!
சென்னை: தூங்கா வனம் படத்தில் நடிகர் கமலுடன் வில்லனாக மோதவிருக்கிறார் கன்னட நடிகர் கிஷோர்.
தெலுங்கு மற்றும் தமிழில் ஒரே நேரத்தில் எடுக்கப்பட்டு வரும் தூங்கா வனம் படத்தில் ஏற்கனவே இன்னொரு வில்லனாக நடிகர் பிரகாஷ் ராஜ் உள்ள நிலையில் தற்போது கிஷோரும் ஒப்பந்தமாகி இருப்பது படத்தின் மீதான எதிர்பார்ப்பை திரையுலகில் அதிகரித்து இருக்கிறது.
உத்தம வில்லனைத் தொடர்ந்து பாபநாசம் படத்தை வெளியிட இருக்கும் கமல் தனது ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேசனல் சார்பாக தூங்கா வனம் படத்தில் தற்போது பரபரப்பாக நடித்துக் கொண்டிருக்கிறார்.
படத்தை கமலின் நீண்ட நாள் உதவியாளரான ராஜேஷ் இயக்குகிறார். படத்தின் முதல் பார்வை போஸ்டர் கடந்த வாரம் ஹைதராபாத்தில் நடந்தது. விழாவில் நடிகர் பிரகாஷ்ராசுடன் கிஷோரும் கலந்து கொண்டதால் படத்தில் மற்றொரு வில்லனாக கிஷோரும் நடிக்கிறார் என்று தகவல்கள் வெளியாகிய நிலையில் தற்போது கிஷோரும் அதனை உறுதிப்படுத்தியிருக்கிறார்.
தூங்கா வனம் படத்தில் நான் நடிக்கிறேன். ஆனால் படத்தில் நான் என்ன ரோலில் நடிக்கவிருக்கிறேன் என்பது ரகசியம் என்று கிஷோர் கூறியிருக்கிறார்.
தமிழில் மிகச் சிறந்த வில்லனாகவும், குணச்சித்திர நடிகராகவும் வலம் வந்து கொண்டிருக்கும் கிஷோர் தற்போது துந்து கைக்கள் சாவாச என்ற கன்னட படத்தில் நடித்து வருகிறார். விரைவில் ஹைதராபாத்தில் நடந்து வரும் தூங்கா வனம் படத்தின் படப் பிடிப்புக் குழுவினருடன் இணைந்து கொள்ளவுள்ளார். இன்னும் இரண்டு மாதத்தில் தூங்கா வனம் படத்தின் தமிழ் படப் பிடிப்பு தொடங்கப்படவுள்ளது.
தூங்காவனம் முத்தக் களமாக இருக்குமா அல்லது யுத்தக் களமாக மாறுமா..பார்க்கலாம்!