Don't Miss!
- Technology நீ படிச்ச ஸ்கூல்ல நான் ஹெட் மாஸ்டர் டா.. ChatGPT-க்கு செக் வச்ச Google.. இனி மொபைல் யூசர்கள் Gemini பக்கம்!
- News மயிலாடுதுறையில் ஆச்சரியம்.. அந்த "வைக்கோல் மூட்டை".. ஆஹா, வைத்தீஸ்வரன் கோயில் தையல் நாயகி.. பரவசம்
- Automobiles கியா களமிறக்கும் புது எலெக்ட்ரிக் காரின் விலை இவ்ளோதானா! பெட்டி கடைல கடலை மிட்டாய் விக்கற மாதிரி விக்க போகுது!
- Lifestyle உங்கள் கால் நகங்களை அழகாக மாற்ற அற்புதமான டிப்ஸ்..
- Finance இனி பீட்சா முதல் பெப்சி வரை இவர்கள் கையில் தான்..!! வாரிசு கைக்கு மாறும் ஆர் ஜே கார்ப்பரேஷன்..!
- Sports சிஎஸ்கே அணிக்கு சிக்கல்.. பிளே-ஆஃப் வாய்ப்புக்கு ஆப்பு வைத்த 2 அணிகள்.. இனி என்ன செய்ய வேண்டும்?
- Education மாணவர்களுக்கோர் ஓர் நற்செய்தி.. நான்கு ஆண்டு இளங்கலை பட்டப்படிப்பு படித்தவர்கள் பிஎச்.டி.யில் சேர
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
உங்களுடைய மகள் பொது இடத்தில் முத்தம் கொடுத்தால் ஏற்பீர்களா?... ஷோபனா கேள்வி
திருவனந்தபுரம் : முத்தம் கொடுப்பது என்பது மிகவும் தனிப்பட்ட விசயம். அதை பொது இடங்களில் செய்வது ஏன் என கேள்வி எழுப்பியுள்ளார் நடிகை ஷோபனா.
கேரளாவில் ஆரம்பித்து இன்று நாடு முழுவதும் சர்ச்சைக்குரிய விவாதப் பொருளாகி உள்ளது முத்தப் போராட்டம். பலத்த எதிர்ப்புகளையும், கண்டனங்களையும் பெற்று வரும் இந்த முத்தப் போராட்டத்திற்கு தடை விதிக்க முடியாது என கேரள அரசு தெரிவித்துள்ளது.
இந்நிலையில், நடன நிகழ்ச்சிக்காக பெங்களூரு சென்றிருந்த நடிகை ஷோபனா, முத்தப் போராட்டம் குறித்த தனது கருத்துக்களைத் தெரிவித்துள்ளார்.
‘முத்தம் கொடுப்பது என்பது தனிப்பட்ட விஷயம். அது தனிப்பட்ட பிரச்சினை. ஆனால் அதை பொது இடங்களில் செய்வது ஏன் என்பது தான் எனக்கு புரியாத விஷயமாக உள்ளது.
இந்த போராட்டத்தை நடத்துபவர்கள் தாங்கள் செய்வது சரி என்று வாதாடலாம். ஆனால், தங்களது மகள்கள் பொது இடத்தில் நடந்து கொண்டால் அதை அவர்கள் பார்த்துக் கொண்டிருப்பார்களா, ஏற்பார்களா... என்று கேட்டுள்ளார் ஷோபனா.