twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    உங்களுடைய மகள் பொது இடத்தில் முத்தம் கொடுத்தால் ஏற்பீர்களா?... ஷோபனா கேள்வி

    |

    திருவனந்தபுரம் : முத்தம் கொடுப்பது என்பது மிகவும் தனிப்பட்ட விசயம். அதை பொது இடங்களில் செய்வது ஏன் என கேள்வி எழுப்பியுள்ளார் நடிகை ஷோபனா.

    கேரளாவில் ஆரம்பித்து இன்று நாடு முழுவதும் சர்ச்சைக்குரிய விவாதப் பொருளாகி உள்ளது முத்தப் போராட்டம். பலத்த எதிர்ப்புகளையும், கண்டனங்களையும் பெற்று வரும் இந்த முத்தப் போராட்டத்திற்கு தடை விதிக்க முடியாது என கேரள அரசு தெரிவித்துள்ளது.

    Kissing is a personal matter: Shobana

    இந்நிலையில், நடன நிகழ்ச்சிக்காக பெங்களூரு சென்றிருந்த நடிகை ஷோபனா, முத்தப் போராட்டம் குறித்த தனது கருத்துக்களைத் தெரிவித்துள்ளார்.

    ‘முத்தம் கொடுப்பது என்பது தனிப்பட்ட விஷயம். அது தனிப்பட்ட பிரச்சினை. ஆனால் அதை பொது இடங்களில் செய்வது ஏன் என்பது தான் எனக்கு புரியாத விஷயமாக உள்ளது.

    இந்த போராட்டத்தை நடத்துபவர்கள் தாங்கள் செய்வது சரி என்று வாதாடலாம். ஆனால், தங்களது மகள்கள் பொது இடத்தில் நடந்து கொண்டால் அதை அவர்கள் பார்த்துக் கொண்டிருப்பார்களா, ஏற்பார்களா... என்று கேட்டுள்ளார் ஷோபனா.

    English summary
    Actress Shobana is not a supporter of the Kiss Of Love event, which is spreading across the country. The actress is of the opinion that kissing is a personal matter. She said, "I don't know why they are doing it. It is a very personal matter and a personal issue. You might say in public that it is okay, but you won't like your daughter to do this (kissing somebody in public)," said the dancer and actress who was in Bengaluru recently to launch her latest dance production.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X