Don't Miss!
- News கார்த்தி சிதம்பரத்துக்கு குட்நியூஸ்.. பாஸ்போர்ட்டை 10 ஆண்டு புதுப்பித்து வழங்க ஹைகோர்ட் உத்தரவு
- Sports அரசியலில் குதிக்க போகும் சானியா மிர்சா.. மக்களுக்கு சேவை செய்ய திட்டம்.. எந்த கட்சி தெரியுமா?
- Technology டீஸரே மிரளுது.. உலக ரசிகர்களை வியப்படைய செய்த Nothing.. புதுசா 2 ப்ராடக்ட்.. என்னென்ன எதிர்பார்க்கலாம்?
- Lifestyle பழங்கால போட்டோக்களில் யாராவது சிரிச்சு நீங்க பாத்திருக்கீங்களா? பார்த்திருக்க வாய்ப்பேயில்லை... ஏன் தெரியுமா?
- Finance சென்செக்ஸ்: வருடத்தின் கடைசி நாள் ரூ.128.8 லட்சம் கோடி லாபம்.. பண மழையில் முதலீட்டாளர்கள்..!!
- Travel 2050 வருஷம் வருறதுக்குள்ள உலகத்துல உள்ள இந்த அழகான இடங்கள் எல்லாம் கடலுக்குள்ள போயிடுமாம்!
- Automobiles மாருதியின் இந்த கார்களின் டேங்கை ஃபுல் பண்ணா 1,200கிமீ போகலாமா.. இதுக்காக பிரச்சாரம் செய்யவே தொடங்கிட்டாங்க!
- Education ஆஸ்திரேலியாவில் உயர்கல்வி பயில இந்திய மாணவர்கள் விரும்புவது ஏன்?
அரசியல் திரில்லராக உருவாகும் கோ 2
சென்னை: 2011 ம் ஆண்டு வெளிவந்து மாபெரும் வெற்றிபெற்ற திரைப்படம் கோ. இயக்குநர் கே.வி.ஆனந்தின் இயக்கத்தில் ஜீவா, கார்த்திகா, அஜ்மல் மற்றும் பிரகாஷ்ராஜ் நடிப்பில், ஒரு அரசியல் கலந்த சஸ்பென்ஸ் திரில்லர் படமாக வெளிவந்து ரசிகர்களைக் கவர்ந்தது கோ.
மீண்டும் 4 வருடங்கள் கழித்து கோ படத்தின் 2ம் பாகத்தை தற்போது எடுத்து வருகின்றனர். கோ முதல் பாகத்தில் நடித்த பிரகாஷ் ராஜ் தவிர வேறு யாரும் கோ 2 படத்தில் நடிக்கவில்லை.
முதல் பாகத்தை தயாரித்த ஆர்.எஸ்.இன்போடெயின்மெண்ட் நிறுவனமே 2 ம் பாகத்தையும் தற்போது தயாரிக்கிறது. கோ 2 படம் அரசியலின் உண்மைகளை எடுத்துக் கூறும் ஒரு படமாக இருக்கும் என்று படத்தின் இயக்குநர் சரத் கூறியுள்ளார்.
கோ – ஜீவா- கே.வி.ஆனந்த்
2011 ம் ஆண்டு வெளிவந்து மாபெரும் வெற்றி பெற்ற கோ திரைப்படம், படத்தின் நாயகன் ஜீவா மற்றும் இயக்குநர் கே.வி.ஆனந்த் இருவருக்குமே ஒரு மாபெரும் வெற்றியைப் பரிசளித்தது. காட்சிகளை விறுவிறுப்புடன் அமைத்து படத்தை ஒரு சஸ்பென்ஸ் திரில்லர் ஆக எடுத்திருந்தார் கே.வி.ஆனந்த். நடிகை ராதாவின் மூத்த மகள் கார்த்திகா நாயகியாக அறிமுகமானது இந்தப் படத்தில்தான். 2011 ம் ஆண்டின் மாபெரும் வெற்றிப் படங்களில் கோ வும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.
கோ 2
4 வருடங்கள் கழித்து தற்போது கோ படத்தின் 2 ம் பாகத்தை மீண்டும் கையில் எடுத்திருக்கிறார்கள்.ஆனால் முதல் பாகத்தில் நடித்த பிரகாஷ்ராஜ் தவிர மற்ற அனைவருமே இந்தப் படத்தில் புதிதாக இணைகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. புதுமுக இயக்குநர் சரத் இயக்கத்தில் பாபி சிம்ஹா, நிக்கி கல்ராணி மற்றும் பிரகாஷ்ராஜ் ஆகியோர் இந்தப் படத்தில் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள்.
2 தேசிய விருது பெற்ற நடிகர்கள்
கோ 2 படத்தில் பிரகாஷ்ராஜ் மற்றும் பாபி சிம்ஹா என்று 2 தேசிய விருது பெற்ற நடிகர்கள் இணைந்து நடிக்கின்றனர். இதனால் நடிப்பில் அவர்கள் இருவருக்கும் இடையே ஒரு ஆரோக்கியமான போட்டி படத்தில் நிலவுகிறதாம்.
அரசியலின் நிஜத்தை எடுத்துரைக்கும்
கோ 2 படத்தின் இயக்குநர் சரத் கோ 2 படம் அரசியலின் உண்மையான முகத்தை எடுத்துக் கூறும் விதமாக இருக்கும். மேலும் அரசியல் வாழ்க்கையின் நிழல்களை எடுத்துக் கூறும் ஒரு திரில்லர் படமாகவும் கோ 2 இருக்கும் என்று கூறியுள்ளார். கோ 2 படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் மோஷன் போஸ்டர்கள் ஏற்கனவே வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.