Don't Miss!
- Automobiles தேர்தல் வர நேரத்துல பிரம்மாஸ்திரத்தை கையில எடுத்துட்டாங்க! சுங்கசாவடிகளை தூக்க முடிவு பண்ணிட்டாங்க!
- News தமிழ்நாட்டில் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு சம்பளம் எவ்வளவு.. இவ்வளவு சலுகைகளா? ஆச்சர்யமான தகவல்கள்
- Technology iPhone-க்கு நெத்தி அடி.. வயர்லெஸ் MagCharge உடன் வந்த முதல் ஆண்ட்ராய்டு போன்.. Samsung இல்லை OnePlus இல்லை..
- Sports ஆர்சிபி வேண்டாம் என ஒதுக்கிய 3 வீரர்கள்.. ஐபிஎல் 2024 சீசனில் பட்டையை கிளப்பும் அதிசயம்
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
- Lifestyle 1000 ஆண்டுகளுக்கு முன் ஒரே இரவில் சர்ஜிக்கல் தாக்குதல் நடத்தி ஒரு நாட்டையே வென்ற தமிழ் அரசர்... யார் தெரியுமா?
- Travel 2050 வருஷம் வருறதுக்குள்ள உலகத்துல உள்ள இந்த அழகான இடங்கள் எல்லாம் கடலுக்குள்ள போயிடுமாம்!
- Education ஆஸ்திரேலியாவில் உயர்கல்வி பயில இந்திய மாணவர்கள் விரும்புவது ஏன்?
கோ 2 படத்தில்... அப்துல் கலாமின் 'உன்னை மாற்றினால்'!
சென்னை: ஆர்.எஸ்.இன்போடேயின்மென்ட் நிறுவனம் தற்போது ஒரே நேரத்தில் 3 படங்களைத் தயாரித்து வருகிறது, 3 படங்களிலும் நாயகனாக பாபி சிம்ஹா நடித்து வருகிறார். 3 படங்களில் கோ 2 படத்தின் சிங்கிள் டிராக் ஆகஸ்ட் 15 ம் தேதியில் வெளியாகிறது.
இந்தப் பாடலை மறைந்த மக்களின் ஜனாதிபதி அப்துல்கலாம் அவர்களுக்கு மரியாதை செலுத்தும் விதமாக அப்துல்கலாமின் வார்த்தைகளைக் கொண்டே, உருவாக்கியிருக்கிறார் பாடலாசிரியர் நா.முத்துக்குமார்.
கோ 2 படத்தின் டைட்டில் பாடலாக உருவாகியிருக்கும் இந்தப் பாடல் உன்னை மாற்றினால் என்று தொடங்குகிறது, டைட்டில் பாடல் மட்டுமல்லாது முழுப் படத்திற்குமான பின்னணி இசையாகவும் இந்தப் பாடலின் இசையானது இடம்பெறுகிறது.
கோ 2 படத்திற்கு இசையமைத்து இருக்கிறார் இசையமைப்பாளர் லியோன் ஜேம்ஸ். பாடகர் சிவராமகிருஷ்ணன் பாடியிருக்கும் இந்தப் பாடல் ஆகம் பேன்ட்(Agam Band) என்ற முறையில் இசையமைக்கப் பட்டிருக்கிறது.
பாபி சிம்ஹா, நிக்கி கல்ராணி மற்றும் பிரகாஷ் ராஜ் நடிப்பில் வளர்ந்து வரும் கோ 2 படத்தின் படப்பிடிப்பு விரைவில் முடிவடைய இருக்கிறது.
படத்தில் இடம்பெறும் இந்தப் பாடலிற்கும் படத்திற்கும் துளியும் சம்பந்தமில்லை என்றாலும் அப்துல்கலாம் அவர்களுக்கு மரியாதை செலுத்தும் விதமாக இந்தப் பாடலை உருவாக்கி இருக்கின்றனர் இயக்குநர் சரத் உள்ளிட்ட படப்பிடிப்புக் குழுவினர்.