Don't Miss!
- Automobiles சீன நிறுவனம் கேட்ட முக்கிய சான்றை வழங்கிய இந்தியா! மத்த நாடுகள வளச்சு போட்டதபோல இந்தியாவையும் வளச்சுபோட போகுது
- Lifestyle Today Rasi Palan 19 April 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் நிலுவையிலுள்ள பணிகளை முடிக்க முயற்சிப்பது நல்லது...
- News ‛‛70 லட்சம் ஓட்டு''.. கடைசி வரை மவுனம் கலைக்காத விஜய்! இன்று நடக்கப்போகும் மாற்றம்? யாருக்கு லாபம்?
- Sports IPL Classics - 87 ரன்களில் ஆல் அவுட்டான மும்பை.. பஞ்சாப் அணியில் பிரவீன்குமார் அபார பவுலிங்
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Technology வெயிட்டிங் ஓவர்.. Sony கேமரா.. 256ஜிபி மெமரி.. வருகிறது புதிய Vivo 5ஜி போன்.. எந்த மாடல்?
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
கோச்சடையான் படம் தள்ளிப் போனதன் உண்மையான காரணம் இது தான்!
கோச்சடையான் படம் வெளியாகாமல் போனதற்கு இன்னொரு முக்கிய காரணமாக படத்தின் இந்தி மற்றும் தெலுங்கு பதிப்புகளுக்கு சென்சார் சான்று கிடைக்கவில்லை என்பதைக் காரணமாகக் கூறியுள்ளனர்.
ரஜினி மூன்று வேடங்களில் தோன்றும் கோச்சடையான் படம் தமிழ், தெலுங்கு, இந்தி, போஜ்புரி உள்பட 6 மொழிகளில் வெளியாகிறது.
அனைத்து மொழிகளிலும் 2 டி மற்றும் 3டி வடிவங்களில் இந்தப் படம் தயாராகியுள்ளது. ஒவ்வொன்றுக்கும் தனித்தனியாக சென்சார் சான்று பெற வேண்டும். 2டிக்கு தனியாகவும், 3டிக்கு தனியாகவும் சென்சார் சான்று பெற வேண்டியுள்ளது.
இதில் இந்தி மற்றும் தெலுங்கு மொழிகளில் வெளியாகும் கோச்சடையானின் 3 டி வடிவத்துக்கு இன்னும் சான்றிதழ் கிடைக்கவில்லையாம்.
இதைத் தான் 'தொழில்நுட்ப காரணம்' காரணமாக படம் ரிலீஸ் தாமதம் என்கிறது தயாரிப்பு தரப்பு.
இந்த இரண்டு மொழிகளிலுமே தமிழை விட அதிக அளவிலான அரங்குகளில் கோச்சடையான் வெளியாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.