இரண்டாம் கட்டப் படப்பிடிப்புக்காக கேரளா செல்லும கோச்சடையான் குழு!
அடுத்த கட்டப் படப்பிடிப்புக்காக கேரளா செல்கிறது சூப்பர் ஸ்டார் ரஜினியின் கோச்சடையான் குழு.
முதல் கட்டமாக லண்டனில் மூன்று வாரங்கள் தங்கி படப்பிடிப்பு நடத்தினர். இதில் ரஜினி, சரத்குமார், ஜாக்கி ஷெராப், நாசர், ஷோபனா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இதற்காக கேரளாவில் படப்பிடிப்பு நடக்கும் இடங்களை தேர்வு செய்துள்ளனர் கோச்சடையான் குழுவினர். பிரமாண்ட அரண்மனை செட்கள் அமைத்து படப்பிடிப்பு நடத்த உள்ளார்களாம். இதில் ரஜினி, தீபிகா படுகோன், சரத்குமார் சம்பந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப்படும் என தெரிகிறது.
இந்த மாதம் படத்தின் தொழில்நுட்ப ரீதியிலான பணிகள் சென்னையில் நடக்கும் என்றும், மகள் திருமணம் முடிந்ததும் இரண்டாம் கட்டப் படப்பிடிப்பில் ரவிக்குமார் கலந்து கொள்வார் என்றும் கூறப்படுகிறது.
ஏஆர் ரஹ்மான் இசையமைப்பில் மொத்தம் 5 பாடல்கள் இந்தப் படத்தில் இடம்பெறுகின்றன. அவற்றில் நான்கு பாடல்களை இப்போது முடித்துக் கொடுத்துவிட்டாராம் இசைப் புயல்!


Click it and Unblock the Notifications












