Don't Miss!
- News அரசியல் வாழ்க்கையே ஓவர்? தாமரையை நம்பி போய் சேற்றில் சிக்கிட்டாரே.. இளம் தலைக்கு பாஜக வைத்த ஆப்பு
- Finance என்னப்பா டிரம்ப்.. பேசுறது ஒன்னு செய்யுறது ஒன்னா.. ட்ரூத் சோசியல் நிறுவனம் செய்த வேலைய பாருங்க..!
- Automobiles ஹீரோ நிறுவனம் அமைதியாக பல தரமான சம்பவங்களை செஞ்சிட்டு வருகிறது!! டாப்-10 லிஸ்ட்டில் 4 இடங்களில் ஹீரோ 2-வீலர்ஸ்
- Lifestyle சாணக்கிய நீதி படி திருமணமான ஆண்கள் இந்த தவறுகளை ஒருபோதும் பண்ணக்கூடாதாம்... இல்லனா அவங்க வாழ்க்கை அவ்வளவுதான்!
- Sports சுற்றி சிஎஸ்கே ரசிகர்கள்.. நடுவில் ஒற்றை ஆளாய் போட்ட ஆட்டம்.. சேப்பாக்கத்தில் லக்னோ ரசிகர் சம்பவம்!
- Technology வெளுக்குது ஆர்டர்.. ரூ.15249 பட்ஜெட்ல AMOLED டிஸ்பிளே.. 45W சூப்பர்வூக்.. 5000mAh பேட்டரி.. எந்த மாடல்?
- Education புதுச்சேரியில் பிஎஸ்சி நர்சிங் படிப்பதற்கு நுழைவுத் தேர்வு...!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
நடிகை கடத்தல் விவகாரம்... திலீப் கோரிக்கை, கோர்ட் நிராகரிப்பு !
கொச்சி: நடிகை கடத்தப்பட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாகக் கூறப்படும் வழக்கில், நடிகர் திலீப்புக்கு டிஜிட்டல் ஆதாரங்களைத் தர முடியாது என்று கொச்சி விசாரணை நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.
தமிழ், தெலுங்கு, கன்னட படங்களில் நடித்து வந்த பிரபல நடிகையை கடத்தி பாலியல் வன்கொடுமை செய்ததாகக் கூறப்படும் வழக்கில், மலையாள ஹீரோ திலீப் கைது செய்யப்பட்டார். 85 நாள் சிறைவாசத்துக்குப் பின் ஜாமினில் விடுவிக்கப்பட்டார். இந்த வழக்கில், நடிகை கடத்தித் தாக்கப்பட்ட காட்சிகள் பதிவாகியதாகக் கூறப்படும் மெமரி கார்ட் முக்கிய ஆதாரமாகக் கருதப்படுகிறது.
அதன் நகலை தனக்கு வழங்கக் கோரி உச்சநீதிமன்றத்தில் திலீப் வழக்குத் தொடர்ந்தார். மெமரி கார்டில் உள்ளவற்றை நடிகர் திலீப் பார்க்க அனுமதி வழங்கிய உச்சநீதிமன்றம், அதன் நகலை தர மறுத்துவிட்டது.
மைக்கேல் ராயப்பனிடம் ரூ. 1 கோடி மான நஷ்ட ஈடு கேட்ட வழக்கு.. சிம்புவுக்கு ஹைகோர்ட் அறிவுறுத்தல்!
இந்நிலையில் கொச்சியில் உள்ள விசாரணை நீதிமன்றத்தில், சாட்சிகளிடம் கைப்பற்றப்பட்ட லேப்டாப் மற்றும் செல்போன் உள்ளிட்ட டிஜிட்டல் ஆதாரங்களை தர வேண்டும் என்று நடிகர் திலீப் வழக்குத் தாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், உச்சநீதிமன்றத் தீர்ப்பைக் காரணம் காட்டி, அந்த ஆதாரங்களைத் தர மறுத்து, இன்று உத்தரவிட்டுள்ளது.