Don't Miss!
- Technology நீ படிச்ச ஸ்கூல்ல நான் ஹெட் மாஸ்டர் டா.. ChatGPT-க்கு செக் வச்ச Google.. இனி மொபைல் யூசர்கள் Gemini பக்கம்!
- News மயிலாடுதுறையில் ஆச்சரியம்.. அந்த "வைக்கோல் மூட்டை".. ஆஹா, வைத்தீஸ்வரன் கோயில் தையல் நாயகி.. பரவசம்
- Automobiles கியா களமிறக்கும் புது எலெக்ட்ரிக் காரின் விலை இவ்ளோதானா! பெட்டி கடைல கடலை மிட்டாய் விக்கற மாதிரி விக்க போகுது!
- Lifestyle உங்கள் கால் நகங்களை அழகாக மாற்ற அற்புதமான டிப்ஸ்..
- Finance இனி பீட்சா முதல் பெப்சி வரை இவர்கள் கையில் தான்..!! வாரிசு கைக்கு மாறும் ஆர் ஜே கார்ப்பரேஷன்..!
- Sports சிஎஸ்கே அணிக்கு சிக்கல்.. பிளே-ஆஃப் வாய்ப்புக்கு ஆப்பு வைத்த 2 அணிகள்.. இனி என்ன செய்ய வேண்டும்?
- Education மாணவர்களுக்கோர் ஓர் நற்செய்தி.. நான்கு ஆண்டு இளங்கலை பட்டப்படிப்பு படித்தவர்கள் பிஎச்.டி.யில் சேர
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
'நல்ல படம் எடுத்தாலும் தியேட்டர் கிடைக்க மாட்டேங்குதே!'- கோடை மழை இயக்குநரின் வருத்தம்
நல்ல படம் எடுக்கலன்னு பல பேர் வருத்தப்படறாங்க. ஆனா உண்மையிலேயே நல்ல படம் எடுத்தா யார் சார் தியேட்டர் தராங்க? என்று வருத்தமும் கோபமும் பொங்க கேட்கிறார் கதிரவன்.
சமீபத்தில் வெளியாகி பலரது பாராட்டுகளையும் பெற்றுவரும் கோடை மழை படத்தின் இயக்குநர் இவர்.
நடிகை ப்ரியங்கா - புதுமுகம் கண்ணன் நடித்திருந்த இந்தப் படம் நெல்லைச் சீமையின் சங்கரன்கோவில் பகுதியை மையமாக வைத்து எடுக்கப்பட்டது. இயக்குநரின் சொந்த ஊர் சங்கரன்கோவில்தான்.
'அப்படியே எண்பதுகளில் பாரதிராஜா படம் பார்த்த உணர்வு' என படம் பார்த்த பலரும் பாராட்டி வருவது இந்தப் படத்தின் வெற்றி.
படத்தை எடுத்துவிட்டாலும், அத்தனை சுலபத்தில் வெளியிட முடியவில்லையாம். அந்த வருத்தத்தை நம்மிடம் இப்படிப் பகிர்ந்து கொண்டார் கதிரவன்:
"நல்ல படம் வருவதில்லையே என்று பலரும் போகிற போக்கில் சொல்லிவிட்டுப் போகிறார்கள். ஆனால் நல்ல படம் எடுத்தா மட்டும் ஓடிவிடுகிறதா... ஆனால் குப்பையான படமாக இருந்தாலும் வெளியிடுகிற பேனரை வச்சித்தான் தியேட்டரே தராங்க. இங்கே தியேட்டர்களை மொத்தமாக சில நிறுவனங்கள் மடக்கி வச்சிருக்காங்க. அவங்களை மீறி தியேட்டர்களில் என்னைப் போன்றவர்களின் படங்களை வெளியிட முடிவதில்லை.
படங்களை வெளியிட்டுத் தருகிறோம் என்ற பெயரில் பெரும் பணம் கேட்கிறார்கள் வெளியீட்டு நிறுவனங்கள். சொல்லப்போனால் தங்கள் நிறுவன பேனர்களை வாடகைக்கு விடுகிறார்கள். இவர்களின் பிடியில் இருக்கும்வரை தமிழ் சினிமா வியாபாரம் இப்படித்தான் இருக்கும்.
கோடை மழை படத்தை ஏழு மாதங்களுக்கு முன்பே முடித்துவிட்டேன். பல நிறுவனங்களிடம், தியேட்டர்காரர்களிடம் போராடிப் பார்த்தேன். ஆனால் ரிலீஸ் பண்ண முடியவில்லை. கடைசியில் சொந்தப் பணத்தில் நண்பர்களுடன் சேர்ந்துதான் ரிலீஸ் செய்தேன். ஆனால் சரியான காட்சி நேரம் தரவில்லை. சில தியேட்டர்கள் ஓரிரு நாட்கள் கூட பொறுமையாக இல்லாமல் படத்தைத் தூக்கிவிட்டனர். அப்புறம் எப்படி படங்கள் ஓடும்?
ஒரு கண்ணியமான, மண் சார்ந்த அர்த்தமுள்ள பொழுதுபோக்குப் படம் தந்திருக்கோம். ஆனா இவ்வளவு உழைப்பையும் இதே சினிமா உலகம்தான் கேலிக்கூத்தாக்குது.. நாங்க என்ன செய்யறது?" என்றார் ஆவேசமாக.
மூச்சுக்கு முன்னூறு தடவை சிறுபடத் தயாரிப்பாளர்கள் நலன் என்று சொல்லிக் கொண்டிருக்கிற சங்கங்கள் என்னதான் செய்கின்றன?
-
13 வருடங்களாக காதலித்துவரும் கீர்த்தி சுரேஷ்?.. இதுக்கு இல்லையா சார் ஒரு எண்டு.. ரசிகர்கள் கேள்வி
-
Baakiyalakshmi: கலர் கலராக சட்டைகள் போட்டு போட்டோஸ்.. பழனிச்சாமியின் புகைப்படங்களை பார்த்த பாக்கியா!
-
வேலுவுடன் கூட்டணி சேர்ந்த மனோகரி.. சிக்கலில் சிக்கும் சுடர்..நினைத்தேன் வந்தாய் இன்றைய எபிசோட்!