Don't Miss!
- News மதுரை சித்திரை திருவிழா சனாதன பெருவிழா.. பாஜக பொதுச் செயலாளர் ராம ஸ்ரீனிவாசன் ஒரே போடு
- Technology Dish TV டிடிஎச் சேவையில் திடீர் மாற்றம்.. ரூ.200-ஐ ரெடியா வச்சிக்கோங்க.. இனி எல்லாமே இந்த Smart Plus தான்!
- Finance 6 மாதங்களில் 73% வளர்ச்சி.. ஜியோ ஃபைனான்சியல் சர்வீசஸ் பங்குகள் அள்ளிக் கொடுத்த லாபம்..!
- Lifestyle உங்க பற்கள் வலிமையாகவும், கிருமிகள் இல்லாததாகவும் இருக்கணுமா? இதில் ஒன்றை தினமும் சாப்பிடுங்க...!
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
- Automobiles அரபு நாடுகளுக்கு ஆப்பு வைக்கும் இந்தியா... அவங்க பொழப்புல மொத்தமா மண்ணை அள்ளி போட்டுட்டாங்க...
- Sports IPL 2024 : இந்த அவமானம் தேவையா.. ஆர்சிபி அணியிடம் அதுமட்டும் நிச்சயம் கிடையாது.. வாசிம் அக்ரம்!
கோடியில் ஒருவன் 25வது நாள் வெற்றி கொண்டாட்டத்தை கேக் வெட்டி கொண்டாடிய படக்குழு!
சென்னை : மெட்ரோ பட இயக்குனர் ஆனந்த கிருஷ்ணன் இயக்கத்தில் வெளியாகியுள்ள திரைப்படம் கோடியில் ஒருவன்.
விஜய் ஆண்டனி இதில் ஹீரோவாக நடித்திருக்க ஆத்மிகா இப்படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார்.
இன்று பிறந்தநாள் கொண்டாடும் பூஜா ஹெக்டே... அம்மணிக்கு இப்ப என்ன வயசு தெரியுமா?
அதிரடியான அரசியல் ஆக்சன் திரைப்படமாக வெளியான கோடியில் ஒருவன் இப்பொழுது 25வது நாளை வெற்றிகரமாக கடந்ததையடுத்து படக்குழு கேக் வெட்டி கொண்டாடியுள்ளது.
அரசியல் கலந்த த்ரில்லர் திரைப்படமாக
நடிகர் விஜய் ஆண்டனியின் திரைப்படங்கள் என்றாலே படம் வித்தியாசமாகவும் அதேசமயம் நன்றாகத்தான் இருக்கும் என்ற மினிமம் கேரன்டியுடன் வலம் வரும் சூழலில் முதல் முறையாக இயக்குனர் ஆனந்த கிருஷ்ணன் இயக்கத்தில் நடித்திருந்த திரைப்படம் கோடியில் ஒருவன். மெட்ரோ படத்தை இயக்கி வெற்றி இயக்குனராக தமிழ் சினிமாவில் பிரபலமடைந்த ஆனந்த கிருஷ்ணன் அரசியல் கலந்த த்ரில்லர் திரைப்படமாக கோடியில் ஒருவன் படத்தை இயக்கியிருந்தார்.
விஜய் ஆண்டனி ட்யூசன் மாஸ்டர்
முழுக்க முழுக்க சென்னையில் முடிக்கப்பட்ட கோடியில் ஒருவன் திரைப்படத்தில் விஜய் ஆண்டனி ட்யூசன் மாஸ்டராக நடித்துள்ளார். கடந்த செப்டம்பர் 17ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான இந்த திரைப்படம் வெளியான நாள் முதலே ரசிகர்கள் மத்தியில் பாசிட்டிவான விமர்சனங்களை பெற்று வருகிறது. 2021ல் வெளியான திரைப்படங்களிலேயே கோடியில் ஒருவன் அதிக வசூலை வசூலித்ததாக கூறப்பட்டது.
ஆரவாரமில்லாத நடிப்பு
ஆக்ஷன், அரசியல், காதல்,காமெடி, திரில்லர் என அனைத்து அம்சங்களும் கொண்ட கோடியில் ஒருவன் திரைப்படத்தை ரசிகர்கள் கொண்டாட இப்பொழுது வெற்றிகரமாக இப்படம் 25வது நாளை எட்டியுள்ளது. விஜய் ஆண்டனியின் ஆரவாரமில்லாத நடிப்பு இந்த படத்தின் வெற்றிக்கு மிகப் பெரிய பக்கபலமாக இருக்க ஆனந்த கிருஷ்ணன் இப்படத்திற்கு வேறு விதமாக திரைக்கதையை அமைத்து மிரட்டி இருந்தார். விஜய் ஆண்டனி இப்படத்திற்கு படத்தொகுப்பும் செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
25-ஆவது நாள் கொண்டாட்டம்
அனைத்து தரப்பு மக்களாலும் கொண்டாடப்பட்ட கோடியில் ஒருவன் இப்பொழுது 25-ஆவது நாளை எட்டியுள்ளது. இதனை கொண்டாடும் விதத்தில் படக்குழு கேக் வெட்டி செலிபிரேட் செய்துள்ளது. விஜய் ஆண்டனி, அனந்தகிருஷ்ணன், தனஞ்ஜெயன் என பலரும் இணைந்து கேக் வெட்டி கொண்டாடிய புகைப்படங்கள் இப்பொழுது சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வைரலாகி வருகிறது. கோடியில் ஒருவன் வெற்றிக்கு பிறகு விஜய் ஆண்டனிக்கு அக்னி சிறகுகள், காக்கி, பிச்சைக்காரன் 2 உள்ளிட்ட படங்கள் வெளியாக உள்ளது. கோடியில் ஒருவன் வெற்றிக்குப் பிறகு விஜய் ஆண்டனி ஆனந்தகிருஷ்ணன் கூட்டணி மீண்டும் புதிய திரைப்படம் ஒன்றில் இணைய இருப்பதாக கூறப்படுகிறது.