Don't Miss!
- News லோக்சபா தேர்தலில் சொதப்பும் பாஜக? 5 நாளாக பிரசாரம் செய்யாத பிரதமர் மோடி.. என்ன காரணம்? பின்னணி
- Technology போட்டு தாக்கு.. அடுத்த 2 வாரத்துக்கு இதான் பெஸ்ட் பிளான்.. தினமும் 3GB Jio டேட்டா.. IPL பார்க்க இதுவே பெஸ்ட்!
- Sports தோனி இனி பேட்டிங் ஆடவே மாட்டார்? சிஎஸ்கே எடுத்த முடிவு.. பெரும் ஏமாற்றம்.. காரணம் இதுதான்
- Travel தமிழ்நாட்டுக்குள் இருக்கிற தாஜ்மஹாலுக்கு நீங்க போய் இருக்கீங்களா – தாய்க்காக தாஜ்மஹால் கட்டிய மகன்!
- Lifestyle இந்தியாவிலிருந்து ஆங்கிலேயர்கள் திருடிட்டு போன விலைமதிப்பில்லாத பொக்கிஷங்கள்... இதோட மதிப்பு என்ன தெரியுமா?
- Automobiles காருக்கு இன்சூரன்ஸ் எடுக்கும் போது இதெல்லாம் செக் பண்ணலேன்னா காசெல்லாம் வீணா போயிடும்!
- Finance தேர்தலில் போட்டியிட பணமில்லாத நிர்மலா சீதாராமன் சொத்து மதிப்பு என்ன தெரியுமா..?
- Education சென்னையின் பெருமைமிகு கல்லூரிகளில் ஒன்றாகத் திகழும் டி.ஜி.வைஷ்ணவ் கல்லூரி...!!
கோடியில் ஒருவன் 25வது நாள் வெற்றி கொண்டாட்டத்தை கேக் வெட்டி கொண்டாடிய படக்குழு!
சென்னை : மெட்ரோ பட இயக்குனர் ஆனந்த கிருஷ்ணன் இயக்கத்தில் வெளியாகியுள்ள திரைப்படம் கோடியில் ஒருவன்.
விஜய் ஆண்டனி இதில் ஹீரோவாக நடித்திருக்க ஆத்மிகா இப்படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார்.
இன்று பிறந்தநாள் கொண்டாடும் பூஜா ஹெக்டே... அம்மணிக்கு இப்ப என்ன வயசு தெரியுமா?
அதிரடியான அரசியல் ஆக்சன் திரைப்படமாக வெளியான கோடியில் ஒருவன் இப்பொழுது 25வது நாளை வெற்றிகரமாக கடந்ததையடுத்து படக்குழு கேக் வெட்டி கொண்டாடியுள்ளது.
அரசியல் கலந்த த்ரில்லர் திரைப்படமாக
நடிகர் விஜய் ஆண்டனியின் திரைப்படங்கள் என்றாலே படம் வித்தியாசமாகவும் அதேசமயம் நன்றாகத்தான் இருக்கும் என்ற மினிமம் கேரன்டியுடன் வலம் வரும் சூழலில் முதல் முறையாக இயக்குனர் ஆனந்த கிருஷ்ணன் இயக்கத்தில் நடித்திருந்த திரைப்படம் கோடியில் ஒருவன். மெட்ரோ படத்தை இயக்கி வெற்றி இயக்குனராக தமிழ் சினிமாவில் பிரபலமடைந்த ஆனந்த கிருஷ்ணன் அரசியல் கலந்த த்ரில்லர் திரைப்படமாக கோடியில் ஒருவன் படத்தை இயக்கியிருந்தார்.
விஜய் ஆண்டனி ட்யூசன் மாஸ்டர்
முழுக்க முழுக்க சென்னையில் முடிக்கப்பட்ட கோடியில் ஒருவன் திரைப்படத்தில் விஜய் ஆண்டனி ட்யூசன் மாஸ்டராக நடித்துள்ளார். கடந்த செப்டம்பர் 17ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான இந்த திரைப்படம் வெளியான நாள் முதலே ரசிகர்கள் மத்தியில் பாசிட்டிவான விமர்சனங்களை பெற்று வருகிறது. 2021ல் வெளியான திரைப்படங்களிலேயே கோடியில் ஒருவன் அதிக வசூலை வசூலித்ததாக கூறப்பட்டது.
ஆரவாரமில்லாத நடிப்பு
ஆக்ஷன், அரசியல், காதல்,காமெடி, திரில்லர் என அனைத்து அம்சங்களும் கொண்ட கோடியில் ஒருவன் திரைப்படத்தை ரசிகர்கள் கொண்டாட இப்பொழுது வெற்றிகரமாக இப்படம் 25வது நாளை எட்டியுள்ளது. விஜய் ஆண்டனியின் ஆரவாரமில்லாத நடிப்பு இந்த படத்தின் வெற்றிக்கு மிகப் பெரிய பக்கபலமாக இருக்க ஆனந்த கிருஷ்ணன் இப்படத்திற்கு வேறு விதமாக திரைக்கதையை அமைத்து மிரட்டி இருந்தார். விஜய் ஆண்டனி இப்படத்திற்கு படத்தொகுப்பும் செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
25-ஆவது நாள் கொண்டாட்டம்
அனைத்து தரப்பு மக்களாலும் கொண்டாடப்பட்ட கோடியில் ஒருவன் இப்பொழுது 25-ஆவது நாளை எட்டியுள்ளது. இதனை கொண்டாடும் விதத்தில் படக்குழு கேக் வெட்டி செலிபிரேட் செய்துள்ளது. விஜய் ஆண்டனி, அனந்தகிருஷ்ணன், தனஞ்ஜெயன் என பலரும் இணைந்து கேக் வெட்டி கொண்டாடிய புகைப்படங்கள் இப்பொழுது சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வைரலாகி வருகிறது. கோடியில் ஒருவன் வெற்றிக்கு பிறகு விஜய் ஆண்டனிக்கு அக்னி சிறகுகள், காக்கி, பிச்சைக்காரன் 2 உள்ளிட்ட படங்கள் வெளியாக உள்ளது. கோடியில் ஒருவன் வெற்றிக்குப் பிறகு விஜய் ஆண்டனி ஆனந்தகிருஷ்ணன் கூட்டணி மீண்டும் புதிய திரைப்படம் ஒன்றில் இணைய இருப்பதாக கூறப்படுகிறது.