பிரேக் அப் வரை போன கோஹ்லி-அனுஷ்கா காதல் திருமணத்தில் முடிந்தது எப்படி?
Recommended Video

மும்பை: அனுஷ்கா விஷயத்தில் கிரிக்கெட் வீரர் கோஹ்லி நினைத்ததை சாதித்து விட்டார்.
கிரிக்கெட் வீரர் விராட் கோஹ்லியும், பாலிவுட் நடிகை அனுஷ்காவும் இத்தாலியில் உள்ள டஸ்கனி நகரில் நேற்று திருமணம் செய்து கொண்டனர். சமூக வலைதளங்களில் எல்லாம் அது பற்றி தான் பேச்சு.
ஃபேஸ்புக், ட்விட்டரில் திரும்பும் பக்கம் எல்லாம் அவர்களின் திருமண புகைப்படங்கள் தான்.

பிரேக்கப்
முன்னதாக கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் கோஹ்லி, அனுஷ்கா இடையே பிரச்சனை ஏற்பட்டு பிரிந்தனர். சமூக வலைதளத்தில் அனுஷ்காவை ஃபாலோ செய்வதை கூட நிறுத்தினார் கோஹ்லி.

திருமணம்
கோஹ்லி அனுஷ்காவை திருமணம் செய்ய விரும்பினார். அனுஷ்காவோ தனது கெரியர் தான் முக்கியம், திருமணம் வேண்டாம் என்றார். இதனால் பிரச்சனை ஏற்பட்டு பிரிந்தனர்.

தூது
அனுஷ்காவை பிரிந்தாலும் கோஹ்லியால் அவரை மறக்க முடியவில்லை. இதையடுத்து அனுஷ்காவின் சகோதரரை அணுகி அவர் மூலம் தூது மேல் தூது விட்டு காதலை புதுப்பித்தார்.

சம்மதம்
கோஹ்லி தன்னை அதிகம் காதலிப்பதை உணர்ந்த அனுஷ்கா ஒரு வழியாக திருமணத்திற்கு சம்மதித்தார். விட்டால் மனம் மாறிவிடுவார் என்று சம்மதம் கிடைத்த கையோடு திருமணம் செய்துவிட்டார் கோஹ்லி.


Click it and Unblock the Notifications











