Don't Miss!
- Finance 7.50 லட்சம் கோடி ரூபாயை நிதி திரட்டும் மத்திய அரசு.. எதற்காக தெரியுமா..?
- Lifestyle 1000 ஆண்டுகளுக்கு முன் ஒரே இரவில் சர்ஜிக்கல் தாக்குதல் நடத்தி ஒரு நாட்டையே வென்ற தமிழ் அரசர்... யார் தெரியுமா?
- News "மகளிர் உரிமை தொகை வரல.." அமைச்சரை பேச விடாமல் நிறுத்திய பெண்.. மேடையில் அடுத்து நடந்த பரபர சம்பவம்
- Automobiles அடி மாட்டு விலைக்கு எலெக்ட்ரிக் காரை களமிறக்கும் மாருதி! பெட்டி கடைல வெத்தல, பாக்கு விக்கற மாதிரி விக்க போகுது
- Sports ரோகித்.. ரோகித் என கத்திய ரசிகர்கள்.. ஓங்கி ஒரு அடி விட்ட ஹர்திக் பாண்டியா - வீடியோ
- Technology குசும்பன்யா இந்த Samsung.. மாஸ் 5G போனை ரூ.10,000 விலையில் விற்பனை.. எந்த மாடல்? எப்போ வாங்கலாம்?
- Travel 2050 வருஷம் வருறதுக்குள்ள உலகத்துல உள்ள இந்த அழகான இடங்கள் எல்லாம் கடலுக்குள்ள போயிடுமாம்!
- Education ஆஸ்திரேலியாவில் உயர்கல்வி பயில இந்திய மாணவர்கள் விரும்புவது ஏன்?
எங்க ஹீரோ நீங்க தான் அபிநந்தன், சீக்கிரம் திரும்பி வாங்க: சூர்யா, விஷால் உருக்கம்
Recommended Video
சென்னை: பாகிஸ்தானியர்களிடம் சிக்கியுள்ள இந்திய விமானப்படை விமானி அபிநந்தன் பத்திரமாக நாடு திரும்ப வேண்டும் என்று பிரார்த்தனை செய்வதாக திரையுலக பிரபலங்கள் தெரிவித்துள்ளனர்.
இந்திய விமானப்படையை சேர்ந்த விமானி அபிநந்தன் பாகிஸ்தானியர்களிடம் நேற்று சிக்கினார். அவர் தங்கள் வசம் உள்ளதாக பாகிஸ்தான் தெரிவித்துள்ளது.
பாகிஸ்தானியர்களிடம் சிக்கினாலும் அவர்கள் கேட்ட அனைத்து கேள்விகளுக்கும் பதில் அளிக்க மறுத்துவிட்டார் அபிநந்தன். அவரின் வீரத்தை பார்த்து இந்தியர்கள் பெருமைப்படுகிறார்கள். அவர் பத்திரமாக நாடு திரும்ப அனைத்து இந்தியர்களும் பிரார்த்தனை செய்து கொண்டிருக்கிறார்கள்.
|
சூர்யா
அபிநந்தனை நினைத்து பெருமைப்படுவதாகவும், அவர் பத்திரமாக நாடு திரும்ப பிரார்த்தனை செய்வதாகவும் ட்விட்டரில் தெரிவித்துள்ளார் சூர்யா.
|
விவேக்
எப்பாடு பட்டாவது விமானப்படை வீரர் அபிநந்தனை பாதுகாப்பாக மீட்டு வரல் வேண்டும் என்பதே நம் இறைஞ்சல். POW எனப்படும் போர் வீரனை கண்ணியமாக நடத்தவேண்டும் என்பது விதி. ஆனால் அங்கு அது நடக்காதோ என்பதே நம் அச்சம் என்று ட்வீட்டியுள்ளார் விவேக்.
|
விஷால்
என் ஹீரோ அபிநந்தனுக்கு சல்யூட். அவர் வீரம், நம்பிக்கையின் முன்னுதாரணம். இந்திய விமானப்படை விமானிகள் அனைவரையும் இருகரம் கூப்பி வணங்குகிறேன். நம் நாட்டை இரவு, பகலாக காப்பதற்கு நன்றி என்று தெரிவித்துள்ளார் விஷால்.
|
குஷ்பு
பாகிஸ்தானிடம் சிக்கிய போதிலும் அமைதியாகவும், வீரமாகவும் நடந்து கொண்டிருக்கும் அபிநந்தனை பார்த்து குஷ்பு பெருமைப்பட்டுள்ளார். அவர் மட்டும் அல்ல நாடே பெருமைப்படுகிறது.
LKG: சபாஷ் ஆர்ஜே பாலாஜி... எல்கேஜி பட லாபத்தை வைத்து என்ன செய்யப் போகிறார் பாருங்க!