Don't Miss!
- News சிவில் சர்வீஸ் தேர்வில் 9வது முயற்சியில் தூய்மை பணியாளர் மகன் வெற்றி.. கலங்க வைத்த ரியல் ஸ்டோரி
- Lifestyle எப்பவும் ஒரே மாதிரி சட்னி செய்யாம.. ஒருமுறை தீயில் சுட்ட தக்காளி சட்னியை செய்யுங்க.. டேஸ்ட் சும்மா அள்ளும்..
- Sports ரூ.14 கோடி வீரருக்கு ஆப்பு.. லக்னோ பிட்சால் சிஎஸ்கே அணியில் நடக்கப்போகும் மாற்றம்.. ருதுராஜ் முடிவு!
- Technology ரூ.10,000 குள்ள 2.. ரூ.20,000 குள்ள 2.. Redmi-யின் 5 முரட்டு போன்கள் மீது.. வெயிட்டா ரூ.2000 டிஸ்கவுண்ட்!
- Automobiles உலகம் முழுவதும் ராயல் என்ஃபீல்டு பைக்கை வாடகைக்கு எடுக்கலாம்! எப்படி தெரியுமா?
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
சிவா மாதிரியே மேடையில் அழுத சரத், டி.ஆர்., ஜெயம் ரவி, பூர்ணா
சென்னை: சிவகார்த்திகேயன் மட்டும் அல்ல பல கோலிவுட் பிரபலங்கள் பிறர் முன்பு அழுதுள்ளனர்.
ரெமோ சக்சஸ் மீட்டில் கலந்து கொண்ட சிவகார்த்திகேயன் தன்னை சிலர் மிரட்டுவதாகக் கூறி மேடையில் அழுதார். அவர் அழுததும், அழுதார் கோலிவுட்டில் அது தான் ஹாட் டாப்பிக்.
இந்நிலையில் மக்கள் முன்பு கோலிவுட் பிரபலங்கள் யார், யார் எல்லாம் அழுதார்கள் என்று பார்க்கலாம்.
சிவா
ரெமோ சக்சஸ் மீட்டில் சிவகார்த்திகேயன் அழுது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளார். சிலர் தன்னை மிரட்டுவதாகக் கூறி அழுதார். தன்னை நிம்மதியாக வேலை செய்ய விடுமாறு கேட்டுக் கொண்டார்.
பூர்ணா
சவரக்கத்தி படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட நடிகை பூர்ணா மகிழ்ச்சியில் அழுதார். வாய்ப்புகள் கிடைக்காமல் சினிமாவுக்கு குட்பை சொல்ல முடிவு எடுத்த நேரத்தில் கிடைத்த வாய்ப்பை நினைத்து அவர் அழுதார்.
சரத்குமார்
2015ம் ஆண்டு நடந்த நடிகர் சங்க தேர்தலில் தோல்வி அடைந்த சரத்குமார் பிரஸ் மீட்டில் அழுதார். நடிகர் சங்க தலைவராக தான் இருந்தபோது செய்த நல்ல விஷயங்கள் பற்றி விளக்கும்போது உணர்ச்சி வசப்பட்டு கண்கலங்கினார்.
டி. ராஜேந்தர்
சிம்புவின் வாலு படம் தொடர்ந்து தள்ளிப்போனது குறித்து செய்தியாளர்களிடம் பேசும்போது டி. ராஜேந்தர் கண் கலங்கினார். நான் பல கோடி சம்பாதித்தாலும் என் செல்வம் என் மகன் சிம்பு என்று கூறினார்.
மோகன் ராஜா, ஜெயம் ரவி
தனி ஒருவன் படத்தின் சக்சஸ் மீட்டில் பேசிய ஜெயம் ராஜா தனது பெயரை மோகன் ராஜா என்று மாற்றியது பற்றி கூறியபோது கண் கலங்கினார். எனக்கு ஜெயத்தை கொடுத்தவர் என் தந்தை மோகன். அவர் பெயரை என் பெயருடன் சேர்ப்பதில் மகிழ்ச்சி என்றார். அவரை பார்த்து அவரது தம்பி ஜெயம் ரவியும் அழுதார்.