Don't Miss!
- News நீங்களே ஒரு முடிவுக்கு வாங்க! வாக்கு சதவீதத்தில் பெரும் குளறுபடி! விஐபி தொகுதிகளில் இத்தனை மாற்றமா?
- Automobiles வெறும் 136 பேர் தான் இந்த காரை வாங்கியிருக்காங்க! நல்ல காரா இருந்தாலும் மக்கள் வெறுக்க காரணம் இது தான்!
- Finance எலான் மஸ்க் முடிவால்.. முக்கிய நிகழ்ச்சி ரத்து.. ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் சோகம்..!!
- Sports IPL 2024 : ஐபிஎல் வரலாற்றிலேயே எந்த விக்கெட் கீப்பரும் செய்யாத பிரம்மாண்ட சாதனையை செய்த தோனி
- Lifestyle இந்த 4 ராசிக்காரர்களில் ஒருவர் உங்க நண்பராக இருந்தா நீங்க வாழக்கையில் எதுக்குமே கவலைப்பட வேணாமாம்...!
- Technology ஆர்டர் பிச்சிக்கும் பாருங்க.. ரூ.10,000 போதும்.. 108MP கேமரா.. 256GB மெமரி.. வருகிறது itel போன்.. எந்த மாடல்?
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
மணமக்களுக்கு வித்தியாசமான பரிசளித்த நடிகர் மயில்சாமி… வைரலாகும் புகைப்படம் !
சென்னை : தமிழ் திரையுலகில் பல்வேறு படங்களில் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து பிரபலமானவர் மயில்சாமி.
இவர், அண்மையில் திருமண வரவேற்பு நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு, மணமக்களுக்கு வித்தியாசமான பரிசை அளித்துள்ளார்.
19 ஆண்டுகளுக்கு பின்...கதிருடன் கை கோர்க்கும் ஏ.ஆர்.ரஹ்மான்
இந்த புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலாகி உள்ளது.
மயில்சாமி
தாவணி கனவுகள் திரைப்படத்தில் கூட்டத்தில் ஒருவராக நடித்தவர் மயில்சாமி. அந்த திரைப்படத்தை அடுத்து, கன்னி ராசி திரைப்படத்தில் மளிகை பொருட்களை டெலிவரிசெய்யும் பாயாக வந்திருப்பார். இப்படி சிறிய சிறிய கதாபாத்திரங்களின் மூலம் தனது நடிப்பு பயணத்தை தொடர்ந்தார் மயில்சாமி.
நகைச்சுவையில்
குணசித்திரம், நகைச்சுவை என அனைத்திலும் மிரட்டி வரும் மயில் சாமி நான் அவனில்லை, தூள், கில்லி, கண்களால் கைது செய், தேவதையை கண்டேன், ரெண்டு மற்றும் திருவிளையாடல் போன்ற திரைப்படங்களில் சிறப்பாக நடித்து புகழின் உச்சம் தொட்டார்.
சென்னை வெள்ளம்
சினிமா மட்டுமின்றி அரசியலிலும் தீவிரமாக உள்ளார் நடிகர் மயில்சாமி. 2015ஆம் ஆண்டு சென்னையில் ஏற்பட்ட பெரு வெள்ளத்தின் போது மக்களுக்கு பல்வேறு உதவிகளை செய்துவந்தார்.
முறுங்கைக்காய் சிப்ஸ்
மயில்சாமி கடைசியாக விஜே பாலாஜி இயக்கி உருவான நயன்தாரா நடித்த மூக்குத்தி அம்மன் படத்தில் கவுரவத் தோற்றத்தில் நடித்திருந்தார். தற்போது முறுங்கைக்காய் சிப்ஸ் மற்றும் இடியட் ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.
சுயேச்சையாக
ஜெயலலிதாவின் மரணத்துக்கு முன்பு வரை அ.தி.மு.கவில் இருந்த நடிகர் மயில்சாமி, ஜெயலலிதா மரணத்துக்குப் பிறகு, அ.தி.மு.கவிலிருந்து ஒதுங்கி அமைதியாக இருந்தார். இந்நிலையில், சட்டமன்றத் தேர்தல் அறிவிக்கப்பட்டதும் விருகம்பாக்கம் தொகுதியில் சுயேச்சையாகப் போட்டியிட்டார்.
1,435 வாக்குகள்
தி.மு.க சார்பாக ஏ.எம்.வி.பிரபாகர் ராஜாவும், அ.தி.மு.க சார்பாகப் விருகை ரவியும், மக்கள் நீதி மய்யத்தின் சார்பாக சினேகன் போட்டியிட்டனர். இந்த தொகுதியில் 1,435 வாக்குகள் பெற்று தோல்வியைத் தழுவினார்.
மணமக்களுக்கு பரிசு
அண்மையில், திருமண வரவேற்பு நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட, மயில்சாமி, மணமக்களுக்கு பெட்ரோலை பரிசாக அளித்துள்ளார். பெட்ரோல் விலை உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக மயில்சாமி இவ்வாறு செய்துள்ளார். இது திருமணத்துக்கு வந்திருந்தவர்களின் கவனத்தை ஈர்த்தது. மேலும் இது தொடர்பான புகைப்படங்கள் வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.
விலை குறைப்பு
இதுகுறித்து, கூறிய நடிகர் மயில்சாமி, பெட்ரோல் விலை உயர்வை மத்திய அரசு கண்டுகொள்வதில்லை. அவர்களுக்கு மக்களின் கோரிக்கையை தெரியப்படுத்துவதற்காகத் தான் இவ்வாறு செய்தேன். தமிழக அரசு பெட்ரோல் விலையை ரூ.3 குறைத்ததை வரவேற்கிறேன் என அவர் தெரிவித்தார்.