Don't Miss!
- Lifestyle சப்பாத்திக்கு ஒருடைம் உருளைக்கிழங்கு வெச்சு இப்படி கிரேவி செஞ்சு பாருங்க.. டேஸ்ட் சும்மா அள்ளும்...
- Sports அடுத்தடுத்து வீழ்ந்த 2 வீரர்கள்.. சிஎஸ்கே பேட்டிங் வரிசையில் நடந்த மாற்றம்.. ஜடேஜா களமிறங்கியது ஏன்?
- News தமிழகத்தில் 72% வாக்குப்பதிவு! 2019இல் தேர்தலில் பதிவான வாக்குகள் எவ்வளவு - தொகுதி வாரியான விவரம்
- Technology ஆத்தாடி.. ஒரே போனை வைத்து.. இந்தியாவில் சம்பவம் செய்ய பார்க்கும் Samsung.. பட்ஜெட்ல அறிமுகமாகும் புது Mobile..
- Finance தூத்துக்குடி நிறுவனத்தை அலேக்கா வாங்கிய அதானி.. மாஸ்டர் பிளான் உடன் களமிறங்கிய கௌதம் அதானி..!!
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
- Automobiles ஓட்டு போட வந்த பிரபலங்கள் எந்த கார்களில் வந்தார்கள் தெரியுமா? பாதிபேர் ஒரே மாதிரி கார்ல வந்திருக்காங்க!
'அம்மா'வுக்காக உண்ணாவிரதம் இருந்த கோலிவுட்
சென்னை: ஜெயலலிதாவுக்கு ஆதரவு தெரிவித்து கோலிவுட் நடிகர், நடிகைகள், இயக்குனர்கள் உள்ளிட்டவர்கள் இன்று உண்ணாவிரதம் இருந்தனர்.
சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவுக்கு 4 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்ட தீர்ப்பை எதிர்த்து சினிமா நடிகர், நடிகைகள், இயக்குனர்கள் என்று திரை உலகினர் இன்று சென்னை சேப்பாக்கத்தில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினர்.
போராட்டத்தில் யார், யார் கலந்து கொண்டுள்ளனர் என்பதை பார்ப்போம்.
சரத்குமார்
உண்ணாவிரத போராட்டம் நடக்கும் இடத்தில் அம்மாவின் தீவிர ஆதரவாளரான சமக தலைவர் சரத்குமாரை காண முடிந்தது.
ராமராஜன்
அம்மா, அம்மா என்று ஜெயலலிதா புகழ்பாடும் நடிகர் ராமராஜன், நடிகர் குண்டுகல்யாணம் உள்ளிட்டோர் உண்ணாவிரதம் இருந்தனர்.
கேயார்
தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் கேயார், இயக்குனர் எஸ்.ஜே. சூர்யா ஆகியோரும் உண்ணாவிரதம் இருந்தனர்.
வெந்நிற ஆடை நிர்மலா
ஜெயலலிதா காலத்து நடிகையான வெந்நிற ஆடை நிர்மலா உண்ணாவிரதம் இருந்தார்.
கே. பாக்யராஜ்
இயக்குனரும், நடிகருமான கே. பாக்யராஜ், நடிகர்கள் பிரபு, சத்யராஜ், மனோபாலாவும் அம்மாவுக்கு ஆதரவு தெரிவித்து போராட்டத்தில் கலந்து கொண்டனர்.
சீனியர்ஸ்
உண்ணாவிரதப் போராட்டத்தில் ரஜினி, கமல் போன்ற சீனியர்களையும், அஜீத், விஜய் போன்ற முன்னணி ஹீரோக்களையும் காணவில்லை.
ஜூனியர்ஸ்
விஷால், தனுஷ், சிம்பு, ஜீவா என்று இளம் நடிகர்களையும் போராட்ட பந்தலில் காணவில்லை.