Don't Miss!
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
- Lifestyle 1000 ஆண்டுகளுக்கு முன் ஒரே இரவில் சர்ஜிக்கல் தாக்குதல் நடத்தி ஒரு நாட்டையே வென்ற தமிழ் அரசர்... யார் தெரியுமா?
- News "மகளிர் உரிமை தொகை வரல.." அமைச்சரை பேச விடாமல் நிறுத்திய பெண்.. மேடையில் அடுத்து நடந்த பரபர சம்பவம்
- Automobiles அடி மாட்டு விலைக்கு எலெக்ட்ரிக் காரை களமிறக்கும் மாருதி! பெட்டி கடைல வெத்தல, பாக்கு விக்கற மாதிரி விக்க போகுது
- Sports ரோகித்.. ரோகித் என கத்திய ரசிகர்கள்.. ஓங்கி ஒரு அடி விட்ட ஹர்திக் பாண்டியா - வீடியோ
- Technology குசும்பன்யா இந்த Samsung.. மாஸ் 5G போனை ரூ.10,000 விலையில் விற்பனை.. எந்த மாடல்? எப்போ வாங்கலாம்?
- Travel 2050 வருஷம் வருறதுக்குள்ள உலகத்துல உள்ள இந்த அழகான இடங்கள் எல்லாம் கடலுக்குள்ள போயிடுமாம்!
- Education ஆஸ்திரேலியாவில் உயர்கல்வி பயில இந்திய மாணவர்கள் விரும்புவது ஏன்?
இந்த படத்தை கோலிவுட் அல்லவா முதலில் எடுத்திருக்கணும்?: ஹாட்ஸ் ஆப் பாலிவுட்
Recommended Video
சென்னை: பேட்மேன் பட ட்ரெய்லர் வெளியாகி அனைவரையும் ஈர்த்துள்ளது. இந்த பேட்மேன் நம்ம கோவைக்காரர் அருணாச்சலம் முருகானந்தம் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆர். பால்கி இயக்கத்தில் அக்ஷய் குமார், ராதிகா ஆப்தே, சோனம் கபூர் உள்ளிட்டோர் நடித்துள்ள பாலிவுட் படம் பேட்மேன். படம் குடியரசு தினத்தன்று ரிலீஸாக உள்ளது.
இந்நிலையில் இன்று ட்ரெய்லர் வெளியிடப்பட்டுள்ளது.
பேட்மேன்
ட்ரெய்லரில் அமிதாப் பச்சன் வாய்ஸ் ஓவர் கொடுத்துள்ளார். அமெரிக்காவில் சூப்பர் மேன், பாட்மேன், ஸ்பைடர் மேன் இருக்கிறார்கள். ஆனால் இந்தியாவில் பேட்மேன் உள்ளார் என்று அமிதாப் வாய்ஸ் கொடுத்துள்ளார்.
நிச்சயம் ஹிட்
பேட்மேன்(pad man) ட்ரெய்லர் அனைவருக்கும் பிடித்துள்ளது. படம் நிச்சயம் சூப்பர் ஹிட்டாகும் என்று திரை விமர்சகர்கள் தெரிவித்துள்ளனர். ட்ரெய்லர் பெண்களை வெகுவாக கவர்ந்துள்ளது.
பாலிவுட்
நம்ம கோவையை சேர்ந்த அருணாச்சலம் முருகானந்தம் பெண்கள் மாதவிடாய் காலத்தில் பயன்படுத்த விலை குறைந்த நாப்கின்களை தயாரிக்கும் இயந்திரத்தை கண்டுபிடித்தார். நாப்கின்கள் வாங்க முடியாமல் பழைய முறைப்படி சுகாதாரம் இல்லாதவற்றை பயன்படுத்திய பெண்களுக்கு அருணாச்சலத்தின் கண்டுபிடிப்பு ஒரு வரப் பிரசாதம். அவரின் கதையை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள படம் பேட்மேன்.
இயக்குனர்கள்
எதையும் வியாபார நோக்குடன் பார்க்கும் காலத்தில் சேவை மனப்பான்மையுடன் செயல்பட்டு வரும் அருணாச்சலத்தின் நல்ல எண்ணத்தை பாலிவுட் கண்டுகொண்டு படமாக்கியுள்ளது. நம்ம தமிழ் திரையுலகம் அல்லவா இதை முதலில் செய்திருக்க வேண்டும்?
மாரியப்பன்
பாரா ஒலிம்பிக் போட்டியில் தங்கப் பதக்கம் வென்று நம் நாட்டிற்கு பெருமைத் தேடித் தந்த தமிழர் மாரியப்பன் தங்கவேலுவின் வாழ்க்கையை படமாக்கப் போவதாக ஐஸ்வர்யா தனுஷ் தெரிவித்தார். ஆனால் அதன் பிறகு எந்த அறிவிப்பும் வரவில்லையே ஐஸ்வர்யா? நாம் விட்டால் மாரியப்பனையும் பாலிவுட் தான் கண்டுகொண்டு படம் எடுத்து கவுரவிக்கும்.