சூரியன் மறைந்துவிட்டது, சகாப்தம் முடிந்துவிட்டது: திரையுலகினர் கண்ணீர் #karunanidhi
சென்னை: சூரியன் மறைந்துவிட்டது, சகாப்தம் முடிந்துவிட்டது என்று திரையுலக பிரபலங்கள் கருணாநிதியின் மறைவு குறித்து இரங்கல் தெரிவித்துள்ளனர்.
சென்னை காவேரி மருத்துவமனையில் கடந்த மாதம் 28ம் தேதியில் இருந்து தீவிர சிகிச்சை பெற்று வந்த திமுக தலைவர் கருணாநிதி இன்று மாலை 6. 10 மணிக்கு காலமானார்.
அவரது மறைவு செய்தி குறித்து அறிந்த திரையுலக பிரபலங்கள் ட்விட்டரில் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளனர்.
சூரியனின் மகன் அஸ்தமித்துவிட்டார் என்று நடிகையும், காங்கிரஸ் செய்தித் தொடர்பாளருமான குஷ்பு ட்வீட்டியுள்ளார்.
கருணாநிதி மறைந்த இந்த நாள் கருப்பு தினம் என்கிறார் நடிகை ராதிகா சரத்குமார்.
சகாப்தம் முடிந்துவிட்டது. உங்களின் ஆத்மா சாந்தியடையட்டும் சார் என்று நடிகர் வைபவ் ட்வீட்டியுள்ளார்.


Click it and Unblock the Notifications











