Don't Miss!
- News அண்ணாமலை வேட்பு மனுவில் செய்த 2 மிகப்பெரிய தவறு.. திமுக எதுவுமே பேசல.. கொந்தளித்த நாதக வழக்கறிஞர்!
- Technology Jio-வை பொலி போட்ட BSNL.. ரூ.600 க்கு 4000GB டேட்டா.. 125 Mbps ஸ்பீட்.. இலவச OTT.. 2 புதிய திட்டங்கள் அறிமுகம்!
- Travel 2050 வருஷம் வருறதுக்குள்ள உலகத்துல உள்ள இந்த அழகான இடங்கள் எல்லாம் கடலுக்குள்ள போயிடுமாம்!
- Finance முதல்ல மகன், இப்போ அம்மா.. காங்கிரஸ் விட்டு விலகிய சாவித்ரி ஜிண்டால்..!!
- Automobiles மாருதியின் இந்த கார்களின் டேங்கை ஃபுல் பண்ணா 1,200கிமீ போகலாமா.. இதுக்காக பிரச்சாரம் செய்யவே தொடங்கிட்டாங்க!
- Sports SRH vs GT : பல்தான்ஸ்.. நமக்கு இவ்வளவு பெரிய சோதனை வந்தது ஏன்? ஓய்வறையில் ஓபனாக பேசிய ஹர்திக்!
- Lifestyle ஹிட்லரின் ஆட்சியில் செய்யப்பட்ட மகத்தான சாதனைகள்... ஹிட்லருக்கே தெரியாம இவ்வளவு நல்லது பண்ணிருக்காரா?
- Education ஆஸ்திரேலியாவில் உயர்கல்வி பயில இந்திய மாணவர்கள் விரும்புவது ஏன்?
பழரசம் கொடுத்து உண்ணாவிரதத்தை முடித்து வைத்தார் நடிகர் எஸ்எஸ்ஆர்
சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று சிறையில் உள்ள முன்னாள் முதல்வர் ஜெயலலிதா விடுதலைக்காக இன்று திரையுலகினர் நடத்திய உண்ணாவிரதத்தில் கலந்து கொண்டவர்களுக்கு பழரசம் கொடுத்து முடித்து வைத்தார் பழம்பெரும் நடிகர் எஸ் எஸ் ராஜேந்திரன்.
சென்னை சேப்பாக்கம் விருந்தினர் இல்லம் எதிரே இந்த உண்ணாவிரதம் நடந்தது. இதில் திரையுலகின் அனைத்து சங்கங்கங்களின் நிர்வாகிகள், பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். தயாரிப்பாளர் சங்கத்திலிருந்து டி சிவா, கேயார், நடிகர் சங்கத்தின் தலைவர் சரத்குமார், ராதாரவி, இயக்குநர்கள் சங்கத் தலைவர் விக்ரமன் போன்றவர்கள் வந்திருந்தனர்.
சரத்குமார் தலைமையில் இந்த உண்ணாவிரதம் நடப்பதாக அறிவிக்கப்பட்டது.
மேடையில் யாரும் பேசவில்லை. அவர்களிடம் ஜெயா டிவி பைட்ஸ் எடுத்து நேரடியாக ஒளிபரப்பியது.
நகைச்சுவை நடிகர்கள், முன்னாள் நடிகர்கள், அதிமுக ஆதரவு கலைஞர்களே பெருமளவு இதில் பங்கேற்றனர். லைம்லைட்டில் உள்ளவர்கள் என்று பார்த்தால் சூர்யா, விக்ரம், சிவகார்த்திகேயன், கார்த்தி, சூரி, விஜய் சேதுபதி, விவேக் போன்ற சிலர் மட்டும்தான் பங்கேற்றனர்.
முன்னணி நடிகைகள் ஒருவர் கூட பங்கேற்கவில்லை.
மாலை 5 மணிக்கு உண்ணாவிரதம் நிறைவடைந்தது. இதில் காலையிலிருந்து மாலை வரை பங்கேற்றவர்களுக்கு பழரசம் கொடுத்து உண்ணாவிரதத்தை முடித்து வைத்தார் பழம்பெரும் நடிகரும் முன்னாள் எம்பியுமான எஸ்எஸ் ராஜேந்திரன்.