Don't Miss!
- Finance பெங்களூரை காப்பாற்ற களமிறங்கிய ஐடி ஊழியர்கள்.. உண்மையிலேயே செம விஷயம் தான்..!
- Lifestyle தோசை மாவு இல்லாத சமயத்தில் 1 கப் அரிசி மாவு இருந்தா.. 10 நிமிடத்தில் மொறுமொறு-ன்னு தோசை சுடலாம்...
- News உத்தர பிரதேசத்தில் அமைச்சர் மீது ரத்தம் சொட்ட சொட்ட தாக்குதல்.. தேர்தல் நேரத்தில் பரபரப்பு!
- Sports சூப்பர்! சிஎஸ்கேவின் மாஸ் திட்டம்.. ரூ.14 கோடி வீரருக்கு புதிய பொறுப்பு.. இனி அதிரடி தான்
- Automobiles இந்த கிளட்ச் இல்லாத கியர் பைக் ஏன் இப்பொழுது விற்பனையில் இல்லை தெரியுமா? இதுக்கு பின்னாடி இவ்வளவு நடந்துச்சா?
- Technology எக்கச்சக்கமா குவியுது ஆர்டர்.. 200MP கேமரா.. 66W சார்ஜிங்.. ஹானர் போனுக்கு ரூ.5000 விலைகுறைப்பு.. எந்த மாடல்?
- Education மாணவர்களுக்கோர் ஓர் நற்செய்தி.. நான்கு ஆண்டு இளங்கலை பட்டப்படிப்பு படித்தவர்கள் பிஎச்.டி.யில் சேர
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
டப்பிங் உரிமையை விற்று ஏமாற்றி விட்டார்-தயாரிப்பாளர் மீது சோனா புகார்!
பாடகர் எஸ்.பி. பாலசுப்பிரமணியத்தின் மகன் எஸ்.பி.பி. சரணுக்கு எதிராக போலீசில் புகார் கொடுத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியவர் கவர்ச்சி நடிகை சோனா. முதலில் சரண் மீது குற்றம் சுமத்தி வானும், பூமிக்கும் குதித்தவர் பின்னர் சமாதானம் ஆகிவிட்டார். அதன் பிறகு அமைதியாக இருந்து வந்த அவர் தற்போது தயாரிப்பாளர் டி.சிவாவுக்கு எதிராக தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்தில் புகார் கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது.
இது குறித்து அவர் கொடுத்த புகாரில்
நானும், சிவாவும் சேர்ந்து 50-50 சதவீதத்தில் கனிமொழி என்ற படத்தை தயாரித்தோம். அவருக்கு தமிழ் தவிர வேறு மொழிகளின் ரீமேக் மற்றும் டப்பிங் உரிமை இருக்கிறது. இந்நிலையில் அவர் என் அனுமதி இன்றி கனிமொழி படத்தின் டப்பிங் உரிமையை தெலுங்கு தயாரிப்பாளர் ஜக்குலா நாகேஸ்வர ராவுக்கு விற்றுவிட்டார்.
ஒப்பந்தத்தை மீறி அவர் தன்னிச்சையாக டப்பிங் உரிமையை விற்று என்னை ஏமாற்றியுள்ளார். எனவே, அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.