Don't Miss!
- News மீண்டும் மீண்டுமா! அரவிந்த் கெஜ்ரிவாலை பதவி நீக்கம் செய்யக்கோரி டெல்லி ஹைகோர்ட்டில் மனுத்தாக்கல்
- Finance TATA Sons நிறுவனத்தில் ஓரேயோரு பங்கு வைத்திருக்கும் மர்ம நபர்? யார் இவர்?! JRD டாடா-வுடன் நெருக்கம்!
- Sports 4,4,6.. உங்க ஸ்பின்னெல்லாம் என்னிடம் எடுபடாது.. கேகேஆர் அணியின் அஸ்திவாரத்தை ஆட்டிய கேமரூன் க்ரீன்!
- Technology கஸ்டமர்களுக்கு வந்த திடீர் மெசேஜ்! சத்தமின்றி BSNL சேவையில் புதிய மாற்றம்.. ஆப்பிற்குள் காத்திருந்த அதிர்ச்சி!
- Automobiles பைக் வாங்குவதற்கு பதில் இப்படியொரு காரை வாங்கிடலாம்!! மைலேஜை வாரி வழங்குது... 2024 ஸ்விஃப்ட்!
- Lifestyle கருவுறுதல் பிரச்சினையை குணப்படுத்தணுமா? இந்த சூப்பர்புட்களில் ஒன்றை தினமும் உணவில் சேர்த்துக்கோங்க...!
- Travel தமிழ்நாட்டிலேயே பாதுகாப்பான சுற்றுலாத் தலங்கள் இவை தான் – பெண்களாக, குடும்பங்களாக செல்ல ஏற்ற இடங்கள்!
- Education நெட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் பிஎச்.டி. படிப்பில் சேரலாம்: யுஜிசியின் புதிய அறிவுறுத்தல
சென்னையில் இன்று வெற்றி விழா கொண்டாடிய கொம்பன்
ஏக பிரச்சினைகளுக்கிடையில் கடந்த வாரம் வெளியான கொம்பன் படத்துக்கு இன்று வெற்றிவிழா கொண்டாடினர் தயாரிப்பாளரும் இயக்குநரும்.
கார்த்தி-லட்சுமி மேனன், ராஜ்கிரண் நடித்த இந்தப் படம் பல்வேறு அரசியல் எதிர்ப்புகளுக்கு உள்ளானது.
படத்தை வெளியிடாமல் தடுக்க வழக்கும் தொடர்ந்தனர். ஆனால் அனைத்திலும் வென்று வெளியானது படம்.
ரசிகர்கள் படத்துக்கு ஏக ஆதரவை வழங்கினர். நல்ல வசூல். இதைக் கொண்டாடும் வகையில் இன்று படக்குழுவினர் பிரசாத் லேப் தியேட்டரில் கூடினர்.
நடிகர் சூர்யா, இயக்குனர் முத்தையா, தயாரிப்பாளர் ஸ்டுடியோ கிரீன் ஞானவேல் ராஜா ஆகியோர் கலந்துகொண்டனர். படத்தை பெரிய வெற்றியடைய வைத்த அனைத்து ரசிகர்களுக்கும், நலம் விரும்பிகளுக்கும் தங்களது நன்றிகளை தெரிவித்துக் கொண்டனர்.
குறிப்பாக மீடியாவுக்கு மிகப் பெரிய நன்றி என்றார் ஞானவேல் ராஜா.
நடிகர் கார்த்தி பேசுகையில், "கிராம மக்கள் கூட்டம் கூட்டமாக இந்தப் படத்தைப் பார்த்து வருகின்றனர். ஒரு அழகான குடும்பப் படத்தில் நடித்ததற்காக எனக்கு நன்றி கூறுகின்றனர். படத்தைப் பாராட்டி வரும் விமர்சனங்களைப் படிக்கும்போது மிக நெகிழ்ச்சியாக உள்ளது," என்றார்.
முன்னதாக நடிகை கோவை சரளா கேக் வெட்டி வெற்றி விழாவை தொடங்கி வைத்தார்.