Don't Miss!
- Automobiles அந்த தப்பை மட்டும் பண்ணிடாதீங்க.. ஆடி, பென்ஸ், போர்ஷேனு எல்லா காரையும் வாரி சுருட்டி போட்டு போயிட்டாங்க போலீஸ்
- Lifestyle Today Rasi Palan 29 March 2024: இன்று இந்த ராசிக்காரர்களின் நிதி நிலை வழக்கத்தை விட சிறப்பாக இருக்கும்...
- News பொத்தென விழுந்த மேற்கூரை.. 3 பேரை அமுக்கி கொன்ற சென்னை பப் விபத்து பற்றி காவல்துறை விளக்கம்
- Sports ரிஷப் பண்ட்க்கு 2 முறையும் லக் இல்ல.. தொடர்ந்து 2வது வெற்றியை பெற்ற ராஜஸ்தான்.. ரியான்,ஆவேஷ் அபாரம்
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
- Technology குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
ஜூனியர் ஆர்ட்டிஸ்டுகளின் வாழ்க்கையைப் பேசும் கூத்தன்!
கூத்தன் திரைப்பட ஃபர்ஸ்ட் லுக்கை நடிகர் பிரபு வெளியிட்டார்
சென்னை: நீல்கிரீஸ் ட்ரீம் எண்டர்டெயின்மெண்ட் தயாரிப்பில் உருவாகியிருக்கும் கூத்தன் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை நடிகர் பிரபு வெளியிட்டார்.
உருவாகியுள்ளதை கேட்டு படக்குழுவை பராட்டினார். கூத்தன் படத்தின் விவரங்களை கேட்டறிந்த அவர் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வித்தியாசமாக உள்ளதாகவும் படம் மிகப்பெரிய வெற்றி அடையவும் வாழ்த்துகள் தெரிவித்தார். மேலும் ஹீரோ ராஜ்குமார் மிக அழகாக, திறமைவாய்ந்தவராக இருக்கிறார். அவர் மிகப்பெரிய ஹிரோவாக வருவதற்கு தனது வாழ்த்துக்களை கூறினார்.
சினிமாவில் உள்ள ஜூனியர் ஆர்ட்டிஸ்டுகளின் வாழ்வியலை மையமாகக் கொண்ட இப்படத்தை ஏ.எல்.வெங்கி இயக்கி உள்ளார். சினிமா தொடர்பாக நிறைய படங்கள் வந்திருந்தாலும், இப்படம் புதிய கோணத்தில் இருக்கும் என இயக்குனர் தெரிவித்துள்ளார்.
இப்படத்தில் அறிமுக நாயகன் ராஜ்குமார் , அறிமுக நாயகிகள் ஸ்ரிஜிதா, சோனால், கீரா, ஆகியோர் நடிக்கிறார்கள். இவர்களுடன் நாகேந்திர பிரசாத், இயக்குநர் பாக்யராஜ், ஊர்வசி, மனோபாலா, ஜீனியர் பாலையா, கவிதாலயா கிருஷ்னன், ஶ்ரீரஞ்சனி, பரத் கல்யாண், ராம்கி, கலா மாஸ்டர் கலக்கப்போவது யாரு புகழ் முல்லை, கோதண்டம், என ஒரு திரையுலக பட்டாளமே நடித்திருக்கிறார்கள்.
இந்தப்படத்திற்கு பாலாஜி இசையமைக்கிறார். மாடசாமி ஒளிப்பதிவு செய்கிறார்.பீட்டர் பாபியா படத்தொகுப்பை கவனித்துக்கொள்கிறார். நீல்கரிஸ் முருகன் தயாரித்துள்ள இப்படம் இறுதிகட்ட வேலைகளை நெருங்கியுள்ளது.
ஃபர்ஸ்ட் லுக் பலத்த எதிர்பாரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் படத்தின் வெளியீட்டு வேலைகள் மும்முரமாக நடந்து வருகிறது.