Don't Miss!
- Sports குண்டைத் தூக்கிப் போட்ட பிசிசிஐ.. ஐபிஎல்-இல் டிஆர்எஸ் நீக்கம்.. இனி ரிவ்யூ கேட்டால் இதுதான் நடக்கும்
- News தமிழகத்தில் நாளை வேட்புமனு தாக்கல் தொடக்கம்!இதையெல்லாம் செய்ய கூடாது! வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு
- Education இ.எஸ்.ஐ., மருத்துவமனையில் காத்திருக்கும் நர்ஸ் வேலை...!!
- Travel நீங்க உங்க குழந்தைகளோடு இன்னும் சென்னையில உள்ள இந்த பூங்காக்களுக்கு சென்றது இல்லையா – இப்போதே செல்லுங்கள்!
- Finance பெங்களூர் டூ லட்சத்தீவு.. இண்டிகோ-வின் நேரடி விமான சேவை, அடிதூள்.. டிக்கெட் விலை என்ன..?
- Lifestyle இந்த பிரபல சீரியல் கில்லர்களின் கடைசி வார்த்தைகள் அவங்க பண்ணுன கொலைகளை விட பயத்தை கொடுப்பதாக இருந்ததாம்...!
- Technology லிவ்வின் தம்பதியின் கைவரிசை.. போலி UPI ஆப்ஸ் மூலம் கட்டணம்.. தங்கம் திருடிய ஜோடி மாட்டியது எப்படி?
- Automobiles ரூ.199க்கு கார் கண்ணாடியா!! அதிக உறுதியான பின் பக்கத்தை பார்க்க உதவும் யுனோ மிண்டா-வின் கண்ணாடிகள் அறிமுகம்!
ஒரு நகைச்சுவை பட்டாளமே கிச்சு கிச்சு மூட்டும் 'கோப்பெருந்தேவி!'
தமிழில் அதிக நகைச்சுவை நடிகர்கள் இடம்பெறும் படம் என்ற சிறப்புடன தயாராகிறது கோப்பெருந்தேவி.
ஹ்ருஷிகேஷ அச்சுதன் சங்கர் .. இது இயக்குனர் பேரு:
சக்தி டாக்கீஸ் ஏ.ராஜசேகர் ரெட்டி தயாரிப்பில் புதுமுக இயக்குனர் ஹ்ருஷிகேஷ அச்சுதன் சங்கர் இந்தப் படத்தை இயக்குகிறார்.
நடிகை திரிஷா இந்த படத்தில்தான் ஹீரோயினாக நடிக்கிறார் என செய்தி பரவியது. ஆனால் அது உண்மையில்லையாம். அவரை நடிக்கச் சொல்லிகேட்டு அணுகியது உண்மை என்றும், அவருக்கு வேறு படங்கள் இருந்ததால் தேதி தரமுடியாமல் போனதாகவும் தயாரிப்பாளர்கள் விளக்கம் அளித்துள்ளனர்.
த்ரிஷா நடிக்கவிருந்த வேடத்தில்...
த்ரிஷா நடிக்கவிருந்த வேடத்தில் நடிக்க ஒரு மிகப் பிரபலமான நடிகையை ஒப்பந்தம் செய்துள்ளனர். அவர் பெயரை இப்போதைக்கு சஸ்பென்ஸாக வைத்துள்ளனர்.
அடர்ந்த காட்டுக்குள் ஒரு பழைய ஜாமீன் மாளிகையில் பிரம்மாணடமான புதையல் இருக்கிறது. அந்த புதையலை பயங்கரமான பேய் ஒன்று பாதுகாத்து வருகிறது. இது தெரியாமல் புதையலேடுக்கக் கிளம்பும் நகைச்சுவைப் பட்டாளம் பேயிடம் மாட்டி என்ன பாடுபட்டார்கள் என்பதை நகைச்சுவையுடனும் திரில்லுடனும் சொல்லியிருக்கிறார்களாம்.
பதினெட்டு நகைச்சுவை நடிகர்கள்...
படத்தை பிரம்மாண்டப்படுத்த இருபது நிமிடம் கிராபிக்ஸ் காட்சிகள் வேறு வைக்கிறார்கள்.
தமிழ் சினிமாவில் இதற்கு முன் இத்தனை நகைச்சுவை நடிகர்கள் இணைந்து நடித்திருப்பார்களா என்பது சந்தேகமே. பதினெட்டு நகைச்சுவை நடிகர்கள் நடிக்கிறார்களாம்.
ஊர்வசி, கோவை சரளா, தேவதர்ஷினி, வி.டி.வி கணேஷ், சிங்கம்புலி, ஸ்ரீமன், மனோபாலா, சாமிநாதன், வெண்ணிற ஆடை மூர்த்தி, டெல்லி கணேஷ், இளவரசு, வடிவுக்கரசி, பாண்டு, சாம்ஸ், அனுமோகன், வெங்கல்ராவ், பயில்வான் ரெங்கநாதன், அல்வா வாசு, பாலக்ருஷ்ணன் உட்பட மேலும் பலர் உண்டு.
ஏ ஆர் ரஹ்மானின் இசைக்கல்லூரி மாணவர் தான் மியூசிக்
ரமேஷ்குமார் ஒளிப்பதிவு செய்ய, எஸ். எம். பிரசாந்த் இசையமைத்துள்ளார். இவர் ஏ ஆர் ரஹ்மானின் இசைக்கல்லூரி மாணவர்.
ஹைதராபாத், ராஜமுந்தரி,பொள்ளாச்சி, உடுமலைப்பேட்டை, விழுப்புரம் ஆகிய இடங்களில் படம் வளைந்து வருகிறது. விடுமுறைக் காலத்தை குதூகலப்படுத்தும் வகையில் மே மாதம் படம் வெளியாகப் போகிறதாம்.