Don't Miss!
- Sports பும்ராவுக்கே அதிர்ச்சி கொடுத்த அஷுதோஷ் சர்மா.. போட்டியை வென்ற மும்பை.. ரசிகர்களை வென்ற பஞ்சாப்!
- Lifestyle 12 ஆண்டுகளுக்கு பின் மேஷத்தில் உருவாகும் கஜலட்சுமி ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு பண மழை பொழியும்..
- News ஆம்ஆத்மிக்கு அடுத்த ஷாக்.. கெஜ்ரிவாலை தொடர்ந்து டெல்லி எம்எல்ஏ அமலாக்கத்துறையால் கைது
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Technology வெயிட்டிங் ஓவர்.. Sony கேமரா.. 256ஜிபி மெமரி.. வருகிறது புதிய Vivo 5ஜி போன்.. எந்த மாடல்?
- Automobiles படகு மாதிரி மிதந்து சென்ற ரூ2.44 கோடி கார்! இவ்வளவு வெள்ளத்துலயும் சின்ன டேமேஜ் கூட ஆகலயே!
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
தாய்லாந்து ஆழ்கடலில் அரிய மீன்களைப் பிடித்த விவகாரம்.. ‘மான்ஸ்டர்’ நடிகைக்கு 5 வருட சிறை தண்டனை!
நீருக்கு அடியில் மீன்களை பிடித்த தொலைக்காட்சி பிரபலம்- 5 வருட சிறை தண்டனையில் சிக்கிய நடிகை
பாங்காக்: தாய்லாந்தில் ஆழ்கடலில் மீன் பிடித்த குற்றத்திற்காக, நடிகை ஒருவருக்கு ஐந்து ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நாட்டிற்கு நாடு சட்டதிட்டங்கள் வேறுபடும். அந்த வகையில், தாய்லாந்தில் நீருக்கு அடியில் இருக்கும் உயிரினங்களை உரிய அனுமதி இல்லாமல் பிடிப்பது சட்டப்படி குற்றமாகும். விதியை மீறுபவர்களுக்கு 5 வருட சிறை தண்டனை வழங்கப்படும்.
பணம் இருக்கிறது என்பதற்காக இப்படியா?: அட்லி, மனைவியை திட்டும் நெட்டிசன்ஸ்
இந்நிலையில், பிரபல கொரிய நடிகையான லீ யோல்-யம், தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றிற்காக தாய்லாந்தில் ஆழ்கடலுக்கு சென்று சில அரிய வகை மீன்களைப் பிடித்துள்ளார். இந்த நிகழ்ச்சியானது கடந்த மாதம் தொலைக்காட்சியில் ஒளிபரப்பானது.
அதன் தொடர்ச்சியாக லீ மீது தாய்லாந்து போலீசார் வழக்குத் தொடர்ந்தனர். இந்த வழக்கில் அவருக்கு அபராதமும், 5 வருட சிறை தண்டனையும் கொடுக்கப்பட்டுள்ளது.
லீ, தி கிங் உள்ளிட்ட கொரிய படங்களில் நடித்தவர். மான்ஸ்டர் சீரிஸிலும் இவர் நடித்துள்ளார். தற்போது இவர் தென்கொரியாவில் தங்கி உள்ளார். இவர் மீண்டும் தாய்லாந்து வரும் போது கைது செய்யப்படுவார் எனத் தெரிகிறது.