Don't Miss!
- News உலகை ஆட்டிப்படைக்கும் மஞ்சள் பிசாசு! தங்க விலை ஏறுவது ஏன்?
- Finance PF பணம் வித்டிரா செய்யும் முன் இதை தெரிஞ்சிக்கோங்க..!
- Sports இப்படி தான் சிக்சர் அடிக்கனும்.. இளம் அதிரடி வீரருக்கு சொல்லி கொடுத்த தோனி.. கவனித்த ஜடேஜா
- Lifestyle 1 கப் ரேசன் அரிசி வெச்சு ஈவ்னிங் டைம்-ல இப்படியொரு ஸ்நாக்ஸ் செய்யுங்க.. அட்டகாசமா இருக்கும்..
- Automobiles ரொம்ப பணம் எல்லாம் வேணாம், உங்க கையில் இருக்குற பணத்தை வச்சே இந்த காரை வாங்கலாம் போல!
- Technology SBI வங்கி கணக்குடன் உங்களது புதிய மொபைல் எண் இணைக்க வேண்டுமா? இதோ எளிய வழிமுறைகள்..
- Education புதுச்சேரியில் பிஎஸ்சி நர்சிங் படிப்பதற்கு நுழைவுத் தேர்வு...!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
நடிகர் கொட்டாச்சியின் மகளா இது? - நயன்தாரா படத்தைத் தொடர்ந்து திகில் படத்தில் மானஸ்வி!
சென்னை : காமெடி நடிகர் கொட்டாச்சி என்கிற மாரிமுத்து, தமிழ் சினிமாவில் பல படங்களில் சிறிய வேடங்களில் நடித்திருக்கிறார். தற்போது, பட வாய்ப்புகள் இல்லாததால் படங்களில் அவரைப் பார்க்கமுடிவதில்லை.
நடிகர் கொட்டாச்சிக்கு மானஸ்வி எனும் அழகான மகள் இருக்கிறார். நயன்தாரா, அதர்வா ஆகியோர் நடித்துள்ள 'இமைக்கா நொடிகள்' படத்தில் முக்கியமான கேரக்டரில் நடித்திருக்கிறார் பேபி மானஸ்வி.
இது தவிர, எஸ்.டி கொரியர்ஸ், ஜிஆர்டி ஆகிய நிறுவனங்களின் விளம்பரங்கள் உட்பட பல விளம்பரப் படங்களிலும் நடித்திருக்கிறார். இந்நிலையில், புதிய திகில் படம் ஒன்றில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் மானஸ்வி.
'கண்மணி பாப்பா' எனும் த்ரில்லர் படத்தில் முக்கியமான கேரக்டரில் நடித்துள்ளார் மானஸ்வி. இப்படத்தில் மானஸ்வி கடத்தப்பட, அவர் கிடைத்தாரா, கடத்தலுக்குப் பின்னால் இருக்கும் மர்மம் என்ன என்பது தான் கதையாம். கதை முழுக்க பேபி மானஸ்வியை சுற்றியே நிகழ்கிறதாம்.
மானஸ்விக்கு அப்பாவாக தமன் குமாரும், அம்மாவாக மியாஶ்ரீயும் நடித்துள்ளனர். 'கண்மணி பாப்பா' படத்தை ஶ்ரீ மணி என்பவர் இயக்கியுள்ளார். இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் சமீபத்தில் வெளியானது.