Don't Miss!
- Sports CSK vs LSG : தோனி பேட்டிங்.. அலறிய வாட்ச்.. பதறிய டி காக் மனைவி.. ரசிகர்கள் செயலால் நடந்த சம்பவம்
- Lifestyle 2024 குரு பெயர்ச்சியால் உருவாகும் குபேர யோகம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு பணக்காரராகும் வாய்ப்பிருக்கு..
- News தென் சென்னை தொகுதியில் 2019ஐ விட 10% அதிகரித்த வாக்குப்பதிவு.. இது யாருக்கு லாபம்!
- Automobiles இந்தியாவில் விவசாயம் பார்ப்பவர்கள் அதிகமாகி விட்டார்களா என்ன? மஹிந்திரா டிராக்டர்ஸ் சேல்ஸ் டாப் கியரில்!!
- Technology சுந்தர் பிச்சையின் இன்னொரு முகம்.. Ad Blocker ஆப்களுக்கு ஆப்பு அடிச்ச Google.. யூசர்களுக்கு Warning.. இனிமேல்?
- Finance 9 GB டேட்டா ரூ. 1.20 கோடியா.. அதிர்ச்சியில் புளோரிடா தம்பதி!
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
நடிகர் கொட்டாச்சியின் மகளா இது? - நயன்தாரா படத்தைத் தொடர்ந்து திகில் படத்தில் மானஸ்வி!
சென்னை : காமெடி நடிகர் கொட்டாச்சி என்கிற மாரிமுத்து, தமிழ் சினிமாவில் பல படங்களில் சிறிய வேடங்களில் நடித்திருக்கிறார். தற்போது, பட வாய்ப்புகள் இல்லாததால் படங்களில் அவரைப் பார்க்கமுடிவதில்லை.
நடிகர் கொட்டாச்சிக்கு மானஸ்வி எனும் அழகான மகள் இருக்கிறார். நயன்தாரா, அதர்வா ஆகியோர் நடித்துள்ள 'இமைக்கா நொடிகள்' படத்தில் முக்கியமான கேரக்டரில் நடித்திருக்கிறார் பேபி மானஸ்வி.
இது தவிர, எஸ்.டி கொரியர்ஸ், ஜிஆர்டி ஆகிய நிறுவனங்களின் விளம்பரங்கள் உட்பட பல விளம்பரப் படங்களிலும் நடித்திருக்கிறார். இந்நிலையில், புதிய திகில் படம் ஒன்றில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் மானஸ்வி.
'கண்மணி பாப்பா' எனும் த்ரில்லர் படத்தில் முக்கியமான கேரக்டரில் நடித்துள்ளார் மானஸ்வி. இப்படத்தில் மானஸ்வி கடத்தப்பட, அவர் கிடைத்தாரா, கடத்தலுக்குப் பின்னால் இருக்கும் மர்மம் என்ன என்பது தான் கதையாம். கதை முழுக்க பேபி மானஸ்வியை சுற்றியே நிகழ்கிறதாம்.
மானஸ்விக்கு அப்பாவாக தமன் குமாரும், அம்மாவாக மியாஶ்ரீயும் நடித்துள்ளனர். 'கண்மணி பாப்பா' படத்தை ஶ்ரீ மணி என்பவர் இயக்கியுள்ளார். இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் சமீபத்தில் வெளியானது.