Don't Miss!
- Sports தோனியே சரி.. முஸ்தஃபிசுர்-க்கு பதிலாக வரும் ஸ்பின்னர்.. சிஎஸ்கே அணியில் நடக்கப் போகும் மாற்றம்!
- News தலைகீழாக திரும்புதே.. விவசாயிகளுக்கு குஷி.. இனி "ஸ்பாட் ஆக்ஷன்".. தமிழக அரசின் புது அதிரடி வருகிறது
- Technology Airtel அதிரடி.. இலவச ரௌட்டர்.. செட் டாப் பாக்ஸ்.. அன்லிமிடெட் டேட்டா.. 300 கேபிள் டிவி சேனல்.. 15 OTT சந்தா..
- Automobiles ஃபார்ச்சூனர் கார் என்றாலே நம்ம மக்களுக்கு தனி பிரியம்!! விலை அதிகமா இருந்தாலும் ஷோரூமுக்கு படை எடுக்குறாங்க!
- Lifestyle Mango Benefits: ஆண்கள் தினமும் ஒரு மாம்பழம் சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும்-ன்னு தெரியுமா?
- Finance வீட்டுக் கடன்: EMI செலுத்தாட்டி, வீடு ஏலம் விடப்படுமா? RBI சொல்வது என்ன? வங்கிகளின் அதிகாரம் என்ன?
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
மும்பை வரவுகள்: பாயும் கெளசல்யா தமிழ்பட உலகில் முக்கிய இடம் பிடித்து பரபரப்பாக நடித்து வந்தவர் கெளசல்யா.சொல்லாமலே, காலமெல்லாம் காதல் வாழ்க ஆகிய படங்களின் மூலம் தனக்கென ஒரு தனி முத்திரை பதித்து முன்னணி கதாநாயகிகளில் ஒருவராக வலம் வந்தவர்.சினிமா வாய்ப்புக்கள் குறைந்த போனவுடன் கவர்ச்சிக்குத் தாவிப் பார்த்தார். ஆனால், அது இவரது உடம்புக்கு ஒத்து வரவில்லை.இதையடுத்து சின்னத் திரை பக்கம் ஒதுங்கிய கெளசல்யா தற்போது மனைவி தொடர் மூலம் பிரபலம் அடைந்துள்ளார். சினிமாவில் வாய்ப்பு கிடைக்காததால்வருத்தத்தில் உள்ள கெளசல்யா வாய்ப்பு கிடைக்காததற்கான காரணத்தை மனம் திறந்து கொட்டினார்.நான் சினிமாத் துறைக்கு வந்து 9 வருடங்கள் ஆகின்றன. இது வரை தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என 4 மொழி படங்களில் 48 திரைப்படங்களில்நடித்துள்ளேன். ரஜினி, கமல் போன்ற முன்னணி நடிகர்கள் அவர்கள் படத்தில் நடிக்க எங்களை அழைப்பதில்லை. அவர்கள் மும்பை முகங்களை தான் தேர்வு செய்கிறார்கள்.மேலும் நடிகைகள் குஷ்பு, சுஹாசினி ஆகியோர் சொன்ன ஓபன் செக்ஸ் கருத்தில் எனக்கு உடன்பாடில்லை. எனக்கு தமிழ் கலாச்சாரம் ரொம்ப பிடிக்கும். (இத்தனைக்கும்இவர் கன்னடப் பெண்) நான் டிவி தொடர்களில் நன்றாக நடிப்பதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.நான் சினிமாவிற்கு நடிக்க வருவதற்கு முன்பு நடிகர் அரவிந்த் சாமியின் ரசிகை. அவரது நடிப்பு எனக்கு ரொம்ப பிடிக்கும். நடிகர் விஜயகாந்த் புதிதாக கட்சிஆரம்பித்துள்ளது எனக்கு மகிழ்ச்சியாக உள்ளது. அவருக்கு எனது ஆதரவை அளிப்பேன்.எனது திருமணம் குறித்து இப்போது எந்த முடிவும் இல்லை. அதே சமயத்தில் நான் யாரையும் காதலிக்கவில்லை என்றார் கெளசல்யா.சின்னத் திரையில் ஒரு நாள் நடிப்புக்கு ரூ. 40,000 வசூல் செய்கிறார் கெளஸ்.
தமிழ்பட உலகில் முக்கிய இடம் பிடித்து பரபரப்பாக நடித்து வந்தவர் கெளசல்யா.
சொல்லாமலே, காலமெல்லாம் காதல் வாழ்க ஆகிய படங்களின் மூலம் தனக்கென ஒரு தனி முத்திரை பதித்து முன்னணி கதாநாயகிகளில் ஒருவராக வலம் வந்தவர்.சினிமா வாய்ப்புக்கள் குறைந்த போனவுடன் கவர்ச்சிக்குத் தாவிப் பார்த்தார். ஆனால், அது இவரது உடம்புக்கு ஒத்து வரவில்லை.
இதையடுத்து சின்னத் திரை பக்கம் ஒதுங்கிய கெளசல்யா தற்போது மனைவி தொடர் மூலம் பிரபலம் அடைந்துள்ளார். சினிமாவில் வாய்ப்பு கிடைக்காததால்வருத்தத்தில் உள்ள கெளசல்யா வாய்ப்பு கிடைக்காததற்கான காரணத்தை மனம் திறந்து கொட்டினார்.
நான் சினிமாத் துறைக்கு வந்து 9 வருடங்கள் ஆகின்றன. இது வரை தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என 4 மொழி படங்களில் 48 திரைப்படங்களில்நடித்துள்ளேன்.
ரஜினி, கமல் போன்ற முன்னணி நடிகர்கள் அவர்கள் படத்தில் நடிக்க எங்களை அழைப்பதில்லை. அவர்கள் மும்பை முகங்களை தான் தேர்வு செய்கிறார்கள்.
மேலும் நடிகைகள் குஷ்பு, சுஹாசினி ஆகியோர் சொன்ன ஓபன் செக்ஸ் கருத்தில் எனக்கு உடன்பாடில்லை. எனக்கு தமிழ் கலாச்சாரம் ரொம்ப பிடிக்கும். (இத்தனைக்கும்இவர் கன்னடப் பெண்) நான் டிவி தொடர்களில் நன்றாக நடிப்பதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.
நான் சினிமாவிற்கு நடிக்க வருவதற்கு முன்பு நடிகர் அரவிந்த் சாமியின் ரசிகை. அவரது நடிப்பு எனக்கு ரொம்ப பிடிக்கும். நடிகர் விஜயகாந்த் புதிதாக கட்சிஆரம்பித்துள்ளது எனக்கு மகிழ்ச்சியாக உள்ளது. அவருக்கு எனது ஆதரவை அளிப்பேன்.
எனது திருமணம் குறித்து இப்போது எந்த முடிவும் இல்லை. அதே சமயத்தில் நான் யாரையும் காதலிக்கவில்லை என்றார் கெளசல்யா.
சின்னத் திரையில் ஒரு நாள் நடிப்புக்கு ரூ. 40,000 வசூல் செய்கிறார் கெளஸ்.