twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    அடுத்தடுத்து இரண்டு சமுத்திரக்கனி படங்களில் நடித்து வருகிறார் அதுல்யா

    |

    சென்னை : தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகைகளூல் மிக முக்கியமானவர் அதுல்யா ரவி ,கோயம்புத்தூரை சொந்த ஊராக கொண்ட அதுல்யா ரவி ,தனது கல்லூரி காலங்களில் தனது நண்பர்களுடன் சேர்ந்து சில குறும்படங்களில் நடித்து வந்தார் .அதன் பின் அவரது ஒரு குறும்படத்தை இயக்கிய இயக்குனரான சிவராஜ் அதே குறும்பட குழுவை வைத்து ஒரு பெரிய படத்தை இயக்க ஆரம்பித்தார் .

    அந்த படத்தில் கேஜி மற்றும் அதுல்யா இனைந்து நடித்தனர் .சிவ்ராஜ் அந்த படத்தை இயக்கியது மட்டுமின்றி படத்திற்கு ஒளிப்பதிவு ,படத்தொகுப்பும் செய்திருந்தார்.அந்த படத்தை தன் நண்பருடன் சேர்ந்து தயாரித்தும் இருந்தார்.காதல் கண் கட்டுதே என்ற அந்த படம் 2017ல் வெளியாகி நல்ல வெற்றியை பெற்றது .

    kovai girl athulya becomes favorite to new comers
    அந்த படத்திற்கு பிறகு அதுல்யாவிற்கு பல வாய்ப்புகள் தேடிவந்தது. அதற்கு பிறகு ஏமாலி ,நாகேஷ் திரையரங்கம் ,சுட்டு பிடிக்க உத்தரவு ஆகிய படங்களில் நடித்து வந்தார் .அதுல்யாவிற்கு காதல் கண் கட்டுதே படத்திற்கு பிறகு வெளிவந்த எந்த படமும் வெற்றி படம் இல்லை என்றாலும் ,அவரின் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் அவரை கொண்டாடுவதை நிறுத்தவில்லை .தனது சமூக வலைதள பக்கங்களில் மிகவும் ஆக்டிவாக இருக்கும் அதுல்யா தவறாமல் தனது செயல்களையும் போட்டோசூட்களையும் பதிவேற்றி விடுவார் .
    kovai girl athulya becomes favorite to new comers
    இப்போது பல படங்களில் நடிகையின் இன்ஸ்டாகிராம் ரசிகர்கள் கணக்கை வைத்து தான் படங்களே கிடைக்கிறது என்று சொல்லலாம் .அந்த அளவுக்கு இன்றளவில் சமூக வலைதளம் என்பது ஒரு நடிகைக்கு இன்றியமையாத ஒன்றாக மாறிவிட்டது .அதில் தெளிவாக உள்ள அதுல்யா தனது சமூக வலைத்தளங்களில் உள்ள ரசிகர்களுக்கு சரியான முறையில் அன்பை பகிர்ந்து விடுகிறார் .
    kovai girl athulya becomes favorite to new comers
    அதுல்யா ரவி அடுத்ததாக நாடோடிகள் 2 மற்றும் அடுத்த சாட்டை படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் ,இந்த இரண்டு படங்களுமே சமுத்திரக்கனி தயாரிக்கும் படங்களாகும் .ஏமாளி படத்தின் மூலம் சமுத்திரக்கனிக்கு அறிமுகமான அதுல்யா தனது அழகிய தோற்றத்தாலும் மற்றும் சரியான நடிப்பினால் தனது வாய்ப்புகளை சமுத்திரக்கனியிடம் இருந்து பெற்றுள்ளார்.

    அதுல்யா என்றால் யா யா ஓகே ஓகே என்று சொல்லும் ஹீரோக்களும் தயாரிப்பாளர்களும் பெருகி வருகின்றனர். வாய்ப்புகளை இறுக்கமாக கட்டி பிடிக்க வேண்டும் .வெற்றி வாகை சூட வேண்டும் . ஆள் தி பெஸ்ட் அதுல் .

    English summary
    tamil cinema industry has lot of actors from Coimbatore and they have succeeded too the core in various fields of cinema. in that list now talk of the town becomes athulya and she is always engaged with new good scripts and different projects. athulya is always attractive .
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X