Don't Miss!
- News EVM ஓட்டுகளை VVPAT ஸ்லிப் உடன் சரிபார்ப்பதை கட்டாயமாக்க கோரி வழக்கு: விசாரிக்க மறுத்த சென்னை ஐகோர்ட்
- Sports தோனியை சமாதானப்படுத்த முடியாது.. அந்த விஷயத்திற்கு ரிஷப் பண்ட் தான் சரி.. ரோகித் சர்மா கலகல!
- Automobiles ரூ6 லட்சம் தான் கார் விலை, 4 ஸ்டார் ரேட்டிங்கும் இருக்குது! ஆனா சேல்ஸ் சரியாக ஆகல! என்ன கார் தெரியுமா?
- Lifestyle இந்த முகலாய அரசர் வாழ்க்கை முழுக்க கங்கை நீரை மட்டும்தான் குடிச்சாராம்... அதுக்கான வினோத காரணம் என்ன தெரியுமா?
- Finance இப்படியொரு திட்டம் இருப்பது தெரியுமா?! இதுல மட்டும் முதலீடு செய்யுங்கள்.. பணம் கொட்டும்..!
- Technology பாதிக்கு பாதி விலையில் பிராண்டட் AC-க்கள்.. முழுசா 52% டிஸ்கவுண்ட்.. பட்டிதொட்டி எங்கும் ஆர்டர் பறக்குது!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
- Travel தமிழ்நாட்டில் தேனிலவு செல்வதற்கு ஏற்ற குளிர்ச்சியான அழகான மலைவாசஸ்தலங்கள்!
#KozhikodeAirCrash ஷாருக்கான் முதல் ஏ.ஆர்.ரஹ்மான் வரை.. விமான விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி
திருவனந்தபுரம்: கோழிக்கோடு விமான விபத்து குறித்து அறிந்த இந்திய திரை பிரபலங்கள் மற்றும் பொதுமக்கள் #KozhikodeAirCrash என்ற ஹாஷ்டேக்கில் தங்களின் ஆழ்ந்த இரங்கல்களையும் காயம் அடைந்தவர்கள் பிழைக்கவும் பிரார்த்தனை செய்து வருகின்றனர்.
பாலிவுட்டின் முன்னணி நடிகர் ஷாருக்கான் முதல் இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான் வரை தங்களின் இரங்கல்களையும் பிரார்த்தனைகளையும் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
கேரள திரையுலக பிரபலங்கள் இந்த விபத்தால் மிகுந்த அதிர்ச்சிக்குள்ளாகி உள்ளனர்.
ஆழ்ந்த இரங்கல்
பாலிவுட் நடிகர் ஷாருக்கான் கோழிக்கோடு காரிப்பூர் விமான நிலையத்தில் நேற்று இரவு நடந்த கோர விபத்தில் 19பேர் பலியாகி உள்ள செய்தியை அறிந்து மிகவும் வருத்தப்பட்டு ட்வீட் போட்டுள்ளார். ஏர் இந்தியா விமானத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்துக்கு ஆழ்ந்த இரங்கல் என்றும், அன்பானவர்களை இழந்தவர்களுக்காக பிரார்த்தனை செய்கிறேன் என்றும் பதிவிட்டுள்ளார்.
இதுவும் கடந்து போகும்
இந்த 2020ம் ஆண்டு எண்ணற்ற மக்கள் பரிதாபமாக பல்வேறு பேரழிவுகளால் உயிரிழந்து வருகின்றனர். கேரளாவில் நேற்று மட்டும் நிலச்சரிவு, கொரோனா பாதிப்பு, விமான விபத்து என 46 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்நிலையில், விமான விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்கள் அந்த சோகத்தில் இருந்து மீண்டு வர தனது பிரார்த்தனைகள் என்றும், இதுவும் கடந்து போகும் என்றும் பதிவிட்டுள்ளார்.
மிகவும் சோகமான நாள்
கோழிக்கோடு விமான விபத்து மற்றும் ராஜாமாலா நிலச்சரிவில் உயிரிழந்தவர்களின் ஆத்மா சாந்தியடையவும், அவர்களது குடும்பத்தார் அந்த துயரில் இருந்து மீளவும் தனது பிரார்த்தனைகள் என மலையாள நடிகர் பிருத்விராஜ், இரு விபத்துகளின் புகைப்படங்களையும் பதிவிட்டு, இது ஒரு சோகமான நாள் என ட்வீட் செய்துள்ளார்.
மகேஷ் பாபு
கேரளாவில் நேற்று பெய்த கனமழையால் விமானம் தரையிறங்க முடியாமல் தவித்து வந்துள்ளது. முதல் முறை தரையிறங்கும் முயற்சி தோல்வி அடைந்த நிலையில், இரண்டாம் முறை தரையிறங்கும் போது, எதிர்பாராத விதமான விமானத்தின் முன் டயர் வெடித்து விபத்துக்குள்ளானதில் 180 பயணிகளுடன் சென்ற விமானம் இப்படியொரு கோர விபத்தை சந்தித்துள்ளது. 40க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர். அவர்கள் விரைவில் குணமடைய வேண்டும் என்றும், உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கல் என்றும் மகேஷ் பாபு பதிவிட்டுள்ளார்.