Don't Miss!
- Sports IPL Classics - 2010 சீசன் அரையிறுதியில் CSK வென்றது எப்படி? பலம் வாய்ந்த டெக்கான் அணியுடம் மோதிய கதை
- News வேகும் வெயிலிலும்.. "வெறுப்புக்கு" ஓட்டு போடாதீர்கள் பதாகையுடன்.. தெரு தெருவாக சுற்றும் முதியவர்
- Technology BSNL தான்யா டாப்பு.. Jio-வுக்கும் Airtel-லுக்கும் ஆப்பு.. 200 ரூபாய்க்குள் 70 நாள் வேலிடிட்டி.. எந்த திட்டம்?
- Lifestyle கால்களில் இந்த அறிகுறிகள் தெரியுதா? அப்ப சிறுநீரக நோய் இருக்கு-ன்னு அர்த்தம்.. உஷார்...
- Finance 6 மாதங்களில் 73% வளர்ச்சி.. ஜியோ ஃபைனான்சியல் சர்வீசஸ் பங்குகள் அள்ளிக் கொடுத்த லாபம்..!
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
- Automobiles அரபு நாடுகளுக்கு ஆப்பு வைக்கும் இந்தியா... அவங்க பொழப்புல மொத்தமா மண்ணை அள்ளி போட்டுட்டாங்க...
சல்மான் வேண்டாம், அபிஷேக்கை கட்டிக்கோ: ஐஸ்வர்யா ராய்க்கு அட்வைஸ் செய்தது யார் தெரியுமா?
மும்பை: சல்மான் கான் வேண்டாம் என்றும், வயதில் சிறியவராக இருந்தாலும் பரவாயில்லை அபிஷேக் பச்சனை திருமணம் செய்து கொள்ளுமாறும் ஐஸ்வர்யா ராய்க்கு அறிவுரை வழங்கியது அவர் தந்தை தானாம்.
பாலிவுட் நடிகை ஐஸ்வர்யா ராயின் தந்தை கிருஷ்ணராஜ் ராய் உடல்நலக்குறைவு காரணமாக மும்பை லீலாவதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். கடந்த செவ்வாய்க்கிழமை இரவு முதல் அவர் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.
ஐஸ்வர்யா ராய்க்கு தந்தையாக மட்டும் அல்ல நல்ல தோழனாக, வழிகாட்டியாக இருந்து வருபவர் கிருஷ்ணராஜ் ராய்.
ஐஸ்வர்யா
தனது தந்தையின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால் ஐஸ்வர்யா சரியாக சாப்பிடாமல், தூங்காமல் அழுது கொண்டு இருப்பதாக அவருக்கு நெருக்கமானவர்கள் தெரிவித்துள்ளனர்.
சல்மான்
ஐஸ்வர்யா ராய் நடிகர் சல்மான் கானை காதலித்தது அனைவருக்கும் தெரியும். சல்மான் உனக்கு வேண்டாம், சரிபட்டு வர மாட்டார் என்று அவருக்கு அறிவுரை வழங்கியது கிருஷ்ணராஜ் ராயாம்.
அபிஷேக் பச்சன்
அபிஷேக் பச்சன் தன்னை விட வயதில் சிறியவர் மற்றும் பாலிவுட்டிலும் நமக்கு நிகர் இல்லை அவரை மணப்பதா, வேண்டாமா என்று ஐஸ் குழம்பியபோது அவரை திருமணம் செய்யுமாறு அட்வைஸ் செய்தது கிருஷ்ணராஜ் தான்.
தந்தை செல்லம்
ஐஸ்வர்யா தனது தந்தையின் செல்லமாம். எதுவாக இருந்தாலும் தந்தையிடம் தான் முதலில் கூறுவாராம். திருமணத்திற்கு பிறகும் எந்த பிரச்சனையாக இருந்தாலும் தந்தையிடம் அறிவுரை கேட்பாராம்.