Don't Miss!
- News அந்த ஜூஸ், மோர் தான் காரணமா? மயக்கம், நெஞ்சு வலி.. விஷ முறிவு மருந்து எடுத்துக்கொண்ட மன்சூர் அலிகான்
- Finance மத்திய நிதியமைச்சகம் முக்கிய அறிவிப்பு.. அதுவும் எலான் மஸ்க் இந்தியா வரும் நேரத்தில்.. வாவ்..!
- Lifestyle இந்த 4 ராசிக்காரங்க எப்போதும் மற்றவர்களுக்கு ரகசியமாக உதவும் பாதுகாப்பு தேவதைகளாக இருப்பார்களாம்...!
- Sports தோனியிடம் கற்க ஒன்றுமில்லை.. முஸ்தஃபிசுர் ரஹ்மானுக்கு அழைப்பு.. வார்த்தையை விட்ட பிசிபி நிர்வாகி!
- Technology எப்படி புதுசு புதுசா யோசிக்கிறாங்க.. Zomato அறிமுகம் செய்த புதிய சேவை.. என்ன தெரியுமா?
- Automobiles ஐபிஎல்-இல் வேண்டுமாயின் கதை வேறயாக இருக்கலாம்!! இந்த விஷயத்தில் சென்னையை விட பெங்களூர் தான் டாப்!
- Education சூப்பர் சாதனை....தொழிலாளர் நலத்துறை ஆணையரின் மகள் யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி
- Travel தமிழ்நாட்டில் தேனிலவு செல்வதற்கு ஏற்ற குளிர்ச்சியான அழகான மலைவாசஸ்தலங்கள்!
ஒட்டகச்சிவிங்கியுடன் போட்டோ எடுத்து ஊர் வம்பை விலைக்கு வாங்கிய நடிகை!
பாலிவுட் நடிகை புதிய போட்டோ சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது
Recommended Video
மும்பை: ஒட்டகச்சிவிங்கியுடன் போஸ் கொடுத்தற்காக பாலிவுட் நடிகை க்ரித்தி சனோனை நெட்டிசன்கள் திட்டிவருகின்றனர்.
சினிமாவில் விலங்குகள் பறவைகள் துன்புறுத்தப்படுவதை சட்டம் அனுமதிப்பதில்லை. அதனால் தான் உரிமைத்துறப்பு வாசகம் போடப்படுகிறது.
பாலிவுட் நடிகை க்ரித்தி சனோன் ஒரு பத்திரிகைக்கு கொடுத்த போஸ் பார்வையாளர்களை ஆத்திரமடையச் செய்துள்ளது.
அவர் காஸ்மாபொலிடன் இந்தியா என்ற ஆங்கில ஃபேஷன் பத்திரிகைக்கு போஸ் கொடுத்துள்ளார். அடர் பழுப்பு நிற டாப், தங்க நிற பேண்ட் அணிந்து, க்ரித்தி நிற்கிறார். அவருக்கு மேலே ஒரு ஒட்டகச்சிவிங்கி தொங்கிக்கொண்டிருக்கிறது
அது பார்ப்பதற்கு அப்படியே ஒட்டகச்சிவிங்கி உயிருடன் தொங்கிக் கொண்டிருப்பது போலவும் அதற்கு கீழே நின்று க்ரித்தி செக்ஸியாக போஸ் கொடுப்பது போலவும் உள்ளது.
இன்ஸ்டாகிராமில் இந்த போட்டோவைப் பார்த்த நெட்டிசன்கள், அது தொங்குகிறதா அல்லது மிதக்கிறதா, உனக்கு மனசாட்சி இல்லையா, இப்படி போஸ் கொடுக்க வெட்கமாக இல்லையா, உயிருடன் இருக்கும் விலங்கை இப்படியா கொடுமைப்படுத்துவீர்கள்..?இதற்கு மன்னிப்பு கேட்டே ஆகவேண்டும், என கொந்தளிக்க ஆரம்பித்துவிட்டனர்.
கொஞ்சம் தெளிவாக உற்று நோக்கியிருந்தால் இப்படி கோபப்பட்டிருக்க தேவையில்லை. அந்த போட்டோ இங்கிலாந்தில் உள்ள ஐயின்ஹோ பார்க் அருங்காட்சிகத்தில் எடுக்கப்பட்டுள்ளது.
டாக்ஸிடெர்மி என்ற முறையில் பதப்படுத்தப்பட்ட ஒட்டகச்சிவிங்கியைத் தான் போட்டோ ஷூட்டுக்கு பயன்படுத்தியுள்ளனர். டாக்ஸிடெர்மி என்பது, இயற்கை மரணம் அடைந்த விலங்குகளை பதப்படுத்தி ஆராய்ச்சி மற்றும் காட்சிக்காக வைக்கப் பயன்படும் ஒரு முறையாகும். மேலும், பலூன் முலம் ஒட்டகச்சிவிங்கி மிதப்பதாகவும், அந்த பத்திரிகை நிறுவனம் தெளிவாக குறிப்பிட்டுள்ளது.
A post shared by Cosmopolitan India (@cosmoindia) on