Don't Miss!
- Sports ரிஷப் பண்ட்க்கு 2 முறையும் லக் இல்ல.. தொடர்ந்து 2வது வெற்றியை பெற்ற ராஜஸ்தான்.. ரியான்,ஆவேஷ் அபாரம்
- News திடீர் மாரடைப்பு.. பிரபல தாதா முக்தார் அன்சாரி உயிரிழப்பு.. பதற்றம் - 144 தடை உத்தரவு
- Lifestyle வரப்போகிற சூரிய கிரகணம் இந்த 4 ராசிக்காரங்களுக்கு பெரிய துரதிர்ஷ்டத்தை தரப்போகுதாம்..ரொம்ப ஜாக்கிரதையா இருங்க!
- Automobiles பிரசார வேனை சொகுசு பங்களா போல செட்டப் செய்த கமலஹாசன்! இதை பார்க்கவே கூட்டம் குவியுமே!
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
- Technology குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
ஒட்டகச்சிவிங்கியுடன் போட்டோ எடுத்து ஊர் வம்பை விலைக்கு வாங்கிய நடிகை!
பாலிவுட் நடிகை புதிய போட்டோ சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது
Recommended Video
மும்பை: ஒட்டகச்சிவிங்கியுடன் போஸ் கொடுத்தற்காக பாலிவுட் நடிகை க்ரித்தி சனோனை நெட்டிசன்கள் திட்டிவருகின்றனர்.
சினிமாவில் விலங்குகள் பறவைகள் துன்புறுத்தப்படுவதை சட்டம் அனுமதிப்பதில்லை. அதனால் தான் உரிமைத்துறப்பு வாசகம் போடப்படுகிறது.
பாலிவுட் நடிகை க்ரித்தி சனோன் ஒரு பத்திரிகைக்கு கொடுத்த போஸ் பார்வையாளர்களை ஆத்திரமடையச் செய்துள்ளது.
அவர் காஸ்மாபொலிடன் இந்தியா என்ற ஆங்கில ஃபேஷன் பத்திரிகைக்கு போஸ் கொடுத்துள்ளார். அடர் பழுப்பு நிற டாப், தங்க நிற பேண்ட் அணிந்து, க்ரித்தி நிற்கிறார். அவருக்கு மேலே ஒரு ஒட்டகச்சிவிங்கி தொங்கிக்கொண்டிருக்கிறது
அது பார்ப்பதற்கு அப்படியே ஒட்டகச்சிவிங்கி உயிருடன் தொங்கிக் கொண்டிருப்பது போலவும் அதற்கு கீழே நின்று க்ரித்தி செக்ஸியாக போஸ் கொடுப்பது போலவும் உள்ளது.
இன்ஸ்டாகிராமில் இந்த போட்டோவைப் பார்த்த நெட்டிசன்கள், அது தொங்குகிறதா அல்லது மிதக்கிறதா, உனக்கு மனசாட்சி இல்லையா, இப்படி போஸ் கொடுக்க வெட்கமாக இல்லையா, உயிருடன் இருக்கும் விலங்கை இப்படியா கொடுமைப்படுத்துவீர்கள்..?இதற்கு மன்னிப்பு கேட்டே ஆகவேண்டும், என கொந்தளிக்க ஆரம்பித்துவிட்டனர்.
கொஞ்சம் தெளிவாக உற்று நோக்கியிருந்தால் இப்படி கோபப்பட்டிருக்க தேவையில்லை. அந்த போட்டோ இங்கிலாந்தில் உள்ள ஐயின்ஹோ பார்க் அருங்காட்சிகத்தில் எடுக்கப்பட்டுள்ளது.
டாக்ஸிடெர்மி என்ற முறையில் பதப்படுத்தப்பட்ட ஒட்டகச்சிவிங்கியைத் தான் போட்டோ ஷூட்டுக்கு பயன்படுத்தியுள்ளனர். டாக்ஸிடெர்மி என்பது, இயற்கை மரணம் அடைந்த விலங்குகளை பதப்படுத்தி ஆராய்ச்சி மற்றும் காட்சிக்காக வைக்கப் பயன்படும் ஒரு முறையாகும். மேலும், பலூன் முலம் ஒட்டகச்சிவிங்கி மிதப்பதாகவும், அந்த பத்திரிகை நிறுவனம் தெளிவாக குறிப்பிட்டுள்ளது.
A post shared by Cosmopolitan India (@cosmoindia) on