Don't Miss!
- Automobiles சீன நிறுவனம் கேட்ட முக்கிய சான்றை வழங்கிய இந்தியா! மத்த நாடுகள வளச்சு போட்டதபோல இந்தியாவையும் வளச்சுபோட போகுது
- Lifestyle Today Rasi Palan 19 April 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் நிலுவையிலுள்ள பணிகளை முடிக்க முயற்சிப்பது நல்லது...
- News ‛‛70 லட்சம் ஓட்டு''.. கடைசி வரை மவுனம் கலைக்காத விஜய்! இன்று நடக்கப்போகும் மாற்றம்? யாருக்கு லாபம்?
- Sports IPL Classics - 87 ரன்களில் ஆல் அவுட்டான மும்பை.. பஞ்சாப் அணியில் பிரவீன்குமார் அபார பவுலிங்
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Technology வெயிட்டிங் ஓவர்.. Sony கேமரா.. 256ஜிபி மெமரி.. வருகிறது புதிய Vivo 5ஜி போன்.. எந்த மாடல்?
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
க்ரிஷ் 3.... பத்துநாள் வசூல் எவ்ளோ தெரியுமா?
பாலிவுட் பாக்ஸ் ஆபீஸை அதிர வைத்துக் கொண்டிருக்கிறது ஹ்ரித்திக் ரோஷனின் புதிய படமான க்ரிஷ் 3-ன் வசூல்.
ஜஸ்ட் பத்தே நாட்களில் 206 கோடியைக் குவித்து புதிய சாதனையைப் படைத்துள்ளது.
இதன் மூலம் இந்திய திரைப்பட வரலாற்றில் உள்நாட்டு பாக்ஸ் ஆபீசில் இரண்டாவது வார வசூலில் 200கோடியைத் தாண்டிய மூன்றாவது படம் என்ற பெருமையை இந்தப் படம் பெற்ற்றுள்ளது.
இதற்கு முன் 3 இடியட்ஸ், சென்னை எக்ஸ்பிரஸ் போன்ற படங்கள் இந்த சாதனையை எட்டின.
கடந்த திங்கட்கிழமை மட்டும் இப்படத்தின் ஒரு நாள் வசூல் ரூ 35.91 கோடி. வார நாளில் இவ்வளவு வசூல் செய்திருப்பது புதிய சாதனையாகப் பார்க்கப்படுகிறது.
க்ரிஷ் வரிசையின் முந்தைய படங்களை ஒப்பிடும்போது அந்தப் படங்களில் குழந்தைகளை மிகவும் கவர்ந்த ஜாதூ கதாபாத்திரத்தை இதில் இயக்குநர் ராகேஷ் ரோஷன் (ஹ்ரித்திக் ரோஷனின் தந்தை) சேர்க்கவில்லை. ஆயினும், இந்தப் படம் பரவலாக அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. பாராட்டப்பட்டு வருகிறது.
க்ரிஷ் வரிசைப் படங்களின் வெற்றிக்கு முக்கிய காரணம் குழந்தைகளே. அவர்கள்தான் தங்கள் பெற்றோர்களை வற்புறுத்தி தியேட்டர்களுக்கு அழைத்துச் செல்கின்றனர்.
விழாக்காலம், பரீட்சைகள் இல்லாத நேரம் என்பதால், குடும்பத்தோடு அவுட்டிங் செல்பவர்களின் முதல் தேர்வாக க்ரிஷ் 3 அமைந்துள்ளது.
இந்த வேகத்தில் வசூலைக் குவித்தால், இந்தியாவின் அதிக வசூலைக் குவித்த படம் என்ற பெருமைக்குரிய ரஜினியின் எந்திரனை நெருங்கினாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை!