Don't Miss!
- Lifestyle இந்தியாவிலிருந்து ஆங்கிலேயர்கள் திருடிட்டு போன விலைமதிப்பில்லாத பொக்கிஷங்கள்... இதோட மதிப்பு என்ன தெரியுமா?
- News ஏப்ரல் 19ம் தேதி சம்பளத்துடன் பொது விடுமுறை: லோக்சபா தேர்தல் குறித்து தமிழக அரசு முக்கிய அறிவிப்பு
- Automobiles காருக்கு இன்சூரன்ஸ் எடுக்கும் போது இதெல்லாம் செக் பண்ணலேன்னா காசெல்லாம் வீணா போயிடும்!
- Finance தேர்தலில் போட்டியிட பணமில்லாத நிர்மலா சீதாராமன் சொத்து மதிப்பு என்ன தெரியுமா..?
- Technology ரூ.17,000 பட்ஜெட்ல பரபரப்பு! 70W சார்ஜிங், 6000mAh பேட்டரி, 24GB ரேம், 1TB மெமரி, 5G ஆதரவு.. ஏப்.4 முதல் SALE!
- Sports ரூ.8.4 கோடியை மறந்துவிடு.. உன்னோட வேலை அதுமட்டும் தான்.. தோனியின் வார்த்தை குறித்து சிஎஸ்கே சிங்கம்!
- Education சென்னையின் பெருமைமிகு கல்லூரிகளில் ஒன்றாகத் திகழும் டி.ஜி.வைஷ்ணவ் கல்லூரி...!!
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
25வது ஆண்டில் கேஎஸ் ரவிக்குமார்- பிரமாண்ட பாராட்டு விழா
சென்னை: இயக்குநர் கேஎஸ் ரவிக்குமார் சினிமாவுக்கு வந்து 25 ஆண்டுகள் ஆவதையொட்டி அவருக்கு பிரமாண்ட பாராட்டு விழா நடத்தப்பட உள்ளது.
தமிழ் சினிமாவில் இருபத்தைந்து வருடங்களாக இயக்குநராக வலம் வருபவர் கேஎஸ் ரவிக்குமார்.
புரியாத புதிர் என்ற படம்தான் இயக்குநராக அவருக்கு முதல் படம். அதன் பிறகு சூப்பர் ஸ்டார் ரஜினி, கமல் உள்பட அத்தனை நட்சத்திரங்களையும் வைத்து படங்கள் இயக்கிவிட்டார். சூப்பர் ஸ்டாருடன் நடிகர் திலகம் சிவாஜியை வைத்து படையப்பாவையும் இயக்கினார்.
இந்த ஆண்டு, திரைத்துறையில் அவருக்கு வெள்ளி விழா ஆண்டு. இதனை கொண்டாட பிரமாண்ட விழாவுக்கு ஏற்பாடு செய்துள்ளது ராஜ் டிவி.
இந்த விழா 2014 ஜனவரி 4-ம் ஆண்டு தேதி சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் மாலை 5.30 மணிக்கு நடைபெற உள்ளது.
கே.எஸ்.ரவிகுமாருக்கு நினைவுப் பரிசை வழங்கி கவுரவிக்கிறார் கமல்ஹாஸன்.
விழாவில் திரையுலகை சேர்ந்த பிரபல நட்சத்திரங்கள் பலரும் பங்கேற்கிறார்கள்.