Don't Miss!
- News புறம்போக்கு நிலம்.. நத்தம் இருக்கட்டும்.. புறம்போக்கு நிலத்திற்கு பட்டா வாங்கலாமா? அரசு சொல்வது என்ன
- Technology இனி Signal Weak சிக்கலே இருக்காது.. மொபைல் Settings-ல இதை பண்ணா போதும்.. இன்டர்நெட் ஸ்பீட் சும்மா பிச்சிக்கும்
- Finance வேலைக்கு சேர்ந்த 6 மாசத்திலேயே ரிசைன்.. அனல் பறக்கும் விவாதம்..!
- Automobiles சாதா கிளாஸ் டிக்கெட்டை வாங்கிட்டு முதல் வகுப்பில் பயணிக்கனுமா!! விமான பணி பெண் சொல்லும் மூன்று ரகசிய வழிகள்!
- Lifestyle Today Rasi Palan 26 April 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் வேலை மாற்றத்தைப் பற்றி யோசிக்காமல் இருப்பது நல்லது..
- Sports வாழ்க்கைன்னா ஒரு சில அடிகள் விழத்தான் செய்யும்.. எல்லா போட்டியிலும் வெல்ல முடியாது.. பாட் கம்மின்ஸ்
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
ரஜினியை அடுத்து இயக்கும் கே.எஸ்.ரவிக்குமார்?
சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கோச்சடையானை அடுத்து கே.எஸ். ரவிக்குமார் இயக்கத்தில் நடிக்கப் போவதாக கோலிவுட்டில் பேச்சாகக் கிடக்கிறது.
இயக்குனர் கே.எஸ். ரவிக்குமார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், தீபிகா படுகோனேவை வைத்து ராணா படத்தை இயக்கவிருந்தார். ஆனால் படப்பிடிப்பின் முதல் நாளன்று ரஜினிக்கு உடல் நிலை பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் சிங்கப்பூர் சென்று சிகிச்சை செய்த பிறகு தான் அவருக்கு உடல் நலம் தேறியது.
உடல் நலம் தேறிய பிறகு அவர் தனது இளைய மகள் இயக்கத்தில் நடிக்க தீர்மானித்தார்.
கோச்சடையான்
சௌந்தர்யா இயக்கத்தில் ரஜினி, தீபிகா நடித்துள்ள கோச்சடையான் பட வேலைகள் கிட்டத்தட்ட முடிந்துவிட்டது. படம் வரும் ஜூலை மாதத்தில் ரிலீஸ் ஆகும் என்று கூறப்படுகிறது.
கே.வி. ஆனந்த் அல்ல கே.எஸ். ரவிக்குமார்
கோச்சடையான் வேலை முடிந்துவிட்டதால் ரஜினி அடுத்த படம் பற்றி யோசிக்க ஆரம்பித்துவிட்டார். இந்நிலையில் அவர் கே.வி. ஆனந்த் இயக்கத்தில் நடிப்பார் என்று கூறப்பட்டது. ஆனால் அது வெறும் வதந்தி என்று தெரிய வந்தது. இந்நிலையில் அவர் கே. எஸ். ரவிக்குமார் இயக்கத்தில் நடிக்கப் போவதாக பேச்சாகக் கிடக்கிறது.
மீண்டும் வரும் ராணா
ரவிக்குமார் சாமி படத்தை இந்தியில் ரீமேக் செய்து வருகிறார். இந்த படத்தை முடித்துவிட்டு ரஜினியை வைத்து மீண்டும் ராணா படத்தை எடுக்கவிருக்கிறார் என்று கூறப்படுகிறது.