Don't Miss!
- Sports IPL 2024 :"போர் வீரன்" ஆட்டத்தால் தோல்வியடைந்த சிஎஸ்கே.. கடைசி 5 ஓவரில் நடந்த மேஜிக்.. லக்னோ வெற்றி
- Lifestyle வக்ர நிவர்த்தி அடையும் புதன்: ஏப்ரல் 25 முதல் இந்த 3 ராசிக்கு சூப்பரா இருக்கப்போகுது...
- News காங்கிரஸ் வென்றால்.. நமது நாட்டில் ஷரியா சட்டத்தை அமல்படுத்துவார்கள்.. யோகி ஆதித்யநாத் பகீர்
- Automobiles இதுல ஒரு பெயரைதான் வைக்க போறாங்களா... அப்ப இதுக்காவே காரை வாங்கலாம்... அப்படி என்ன பெயர் தெரியுமா?
- Finance இந்தியா சிமெண்ட்ஸ் தொழிற்சாலையை வாங்கிய அல்ட்ராடெக் சிமெண்ட்.. அதானி உடன் போட்டி..!!
- Technology வெறும் 2000 ரூபாயில்.. புது Xiaomi கையடக்க கார்மெண்ட் Steamer.. பழைய ஐயன் பாக்ஸை தூக்கி போடுங்க..என்ன ஸ்பெஷல்?
- Education புதுச்சேரியில் பிஎஸ்சி நர்சிங் படிப்பதற்கு நுழைவுத் தேர்வு...!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
ஜேம்ஸ் வசந்தனை எனக்கு சுத்தமா பிடிக்காது! - கே எஸ் ரவிக்குமார் அதிரடி
மாஸ்டர் மகேந்திரனை நினைவிருக்கிறது... இப்போது வளர்ந்து இளைஞர் மகேந்திரன் ஆகிவிட்டார்
அவர் முதல் முறையாக ஹீரோவாக நடித்துள்ள படம் விழா. பாரதிபாலகுமாரன் இயக்கியுள்ள இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா சனிக்கிழமை மாலை நடந்தது.
இதில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட இயக்குநர் கேஎஸ் ரவிக்குமார், படத்தின் இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தனை நேருக்கு நேராகவே விமர்சித்தார், அதாவது கோட் சூட் போட்டுக் கொண்டு முன்பு டிவியில் அவர் திரைவிமர்சனம் செய்ததற்காக!
கேஎஸ் ரவிக்குமார் பேச்சிலிருந்து...
மாஸ்டர் மகேந்திரனை 'நாட்டாமை' படத்தில் 3 வயசு பையனா அறிமுகப்படுத்தினேன். இப்போ ஹீரோவா வளர்ந்திருக்கான். வாழ்த்துகள்.
இந்தப்படத்தோட இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தனை எனக்கு முதல்ல சுத்தமா பிடிக்காது. ஏன்னா ஒரு டிவியில கோட் போட்டுக்கிட்டு கால் மேல கால் போட்டு என்னமோ சினிமாவையே அவர்தான் கண்டுபிடிச்ச மாதிரி பேசுவார். ரொம்ப கடுப்பா இருக்கும்.
அது எவ்ளோ நல்ல படமா இருந்தாலும் கடைசியில தெனாலி - சுண்டெலி, பஞ்ச தந்திரம் - மாய மந்திரம்னு திட்டுவாரு. நல்லா ஓடற படத்தைக் கூட இப்படித்தான் கமெண்ட் அடிப்பாரு.
அதையெல்லாம் இவரே எழுதினாரா அல்லது வேற ஆள் எழுதிக் கொடுத்துப் படிச்சாரா தெரியல.. ஆனா கோபம் இவர் மேலதான்.
ஆனா அவரே 'சுப்ரமணியபுரம்' படத்தில் அத்தனை பேரையும் தலையாட்ட வெச்சிட்டார். அவருக்குள்ள இப்படி ஒரு இசைத் திறமை இருப்பது தெரியாத காலகட்டத்தில் அவரை வெறுத்தேன். இப்போது ரசிக்க வச்சிட்டார்.
நல்லவேளையா மியூசிக் டைரக்டரா ஆனதுக்கப்புறம் அவர் அந்த கோட்டை கழட்டி வெச்சிட்டு வந்திருக்கார், நல்லது," என்றார் ரவிக்குமார்.
இதையெல்லாம் என்ன ரியாக்ஷன் காட்டுவது என்றே தெரியாமல் அமைதியாகக் கேட்டுக் கொண்டிருந்தார் ஜேம்ஸ் வசந்தன்.