Don't Miss!
- News ராமஜெயம் நினைவு நாள்.. 12 ஆண்டுகளாக விலகாத மர்மம்.. பிரச்சாரத்திற்கு இடையே மாலையுடன் போன கேஎன் நேரு!
- Sports "3 வருடத்தில் ஐபிஎல் தொடரே இருக்காது".. ஆனால் நடந்தது இதுதான்.. அஸ்வின் அதிரடி
- Lifestyle 150 ஆண்டுகளுக்கு முன்னாடியே இந்தியாவின் முதல் செல்பியை தனது மனைவியுடன் எடுத்தது இந்த ராஜாதானாம்..போட்டோ உள்ளே!
- Finance கௌதம் அதானி கையில் பணம் விளையாடுது.. ரூ.6,661 கோடி புதிய முதலீடு..!!
- Automobiles இந்தியாவே இந்த ஸ்கோடா காருக்காக தான் வெயிட்டிங்! விலையை கேட்டா ஆச்சரியப்படுவீங்க!
- Technology வாவ்.. சும்மா அள்ளுது.. 6000எம்ஏஎச் பேட்டரி.. 50எம்பி கேமரா.. 128ஜிபி மெமரி.. எந்த மாடல்?
- Education சென்னையின் பெருமைமிகு கல்லூரிகளில் ஒன்றாகத் திகழும் டி.ஜி.வைஷ்ணவ் கல்லூரி...!!
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
பார்த்திபனின் குண்டக்க மண்டக்க இயக்குநர் மரணம்..சோகத்தில் திரைத்துறை!
சென்னை : பார்த்திபன் நடித்த குண்டக்க மண்டக்க பட இயக்குநர் எஸ். அசோகன் திடீரென மரணமடைந்துள்ளார்.
திரைத்துறையில் இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. பலரும் அவரின் குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளனர்.
இயக்குநர் எஸ் அசோகனின் இறுதிச்சடங்கு இன்று நடைபெற உள்ளது.
ரிஸ்க் எடுக்கறதெல்லாம் எனக்கு ரஸ்க் சாப்பிடுற மாதிரி..நடிகர் சூரியின் அடுத்த அதிரடி!
இயக்குநர் எஸ் அசோகன்
2005ம் ஆண்டு வெளியானத் திரைப்படம் குண்டக்க மண்டக்க இந்த படத்தில் பார்த்திபன்,நடிகர் வடிவேலு, ராய் லட்சுமி ஆகியோர் நடித்திருந்தனர். பார்த்திபனின் வழக்கமான குண்டக்க மண்டக்க கேள்விகள் படம் முழுக்க இடம் பெற்று இத்திரைப்படம் கலவையான விமர்சனத்தை பெற்றிருந்தது. இந்த படத்தை இயக்குநர் அசோகன் இயக்கி இருந்தார்.
திடீர் நெஞ்சுவலி
தமிழச்சி, பொன்விழா குண்டக்க மண்டக்க உள்ளிட்ட திரைப்படங்களுக்குக் கதை , திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியுள்ளார் எஸ். அசோகன். சென்னை வளசரவாக்கம் பிருந்தாவன் நகரில் வசித்து வந்த எஸ்.அசோகனுக்கு இன்று காலை திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது.
இறுதிச்சடங்கு
இதையடுத்து, அருகிலிருந்த மருத்துவமனையில் அழைத்து சென்று பரிசோதித்த போது அசோகன் மாரடைப்பால் உயிரிழந்துள்ளது தெரியவந்துள்ளது. அவரது உடல் உடல் சென்னையில் இருந்து அவரது சொந்த ஊரான திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அடுத்த உள்ளிக்கோட்டை தெற்கு தெரு இல்லத்தில் பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு இறுதிச்சடங்கு நடைபெற்றன.
ஆழ்ந்த இரங்கல்
இயக்குநர் எஸ் அசோகன் அவர்களுக்கு ராஜலெட்சுமி என்ற மனைவியும் பகவத் கீதன் என்ற மகனும் உள்ளார்கள். இயக்குநர் அசோகன் அவர்களில் மறைவுக்கு திரைத்துறை பிரபலங்கள் பலரும் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.