Just In
- 3 hrs ago
கண்களால் வசியம் செய்யும் ஜான்வி கபூர்… மஸ்காரா போட்டு மயக்குறியே என வர்ணிக்கும் ரசிகர்கள் !
- 3 hrs ago
உச்சகட்ட கவர்ச்சியில் அட்டகாசம் செய்யும் சஞ்சிதா ஷெட்டி…விதவிதமான போஸால் திணறும் இணையதளம்!
- 5 hrs ago
பொங்கலுக்கு வெளியான தமிழ் படங்களின் ஓர் பார்வை !
- 6 hrs ago
மாஸ்டர் மகேந்திரனின் ‘நம்ம ஊருக்கு என்னதான் ஆச்சு’… டிரைலரை வெளியிடும் 2 பிரபலங்கள் !
Don't Miss!
- Automobiles
இந்தியாவில் முதல் எலக்ட்ரிக் ஸ்கூட்டரை அறிமுகப்படுத்த தீவிரம்காட்டும் சுஸுகி!! டெல்லியில் மீண்டும் சோதனை
- News
எல்லையில் அத்துமீறல் விவகாரம்... சீனாவை தொடர்ந்து கண்காணித்து வருகிறது இந்தியா..!
- Finance
7வது சம்பள கமிஷன்: அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படியை 4% உயர்த்த மோடி அரசு முடிவு..!
- Lifestyle
பேபி பொட்டேடோ மஞ்சூரியன்
- Sports
சென்னையின் எப்சி -ஈஸ்ட் பெங்கால் அணிகள் பலப்பரிட்சை... வெற்றி யாருக்கு.. காத்திருக்கும் பரபர ஆட்டம்
- Education
ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசு நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
அது என் மகன் அல்ல: பதறிப் போய் விளக்கம் அளித்த டி. ராஜேந்தர்

சென்னை: என் மகன் குறளரசன் பெயரில் வெளியான ட்வீட் உண்மை இல்லை. அது போலி கணக்கு என்று டி. ராஜேந்தர் விளக்கம் அளித்துள்ளார்.
அரசியலே வேண்டாம் என்று ஒதுங்கி இருக்கும் அஜித்தை அரசியலுக்கு வருமாறு அழைத்து இயக்குநர் சுசீந்திரன் ட்வீட் போட்டார். அதை பார்த்த தல ரசிகர்கள் அரசியல் வேண்டாம் அஜித்தே போதும் என்றார்கள்.
இந்நிலையில் சுசீந்திரனின் ட்வீட்டுக்கு பதில் அளிப்பது போன்று சிம்புவின் தம்பி குறளசரன் பெயரில் கமெண்ட் வெளியானது.
அடக்கடவுளே.. இதுக்காகத் தான் விஜய்சேதுபதியும், அவர் மகனும் அடிச்சிக்கிட்டாங்களா?

முதல்வர்
உண்மை சில நேரங்களில் அற்ப நகைச்சுவையாகத் தோன்றும். தீபா பேரவையோடு சேர்ந்து லட்சிய திமுக 234 தொகுதிகளையும் கைப்பற்றும். எங்க அப்பா முதல்வர் ஆவார் என்று குறளசரன் பெயரில் ட்வீட் வெளியானது.

டி. ராஜேந்தர்
மகன் பெயரில் ட்வீட் வெளியானதை பார்த்த டி. ராஜேந்தர் அவசரம் அவசரமாக செய்தியாளர்கள் சந்திப்புக்கு ஏற்பாடு செய்து விளக்கம் அளித்துள்ளார். நானோ, என் மகன் குறளரசனோ ட்விட்டர், ஃபேஸ்புக்கில் கணக்கு வைத்திருக்கவில்லை. பிரபலங்களின் சமூக வலைதள கணக்கில் ப்ளூ டிக் இருந்தால் மட்டுமே அது அவர்களின் கணக்கு என்பது அனைவருக்கும் தெரியும் என்கிறார் டி. ராஜேந்தர்.

துஷ்பிரயோகம்
பலர் பிரபலங்களின் பெயர்களில் போலி கணக்கு துவங்கி அதை தவறாக பயன்படுத்துகிறார்கள். அந்த அடிப்படையில் என் இளைய மகன் குறளரசனின் பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையிலே குர்ஆன் அரசன் என்ற போலி பெயரில் ட்விட்டரில் கமெண்ட் போட்டுள்ளனர். என் இளைய மகன் குறளசரனுக்கும், அரசியலுக்கும் தொடர்பே இல்லை. அவர் வளர்ந்து வரும் திரைப்படக் கலைஞன் என்று டி. ராஜேந்தர் கூறியுள்ளார்.

தேர்தல்
இது நம்ம ஆளு படத்தில் இசையமைப்பாளராக பணியாற்றியுள்ளார். இன்னும் சில படங்களில் இசையமைப்பாளராக பணியாற்றுகிறார். எங்கள் லட்சிய திமுக சட்டமன்ற தேர்தலில் மூன்றாவது அணியை உருவாக்குவோம் என்று கூறியதற்காக என் மகன் பெயரில் ட்வீட் செய்வதா. நாங்கள் எந்த கட்சியுடனும் கூட்டணி வைக்கவில்லை. லதிமுக ஒரு குறிப்பிட்ட கட்சியுடன் கூட்டணி வைத்து சட்டமன்ற தேர்தலில் 234 தொகுதிகளில் போட்டியிட்டு எங்க அப்பா முதல்வராவார் என்று ட்வீட் செய்துள்ளனர். அது தவறான செய்தி. அந்த போலி கணக்கு வைத்துள்ளவர் மீது போலீசாரிடம் புகார் அளிக்க உள்ளேன். குறளரசன் எந்த ட்வீட்டும் செய்யவில்லை என்று டி. ராஜேந்தர் தெரிவித்துள்ளார்.