Don't Miss!
- News வெறிச்சோடிய சென்னை சாலைகள்.. எல்லா பக்கமும் காலி ரோடு.. இதுதான் காரணமா? ஓட்டுப்பதிவு நாளில் இப்படியா
- Lifestyle தினமும் எவ்வளவு சர்க்கரை உட்கொள்வது பாதுகாப்பானது தெரியுமா? இத்தனை ஸ்பூனுக்கு மேல தெரியாம கூட சாப்பிடாதீங்க...
- Technology யாருமே எதிர்பார்க்கல.. 8ஜிபி ரேம்.. 50எம்பி கேமரா.. புதிய Samsung 5ஜி மாடல் அறிமுகம்.. என்ன விலை?
- Finance விப்ரோ ஊழியர்கள் நிலைமை ரொம்ப மோசம்.. என்னவெல்லாம் நடக்குது பாருங்க..!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
- Sports ஹர்திக் பாண்டியாவுக்கு அடுத்த அடி.. கடும் அதிருப்தியில் மும்பை இந்தியன்ஸ் அணியின் அனுபவ வீரர்
- Automobiles ஓட்டு போட வந்த பிரபலங்கள் எந்த கார்களில் வந்தார்கள் தெரியுமா? பாதிபேர் ஒரே மாதிரி கார்ல வந்திருக்காங்க!
- Travel இங்க போறது கொஞ்ச கஷ்டம் தான் – ஆனா வொர்த்! அப்படி ஒரு இயற்கை அழகுகுங்க
அது என் மகன் அல்ல: பதறிப் போய் விளக்கம் அளித்த டி. ராஜேந்தர்
Recommended Video
சென்னை: என் மகன் குறளரசன் பெயரில் வெளியான ட்வீட் உண்மை இல்லை. அது போலி கணக்கு என்று டி. ராஜேந்தர் விளக்கம் அளித்துள்ளார்.
அரசியலே வேண்டாம் என்று ஒதுங்கி இருக்கும் அஜித்தை அரசியலுக்கு வருமாறு அழைத்து இயக்குநர் சுசீந்திரன் ட்வீட் போட்டார். அதை பார்த்த தல ரசிகர்கள் அரசியல் வேண்டாம் அஜித்தே போதும் என்றார்கள்.
இந்நிலையில் சுசீந்திரனின் ட்வீட்டுக்கு பதில் அளிப்பது போன்று சிம்புவின் தம்பி குறளசரன் பெயரில் கமெண்ட் வெளியானது.
அடக்கடவுளே.. இதுக்காகத் தான் விஜய்சேதுபதியும், அவர் மகனும் அடிச்சிக்கிட்டாங்களா?
முதல்வர்
உண்மை சில நேரங்களில் அற்ப நகைச்சுவையாகத் தோன்றும். தீபா பேரவையோடு சேர்ந்து லட்சிய திமுக 234 தொகுதிகளையும் கைப்பற்றும். எங்க அப்பா முதல்வர் ஆவார் என்று குறளசரன் பெயரில் ட்வீட் வெளியானது.
டி. ராஜேந்தர்
மகன் பெயரில் ட்வீட் வெளியானதை பார்த்த டி. ராஜேந்தர் அவசரம் அவசரமாக செய்தியாளர்கள் சந்திப்புக்கு ஏற்பாடு செய்து விளக்கம் அளித்துள்ளார். நானோ, என் மகன் குறளரசனோ ட்விட்டர், ஃபேஸ்புக்கில் கணக்கு வைத்திருக்கவில்லை. பிரபலங்களின் சமூக வலைதள கணக்கில் ப்ளூ டிக் இருந்தால் மட்டுமே அது அவர்களின் கணக்கு என்பது அனைவருக்கும் தெரியும் என்கிறார் டி. ராஜேந்தர்.
துஷ்பிரயோகம்
பலர் பிரபலங்களின் பெயர்களில் போலி கணக்கு துவங்கி அதை தவறாக பயன்படுத்துகிறார்கள். அந்த அடிப்படையில் என் இளைய மகன் குறளரசனின் பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையிலே குர்ஆன் அரசன் என்ற போலி பெயரில் ட்விட்டரில் கமெண்ட் போட்டுள்ளனர். என் இளைய மகன் குறளசரனுக்கும், அரசியலுக்கும் தொடர்பே இல்லை. அவர் வளர்ந்து வரும் திரைப்படக் கலைஞன் என்று டி. ராஜேந்தர் கூறியுள்ளார்.
தேர்தல்
இது நம்ம ஆளு படத்தில் இசையமைப்பாளராக பணியாற்றியுள்ளார். இன்னும் சில படங்களில் இசையமைப்பாளராக பணியாற்றுகிறார். எங்கள் லட்சிய திமுக சட்டமன்ற தேர்தலில் மூன்றாவது அணியை உருவாக்குவோம் என்று கூறியதற்காக என் மகன் பெயரில் ட்வீட் செய்வதா. நாங்கள் எந்த கட்சியுடனும் கூட்டணி வைக்கவில்லை. லதிமுக ஒரு குறிப்பிட்ட கட்சியுடன் கூட்டணி வைத்து சட்டமன்ற தேர்தலில் 234 தொகுதிகளில் போட்டியிட்டு எங்க அப்பா முதல்வராவார் என்று ட்வீட் செய்துள்ளனர். அது தவறான செய்தி. அந்த போலி கணக்கு வைத்துள்ளவர் மீது போலீசாரிடம் புகார் அளிக்க உள்ளேன். குறளரசன் எந்த ட்வீட்டும் செய்யவில்லை என்று டி. ராஜேந்தர் தெரிவித்துள்ளார்.