Don't Miss!
- Technology டீஸரே மிரளுது.. உலக ரசிகர்களை வியப்படைய செய்த Nothing.. புதுசா 2 ப்ராடக்ட்.. என்னென்ன எதிர்பார்க்கலாம்?
- Lifestyle பழங்கால போட்டோக்களில் யாராவது சிரிச்சு நீங்க பாத்திருக்கீங்களா? பார்த்திருக்க வாய்ப்பேயில்லை... ஏன் தெரியுமா?
- Finance சென்செக்ஸ்: வருடத்தின் கடைசி நாள் ரூ.128.8 லட்சம் கோடி லாபம்.. பண மழையில் முதலீட்டாளர்கள்..!!
- News அண்ணாமலை வேட்பு மனுவில் செய்த 2 மிகப்பெரிய தவறு.. திமுக எதுவுமே பேசல.. கொந்தளித்த நாதக வழக்கறிஞர்!
- Travel 2050 வருஷம் வருறதுக்குள்ள உலகத்துல உள்ள இந்த அழகான இடங்கள் எல்லாம் கடலுக்குள்ள போயிடுமாம்!
- Automobiles மாருதியின் இந்த கார்களின் டேங்கை ஃபுல் பண்ணா 1,200கிமீ போகலாமா.. இதுக்காக பிரச்சாரம் செய்யவே தொடங்கிட்டாங்க!
- Sports SRH vs GT : பல்தான்ஸ்.. நமக்கு இவ்வளவு பெரிய சோதனை வந்தது ஏன்? ஓய்வறையில் ஓபனாக பேசிய ஹர்திக்!
- Education ஆஸ்திரேலியாவில் உயர்கல்வி பயில இந்திய மாணவர்கள் விரும்புவது ஏன்?
தயாரிப்பாளர் சங்க தேர்தல்... ஒதுங்கினார் குஷ்பு!
ஒரு பக்கம் காங்கிரஸில் கொஞ்சம் ஒதுக்கி வைக்கப்பட்டிருக்கும் அல்லது தானாக ஒதுங்கியிருக்கும் குஷ்பு இன்னொரு பக்கம் சினிமாவில் கவனம் செலுத்தத் தொடங்கினார்.
தயாரிப்பாளர் சங்கத்தில் தலைவர் கலைப்புலி எஸ்.தாணுவுக்கும் விஷாலுக்கும் பஞ்சாயத்து ஓடுகிறது. வரும் மார்ச் மாதம் நடக்கவிருக்கும் தேர்தலில் தங்கள் அணி சார்பில் குஷ்பு தலைவர் பதவிக்கு களம் இறங்குவார் என விஷால் அறிவித்தார். இதையே குஷ்புவும் ஆமோதிக்க முதன்முறையாக தேர்தல் களத்தில் குஷ்பு என்று மீடியாக்கள் பரபரப்பாகின.
தேர்தல் நெருங்கிக்கொண்டிருக்கும் சூழலில் குஷ்பு போட்டியில் இருந்து விலகி விட்டாராம். விஷால் ஆரம்பத்தில் தங்கள் அணி சார்பில் என்று சொன்னாலும் அணியில் இருக்கும் மற்ற நிர்வாகிகளுக்கு தயாரிப்பாளர் சங்க தேர்தலில் தலையிட விருப்பம் இல்லையாம். குஷ்பு திமுக அனுதாபி, காங்கிரஸைச் சேர்ந்தவர் என்பதால் அவர் தலைவரானால் மாநில அரசிடம் இருந்து சலுகைகளை பெறுவது சிரமம். எனவே குஷ்புவை ஆதரிப்பதில் விஷாலுக்கு நெருக்கமானவர்களே தயக்கம் காட்டினார்கள்.
குஷ்புவும் இந்த நேரத்தில் தேர்தலில் நின்று தோல்வியடைந்தால் அது டெல்லி தலைமைக்கு கசப்பை ஏற்படுத்தலாம் என்று யோசித்திருக்கிறார். எனவேதான் போட்டியில் இருந்து ஒதுங்கி விட்டாராம்.