நான் சிரித்தால் படம் மூலம் ஹாட்ரிக்காக காத்திருக்கிறோம் - குஷ்பு
சென்னை : நடிகர் ஹிப்ஹாப் தமிழா இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் தான் நான் சிரித்தால். இந்த படத்தை இயக்குனர் சுந்தர்.சி தயாரித்து இருக்கிறார் .இதற்கு முன் இவர் ஹிப்ஹாப் தமிழா ஆதியின் மீசையமுறுக்கு மற்றும் நட்பே துணை ஆகிய படங்களை தயாரித்து இருக்கிறார் .இவர் தனது தயாரிப்பு நிறுவனமான அவ்னி மூவிஸ் மூலம் தயாரித்து இருந்தார் .
தற்போது இவர் ஹிப்ஹாப் தமிழா நடிக்கும் மூன்றாவது படமான நான் சிரித்தால் படத்தை தயாரித்து இருக்கிறார் .இந்த படம் வரும் காதலர் தினத்திற்கு வெளியாகிறது .இதனையொட்டி படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது .

விழாவின் போது பேசிய குஷ்பு நாங்கள் நான் சிரித்தால் படம் ஹாட்ரிக்காக காத்திருக்கிறோம் என கூறினார் .அவ்னி மூவிஸின் தயாரிப்பு ரீதியான வேலைகளை குஷ்பு தான் அதிக படியாக கவனித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது .இவர்கள் தயாரித்த மீசையமுறுக்கு மற்றும் நட்பே துணை படம் மாபெரும் வெற்றி அடைந்தது .இதனால் இந்த படத்தையும் குஷ்பு பெரிய அளவில் எதிர்பார்க்கிறார் .


ஆதி எனக்கு தம்பி போல அவர் நான் சிரித்தால் படத்தில் தன்னால் முடிந்த உழைப்பை கொடுத்து இருக்கிறார் என குஷ்பு புகழ்ந்து கூறினார் ,மேலும் என் கணவரும் ஆதியும் பல விதங்களில் ஒரே மாதிரி தான் ஒரே குணம் கொண்டவர்கள் என குறிபிட்டிருந்தார் .
விழாவில் சுந்தர்.சியை பற்றி பேசிய ஹிப்ஹாப் தமிழா அவர் இசை வெளியீட்டு விழாவிற்கு வர மாட்டேன் என கூறியிருந்தார்,நாங்கள் கட்டாயபடுத்தியதால் தான் தற்போது வந்திருக்கிறார் என கூறினார் .இதை நகைச்சுவையாக ஹிப்ஹாப் தமிழா கூறியிருந்தார் இதனால் இந்த விசயம் பெரிதாக பேச படவில்லை .


Click it and Unblock the Notifications











