தேர்தல் விதிமீறல் வழக்குகள்: குஷ்பூவுக்கு முன்ஜாமீன்

நடந்து முடிந்த சட்டசபை தேர்தலின்போது நடிகை குஷ்பூ திமுகவை ஆதரித்து ஊர், ஊராக பிரச்சாரம் செய்தார். அவர் பழனிச்செட்டி பகுதியிலும் பிரச்சாரம் செய்தார். அப்போது போக்குவரத்திற்கு இடையூறாக இருந்ததற்காக அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
தேனி மாவட்டத்தில் இரண்டு தொகுதிகளில் அனுமதி பெறாமலேயே அவர் வாகனத்திற்குப் பின் 8 வாகனங்கள் சென்றுது. இதற்காகவும் அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. அந்த 8 கார்களும் பறிமுதல் செய்யப்பட்டன.
இந்த 2 வழக்குகளில் நடிகை குஷ்பூவுக்கு மதுரை உயர் நீதிமன்றம் முன்ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது.


Click it and Unblock the Notifications











