Don't Miss!
- News மக்களை ஒருமையில் பேசிய தேர்தல் அதிகாரி.. நெல்லை கலெக்டர் அதிரடி.. உடனே சூழ்ந்த போலீஸ்! அடுத்து பரபர
- Lifestyle சனிக்கிழமையன்று இந்த கலர் ஆடைகளை அணியக் கூடாது..ஏன் தெரியுமா?
- Automobiles மின்சாரத்தில் இயங்கும் ஆக்டிவாவை ஹோண்டா எப்போ தயாரிக்கும்னு கேட்டுட்டே இருந்தீங்களே.. இதோ அந்த தகவல்!
- Technology சுந்தர் பிச்சையின் இன்னொரு முகம்.. Ad Blocker ஆப்களுக்கு ஆப்பு அடிச்ச Google.. யூசர்களுக்கு Warning.. இனிமேல்?
- Sports IPL 2024 : ருதுராஜ் செய்த தவறு.. தவித்துப் போன சிஎஸ்கே.. LSG vs CSK போட்டியில் என்ன நடந்தது?
- Finance 9 GB டேட்டா ரூ. 1.20 கோடியா.. அதிர்ச்சியில் புளோரிடா தம்பதி!
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
சின்னத்திரை நடிகர் சங்கம்: வளர்ச்சிக்காக நன்கொடைகளை அள்ளி வழங்கிய ஜே.கே.ரித்தீஷ், குஷ்பூ
சென்னை: சின்னத்திரை நடிகர் சங்கத்தின் வளர்ச்சிக்காக நடிகை குஷ்பூ, ஜே.கே.ரித்தீஷ் ஆகியோர் நிதியுதவி வழங்கியுள்ளனர்.
நடிகர் சங்கத்துக்கான தேர்தல் சமீபத்தில் முடிந்த நிலையில் புதிய உறுப்பினர்களின் அறிமுக கூட்டம் சமீபத்தில் நடைபெற்றது.
இதில் சின்னத்திரை தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் சுஜாதா, செயலாளர் குஷ்பு, டைரக்டர்கள் கே.பாக்யராஜ், ஆர்.கே.செல்வமணி மற்றும் சங்க நிர்வாகிகள், சின்னத்திரை நடிகர், நடிகைககள் கலந்து கொண்டனர்.
இந்த விழாவில் புதிதாக பதவியேற்ற நிர்வாகிகளுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது.தொடர்ந்து சின்னத்திரை நடிகர் சங்கத்தின் வளர்ச்சிக்காக ரூ.5 லட்சத்தை ஜே.கே.ரித்தீஷும், ரூ 1 லட்சத்தை நடிகை குஷ்பூவும் வழங்கினர்.
மேலும் நலிவடைந்த சின்னத்திரை கலைஞர்களுக்கு பல்வேறு உதவிகளும் இந்த விழாவில் வழங்கப்பட்டன.
விழாவில் பேசிய குஷ்பூ "நான் எப்போதும் சின்னத்திரை நடிகர் நடிகைகளுக்கு துணையாக இருப்பேன். இந்த சங்கத்தின் மூலம் பல்வேறு உதவிகளை செய்வேன்" என்று உறுதி கூறினார்.
இந்தக் கூட்டத்தில் சின்னத்திரை சங்க கட்டிடம் கட்டுவது, சங்க உறுப்பினர்களுக்கு மருத்துவ வசதி, உறுப்பினர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவி வழங்குவது உள்பட பல்வேறு முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன.