Don't Miss!
- Finance கௌதம் அதானி கையில் பணம் விளையாடுது.. ரூ.6,661 கோடி புதிய முதலீடு..!!
- Automobiles இந்தியாவே இந்த ஸ்கோடா காருக்காக தான் வெயிட்டிங்! விலையை கேட்டா ஆச்சரியப்படுவீங்க!
- News இது என்ன ஜனநாயகம்.. தேர்தல் நேரத்தில் காங்கிரஸ் நிதி முடக்கப்படுகிறது.. தலைவர்கள் குமுறல்
- Technology வாவ்.. சும்மா அள்ளுது.. 6000எம்ஏஎச் பேட்டரி.. 50எம்பி கேமரா.. 128ஜிபி மெமரி.. எந்த மாடல்?
- Sports 8 வருஷமாக ஆர்சிபிக்கு தொடரும் சோகம்.. கேகேஆர் செய்த மாஸ் சம்பவம்.. வரலாற்றை மாற்றுவாரா விராட் கோலி?
- Lifestyle ஒரு டைம் காளானை வாங்கி இப்படி ட்ரை பண்ணுங்க.. சும்மா அள்ளும்...
- Education சென்னையின் பெருமைமிகு கல்லூரிகளில் ஒன்றாகத் திகழும் டி.ஜி.வைஷ்ணவ் கல்லூரி...!!
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
'ஓவர் நெகட்டிவிட்டி.. நான் நானாக இல்லை'.. அதிரடியாக டிவிட்டரில் இருந்து வெளியேறிய குஷ்பு!
நடிகை குஷ்பு டிவிட்டரில் இருந்து வெளியேறியுள்ளார்.
Recommended Video
சென்னை: எதிர்மறையான விஷயங்கள் அதிகரித்துவிட்டதாகக் கூறி, டிவிட்டரில் இருந்து வெளியேறியுள்ளார் நடிகை குஷ்பு.
தமிழ் சினிமாவில் மூத்த நடிகையாக இருக்கும் குஷ்பு, தமிழக அரசியலிலும் தவிர்க்க முடியாத நபராக உருவாகி கொண்டிருக்கிறார். காங்கிரஸ் கட்சியின் தேசிய செய்தி தொடர்பாளராக இருக்கும் அவர், சினிமா,சீரியல், அரசியல் என அனைத்திலும் முனைப்புடன் செயல்பட்டு வருகிறார்.
சமூக வலைதளங்களில் குஷ்பு தீவிரமாக இயங்கக் கூடியவர். டிவிட்டர், இன்ஸ்டாகிராம் உள்ளிட்டவைகளில் லட்சக்கணக்கானவர்கள் குஷ்புவை தொடர்ந்து வருகின்றனர். சமூகம் சார்ந்த கருத்தாக இருந்தாலும், அரசியல் சார்ந்த கருத்தாக இருந்தாலும், அதை தைரியமாக பதிவிடக்கூடியவர் குஷ்பு.
வெளியேறிய குஷ்பு
இந்நிலையில் குஷ்பு டிவிட்டரில் இருந்து திடீரென வெளியேறியுள்ளார். இது அவரது ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. எந்த முன் அறிவிப்பும் இல்லாமல் திடீரென டிவிட்டரில் இருந்து குஷ்பு வெளியேறியது ஏன் என ரசிகர்கள் குழம்பினர்.
குஷ்பு விளக்கம்
இதுகுறித்து குஷ்புவிடம் செய்தியாளர்கள் கேட்ட போது, "டிவிட்டரில் இருக்கும் போது நான் நானாகவே இல்லை. டிவிட்டரில் எதிர்மறையான விஷயங்கள் அதிகரித்துவிட்டன. அது என்னையும் ஆட்கொள்கிறது. கிண்டல் செய்பவர்களுக்கு பயந்து நான் டிவிட்டரில் இருந்து வெளியேறவில்லை. நான் நானாக இருக்க வேண்டும் என்பதற்காக தான் டிவிட்டரில் இருந்து வெளியேறினேன்", என விளக்கம் அளித்துள்ளார்.
எனக்கு ஜனநாயகம் கிடையாதா?
மேலும், "டிவிட்டரில் சில ஒழுங்குமுறைகள் கொண்டுவரப்பட வேண்டும். இங்கு ஜனநாயகம் இருப்பதாக நீங்கள் கூறலாம். உங்களிடன் இருக்கும் ஜனநாயகத்தை வைத்து நீங்கள் என்னை அசிங்கப்படுத்தினால், நானும் அதே ஜனநாயகத்தை வைத்து அதேபோல் அசிங்கப்படுத்துவேன். ஒரு நடிகையாக, அரசியல்வாதியாக இருப்பதாலேயே, இந்த நாட்டின் ஜனநாயகத்தை நான் அனுபவிக்கக்கூடாதா? என்ன", என குஷ்பு கேள்வி எழுப்பியுள்ளார்.
ஏற்கனவே இப்படி நடந்துள்ளது
நடிகை குஷ்பு கடந்த 2017ம் ஆண்டும் இதே போல் டிவிட்டரில் இருந்து வெளியேறினார். சில மாதங்களுக்கு பிறகு அவர் மீண்டும் டிவிட்டரில் இணைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. எனவே இப்போதும் சில மாதங்களுக்கு பிறகு குஷ்பு மீண்டும் டிவிட்டரில் மீண்டும் இணைவார் என எதிர்பார்க்கப்படுகிறது.