கோவா விழாவில் குற்றம் கடிதலுக்கு சிவப்புக் கம்பள வரவேற்பு
பல்வேறு பட விழாக்களில் அங்கீகாரமும் அந்தஸ்தும் பெற்ற 'குற்றம் கடிதல் படத்துக்கு கோவாவில் நடந்த 45ஆவது இந்தியன் பனோரமா விழாவில் சிறப்பு அந்தஸ்தாக சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது.
குற்றம் கடிதல் பட இயக்குனர் பிரம்மா.ஜி, தயாரிப்பாளர் ஜே எஸ் கே, மற்றும் படக் குழுவினர் இதற்கென கோவா வரவேற்பை ஏற்றனர்.

பிரத்தியேகமான சில படங்களுக்கு மட்டுமே கிடைக்கும் இந்த சிவப்புக் கம்பள வரவேற்பு, இதற்கு முன் ராம் இயக்கிய தங்க மீன்கள் படத்துக்குக் கிடைத்தது.
இந்தப் படத்தையும் ஜேஎஸ்கே நிறுவனம்தான் தயாரித்தது என்பது குறிப்பிடத்தக்கது.
'தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக நான் தயாரித்த படங்கள் இந்த மரியாதைக்கான சிறப்பு வளையத்தில் வருவது எனக்கு மிக்க பெருமை. முன்னரே தெரிவித்தது போலவே இந்த பெருமை நல்ல தரமான தமிழ் படங்கள் வர உழைக்கும் எல்லோருக்கும் 'சமர்ப்பணம்," என்கிறார் தயாரிப்பாளர் ஜே.சதீஷ் குமார்.


Click it and Unblock the Notifications











