Don't Miss!
- News "மத்திய அரசை விமர்சிக்காதது ஏன்?" இரண்டு நொடி கேப் விட்டு.. எடப்பாடி பழனிசாமி தந்த விளக்கம்
- Technology ஏர்டெல் காலி.. மாதாந்திரம் ரூ.141 போதும்.. 336 நாட்கள் வேலிடிட்டி.. 5ஜி டேட்டா.. அன்லிமிட் வாய்ஸ் கால்கள்!
- Sports எழுதி வச்சிக்கோங்க! ஆளே மாறிட்டான்..நிச்சயம் பெரிய ஆளா வருவான்.. 22 வயது வீரரை பாராட்டிய சூர்யகுமார்
- Lifestyle இந்த 4 பொருள் இருந்தா போதும்.. 1 நிமிடத்தில் சட்னியை செஞ்சுடலாம்.. எப்படி-ன்னு பாருங்க...
- Finance ஐஐஎம் பெங்களூரு: 516 பேருக்கு வேலை, சாராசரி சம்பளமே ரூ.32.5 லட்சமாம்..!
- Automobiles இந்தியா மட்டுமல்ல வெளிநாட்டுலயும் இந்த கார்கள் தான் செம ஃபேமஸ்! டாப் 10 லிஸ்ட் இதோ!
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
கோவா விழாவில் குற்றம் கடிதலுக்கு சிவப்புக் கம்பள வரவேற்பு
பல்வேறு பட விழாக்களில் அங்கீகாரமும் அந்தஸ்தும் பெற்ற 'குற்றம் கடிதல் படத்துக்கு கோவாவில் நடந்த 45ஆவது இந்தியன் பனோரமா விழாவில் சிறப்பு அந்தஸ்தாக சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது.
குற்றம் கடிதல் பட இயக்குனர் பிரம்மா.ஜி, தயாரிப்பாளர் ஜே எஸ் கே, மற்றும் படக் குழுவினர் இதற்கென கோவா வரவேற்பை ஏற்றனர்.
பிரத்தியேகமான சில படங்களுக்கு மட்டுமே கிடைக்கும் இந்த சிவப்புக் கம்பள வரவேற்பு, இதற்கு முன் ராம் இயக்கிய தங்க மீன்கள் படத்துக்குக் கிடைத்தது.
இந்தப் படத்தையும் ஜேஎஸ்கே நிறுவனம்தான் தயாரித்தது என்பது குறிப்பிடத்தக்கது.
'தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக நான் தயாரித்த படங்கள் இந்த மரியாதைக்கான சிறப்பு வளையத்தில் வருவது எனக்கு மிக்க பெருமை. முன்னரே தெரிவித்தது போலவே இந்த பெருமை நல்ல தரமான தமிழ் படங்கள் வர உழைக்கும் எல்லோருக்கும் 'சமர்ப்பணம்," என்கிறார் தயாரிப்பாளர் ஜே.சதீஷ் குமார்.