Don't Miss!
- Lifestyle வரப்போகிற சூரிய கிரகணம் இந்த 4 ராசிக்காரங்களுக்கு பெரிய துரதிர்ஷ்டத்தை தரப்போகுதாம்..ரொம்ப ஜாக்கிரதையா இருங்க!
- Automobiles பிரசார வேனை சொகுசு பங்களா போல செட்டப் செய்த கமலஹாசன்! இதை பார்க்கவே கூட்டம் குவியுமே!
- Sports அஸ்வின் நீங்க செஞ்சது பெரிய தப்பு.. உங்க தவறை மறைக்க ஜெய்ஸ்வாலை திட்டுவதா? என்ன நடந்தது?
- News திருச்சி நபர் உள்பட 3 பேர் பலி! சென்னையை அதிரவைத்த கேளிக்கை விடுதி விபத்து! நடந்தது என்ன? பரபர தகவல்
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
- Technology குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
கோவா திரைப்பட விழாவில் 'சோலோ'வாக பங்கேற்கும் தமிழ்ப் படம் குற்றம் கடிதல்!
கோவா: 'இந்தியன் பனோரமா' நடத்தும் சர்வதேச திரைப்பட விழாவில் கலந்து கொள்ள தேர்வாகி இருக்கும் 26 மாநில மொழிப் படங்களில், ஒரே தமிழ்த் திரைப்படமாக தேர்வாகியிருக்கிறது ‘குற்றம் கடிதல்'.
ஜே.எஸ்.கே நிறுவனம் தயாரித்துள்ள இந்த திரைப்படத்தை அறிமுக இயக்குநர் பிரம்மா இயக்கியுள்ளார்.
டிசம்பர் மாதம் திரையில் வெளியிடப்படும் என்று எதிர்ப்பார்க்கப்படும் 'குற்றம் கடிதல்' தற்போது திரைக்கு வரும் முன்பே சினிமா ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
பிரம்மா
கோவா திரைப்பட விழாவில் முதல் நாளே திரையிடப்பட்ட இந்தப் படம் குறித்து இயக்குநர் பிரம்மா கூறுகையில், "படத்தில் நடித்திருப்பவர்கள் எல்லோருமே புதுமுகங்கள் தான். இந்த படம் பார்ப்பவர்களின் கவனத்தை ஈர்க்கிற மாதிரி இருக்கும். மாஸ்டர் அஜய், சாய் ராஜ்குமார், பாவல் நவகீதன்'னு படத்துல நடிச்சிருக்குறவங்க எல்லாருமே அவங்க பங்களிப்பை ரொம்பவே சிறப்பா செஞ்சிருக்காங்க.
கோவாவில்
நேத்து படம் திரையிட்ட பிறகு நிறைய பேருகிட்ட இருந்து பாஸிடிவ் கமாண்ட்ஸ் வந்துட்டு இருக்கு," என்றார்.
ஏற்கெனவே ஜிம்பாப்வே திரை பட விழா, மும்பை திரைப்பட விழா ஆகியவற்றிலும் இந்தப் படம் பங்கேற்றுள்ளது.
பெங்களூரு விழாவுக்கும் தேர்வு
அடுத்து பெங்களூருவில் நடைபெற உள்ள 7ஆவது சர்வதேச திரை பட விழாவில் கலந்துக் கொள்ள தகுதி பெற்றுள்ளது குற்றம் கடிதல்.
ஜேஎஸ்கே
தயாரிப்பாளர் ஜேஎஸ்கே இதுகுறித்து கூறுகையில், 'ஒவ்வொரு விடியலும் எங்களுக்கு நல்ல சேதி தந்து கொண்டுதானிருக்கிறது. இந்த சந்தோஷத்தை சொல்லில் அடக்க முடியாது. தரமான படங்கள் தயாரிக்கும் பணியை நான் இப்போது பயிற்சியாக மேற்கொண்டு, வழக்கமாக மாற்றுவேன்,' என்றார்.