twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    காஜாமைதீன் மனைவி நடிகை ஆம்னியும் தற்கொலை முயற்சி? பிரபல திரைப்படத் தயாரிப்பாளர் காஜா மைதீன் தற்கொலைக்கு முயன்றது கோலிவுட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளநிலையில் அவரது மனைவியும், முன்னாள் நடிகையுமான ஆம்னியும் தூக்க மாத்திரைகள் சாப்பிட்டுத் தற்கொலைக்குமுயன்றது தற்போது தெரியவந்துள்ளது.பொற்காலம், பெண்ணின் மனதைத் தொட்டு, ஜனா, பாட்டாளி, வாஞ்சிநாதன், தேவதையைக் கண்டேன் உள்ளிட்ட பல்வேறுவெற்றிப் படங்களைத் தயாரித்தவர் காஜா மைதீன். தனது ரோஜா கம்பைன்ஸ் பட நிறுவனம் மூலம் திரைப்படங்களைத்தயாரித்து வந்தார் காஜா மைதீன்.குறுகிய காலத்தில் பல்வேறு வெற்றிப் படங்களைக் கொடுத்தவர் காஜா மைதீன். சில ஆண்டுகளுக்கு முன்பு நடிகர் சங்கம்சார்பில், நடிகர் சங்க கடனை அடைக்க வெளிநாடுகளில் நடந்த கலை நிகழ்ச்சிகளுக்கான ஏற்பாடுகளை செய்துதிரையுலகினரின் பாராட்டுக்களைப் பெற்றார்.ஆனால் இந்த நிகழ்ச்சி ஏற்பாடுகள் தொடர்பாக துபாயில் இவர் சில சிக்கல்களைசந்திக்க நேர்ந்தது. இதனால் துபாயிலிருந்துநாடு திரும்ப முடியாமல் சிக்கலில் மாட்டினார். ஆனால் நடிகர் சங்கத்தின் சார்பில் இவரை துபாயிலிருந்து வரவழைக்க பெரிய அளவில் முயற்சிகள் எடுக்கப்படவில்லை என்றுஅப்போது செய்திகள் கிளம்பின. தனிப்பட்ட முயற்சியின் காரணமாக அவராகவே துபாயிலிருந்து மீண்டு வந்தார்.நடிகர் விஜயகாந்தின் நெருங்கிய நண்பராகவும் விளங்கினார் காஜா மைதீன். விஜயகாந்த்தை வைத்து சில படங்களையும்எடுத்துள்ளார். தொடர்ந்து அவரது நெருங்கிய நண்பராக விளங்கிய காஜா மைதீன், தற்போது விஜயகாந்த்தை வைத்த பேரரசுஎன்ற படத்தை எடுத்து வருகிறார். சமீபத்தில் கமல்ஹாசனை வைத்து வேட்டையாடு விளையாடு படத்திற்கான பூஜையையும் போட்டார்.பேரரசு படத்தின் போது காஜா மைதீனுக்கும், விஜயகாந்த்துக்கும் இடையே மனக் கசப்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.விஜயகாந்த்துக்கு பேசப்பட்ட சம்பளத்தின் ஒரு பகுதியை தர முடியாத அளவுக்கு பண நெருக்கடியில் காஜா மைதீன்சிக்கியதாக தெரிகிறது. இதன் காரணமாக பேரரசு படத்தில் நடிப்பதை நிறுத்தி விட்டு தனது மைத்துனரின் தயாரிப்பில் சொந்தப் படத்தில் (சுதேசி)நடிக்கப் போய் விட்டார் விஜயகாந்த்.திடீரென விஜயகாந்த் தனது சொந்தத் தயாரிப்பில் நடிக்கப் போய் விட்டதால் மனம் உடைந்தார் காஜா மைதீன். அடி மேல்அடியாக, வேட்டையாடு விளையாடு படத்திற்கு தேவையான பணத்தை திரட்ட முடியாமல் அவஸ்தைப்பட்டார். இதனால்அந்தப் படம் பூஜையுடன் நிற்கிறது.இந்த நிலையில் தான் பைனான்சியர் ரூபத்தில் பெரும் சிக்கலில் சிக்கினார் காஜா மைதீன். கடனைக் கேட்டு நெருக்கியபைனான்சியர், அதற்கு ஈடாக காஜா மைதீன் மனைவியான நடிகை ஆம்னியின் பெயரில் இருந்த ரூ. 4 கோடி மதிப்பிலானசொத்துக்களை தனது பெயருக்கு மாற்றி எழுதி வாங்கிக் கொண்டார்.இதனால் ரொம்பவே நொந்து போய் விட்டார் காஜா மைதீன். இந்த சோகத்தின் காரணமாகவே அவர் தற்கொலைக்கு முயன்று40 தூக்க மாத்திரைகளை சாப்பிட்டுள்ளார். காஜா மைதீனுடன் சேர்ந்து அவரது மனைவி ஆம்னியும் தூக்க மாத்திரைகளைசாப்பிட்டுள்ளது தற்போது தெரியவந்துள்ளது. ஆம்னி முன்பு பிரபலமான நடிகையாக திகழ்ந்தவர். விஜயகாந்த்துடன் ஆனஸ்ட் ராஜ் உள்ளிட்ட சில படங்களில்நடித்துள்ளார். தெலுங்குப் படங்களிலும் நடித்துள்ளார்.காஜாமைதீனும், அவரும் காதலித்துத் திருமணம் செய்து கொண்டனர். திருமணத்திற்குப் பின்னர் முஸ்லீம் மதத்திற்கு மாறியஆம்னி, தனது பெயரையும் ஆயிஷா என்று மாற்றிக் கொண்டார்.கடன் தொல்லை காரணமாக கணவனும், மனைவியுமாக தூக்க மாத்திரைகளை சாப்பிட்டுள்ளனர். ஆம்னி 10 தூக்கமாத்திரைகளை சாப்பிட்டுள்ளதாக தெரிகிறது. ஆனால் அதிர்ஷ்டவசமாக அவர் மயக்க நிலைக்குச் செல்லாமல் உயிர் தப்பினார்.ஆனால் காஜா மைதீன் அதிக அளவில் மாத்திரைகள் சாப்பிட்டதால் மயக்க நிலைக்குப் போய் விட்டார்.தற்போது காஜா மைதீன் ஆபத்து கட்டத்தைத் தாண்டி விட்டார். மயக்கம் தெளிந்து குணமடைந்து வருகிறார். அவரைசெய்தியாளர்கள் சிலர் மருத்துவமனைக்கு சென்று சந்தித்தனர். அப்போது, தமிழ் சினிமாவைப் பற்றி நான் நிறையவிஷயங்களைச் சொல்ல வேண்டும். ஆனால் எனது உடல் நிலை காரணமாக அதிகம் பேசக் கூடாது என்று டாக்டர்கள் கூறியுள்ளனர். தமிழ் திரையுலக நன்மைக்காகநான் நிறைய பேச வேண்டியுள்ளது. சனிக்கிழமை உங்களிடம் விரிவாகப் பேசுகிறேன் என்று கூறினார் காஜா மைதீன்.திரையுலகை ஆட்டிப் படைத்து வரும் மிகப் பெரிய பிரச்சினையாக தற்போது கூறப்படுவது கந்து வட்டிக்காரர்களின்அட்டகாசம் தான். மிகப் பெரிய திராவிடக் கட்சி ஒன்றின் துணையுடன் சில கந்து வட்டிக்காரர்கள் (குறிப்பாக மதுரையைச்சேர்ந்த ஒரு முக்கியமான புள்ளி) திரையுலகினை ஆட்டிப்படைத்து வருவதாக நீண்ட காலமாகவே முணுமுணுப்பு இருந்துவருகிறது.இந்த கந்து வட்டிக் கும்பலிடம் சிக்கி சீரழிந்தவர்கள் பட்டியல் மிகப் பெரியது என்று திரையுலகினர் வருத்தத்துடன்குறிப்பிடுகின்றனர். பிரபல தயாரிப்பாளர் ஜீ.வி. கந்து வட்டிக்காரர்களின் அட்டகாசத்தால் தான் உயிரையே விட்டார். நடிகை தேவயானி, ரம்பா, கார்த்திக் என பலர் தங்களது சொத்துக்களை இழந்தனர். பலரை கந்து வட்டிக் கும்பல் கடத்தி வைத்துமிரட்டி பணத்தையும், சொத்தையும் பறித்துள்ளது.அதுபோன்ற ஒரு கும்பலிடம் தான் தற்போது காஜா மைதீன் மாட்டியுள்ளதாக தெரிகிறது. கடன் தொல்லையிலிருந்து தன்னைக்காப்பாற்ற தனக்கு நெருக்கமான சிலரை காஜா மைதீன் அணுகியபோது அவர்கள் கைவிட்டு விட்டதாகவும்,அதன் காரணமாகவும், சொத்தை இழந்த சோகம் காரணத்தினாலும் தான் காஜா மைதீனும், அவரது மனைவியும் தற்கொலைக்குமுயன்றதாக கூறப்படுகிறது.

    By Staff
    |

    பிரபல திரைப்படத் தயாரிப்பாளர் காஜா மைதீன் தற்கொலைக்கு முயன்றது கோலிவுட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளநிலையில் அவரது மனைவியும், முன்னாள் நடிகையுமான ஆம்னியும் தூக்க மாத்திரைகள் சாப்பிட்டுத் தற்கொலைக்குமுயன்றது தற்போது தெரியவந்துள்ளது.

    பொற்காலம், பெண்ணின் மனதைத் தொட்டு, ஜனா, பாட்டாளி, வாஞ்சிநாதன், தேவதையைக் கண்டேன் உள்ளிட்ட பல்வேறுவெற்றிப் படங்களைத் தயாரித்தவர் காஜா மைதீன். தனது ரோஜா கம்பைன்ஸ் பட நிறுவனம் மூலம் திரைப்படங்களைத்தயாரித்து வந்தார் காஜா மைதீன்.

    குறுகிய காலத்தில் பல்வேறு வெற்றிப் படங்களைக் கொடுத்தவர் காஜா மைதீன். சில ஆண்டுகளுக்கு முன்பு நடிகர் சங்கம்சார்பில், நடிகர் சங்க கடனை அடைக்க வெளிநாடுகளில் நடந்த கலை நிகழ்ச்சிகளுக்கான ஏற்பாடுகளை செய்துதிரையுலகினரின் பாராட்டுக்களைப் பெற்றார்.

    ஆனால் இந்த நிகழ்ச்சி ஏற்பாடுகள் தொடர்பாக துபாயில் இவர் சில சிக்கல்களைசந்திக்க நேர்ந்தது. இதனால் துபாயிலிருந்துநாடு திரும்ப முடியாமல் சிக்கலில் மாட்டினார்.

    ஆனால் நடிகர் சங்கத்தின் சார்பில் இவரை துபாயிலிருந்து வரவழைக்க பெரிய அளவில் முயற்சிகள் எடுக்கப்படவில்லை என்றுஅப்போது செய்திகள் கிளம்பின. தனிப்பட்ட முயற்சியின் காரணமாக அவராகவே துபாயிலிருந்து மீண்டு வந்தார்.

    நடிகர் விஜயகாந்தின் நெருங்கிய நண்பராகவும் விளங்கினார் காஜா மைதீன். விஜயகாந்த்தை வைத்து சில படங்களையும்எடுத்துள்ளார். தொடர்ந்து அவரது நெருங்கிய நண்பராக விளங்கிய காஜா மைதீன், தற்போது விஜயகாந்த்தை வைத்த பேரரசுஎன்ற படத்தை எடுத்து வருகிறார்.

    சமீபத்தில் கமல்ஹாசனை வைத்து வேட்டையாடு விளையாடு படத்திற்கான பூஜையையும் போட்டார்.

    பேரரசு படத்தின் போது காஜா மைதீனுக்கும், விஜயகாந்த்துக்கும் இடையே மனக் கசப்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.விஜயகாந்த்துக்கு பேசப்பட்ட சம்பளத்தின் ஒரு பகுதியை தர முடியாத அளவுக்கு பண நெருக்கடியில் காஜா மைதீன்சிக்கியதாக தெரிகிறது.

    இதன் காரணமாக பேரரசு படத்தில் நடிப்பதை நிறுத்தி விட்டு தனது மைத்துனரின் தயாரிப்பில் சொந்தப் படத்தில் (சுதேசி)நடிக்கப் போய் விட்டார் விஜயகாந்த்.

    திடீரென விஜயகாந்த் தனது சொந்தத் தயாரிப்பில் நடிக்கப் போய் விட்டதால் மனம் உடைந்தார் காஜா மைதீன். அடி மேல்அடியாக, வேட்டையாடு விளையாடு படத்திற்கு தேவையான பணத்தை திரட்ட முடியாமல் அவஸ்தைப்பட்டார். இதனால்அந்தப் படம் பூஜையுடன் நிற்கிறது.

    இந்த நிலையில் தான் பைனான்சியர் ரூபத்தில் பெரும் சிக்கலில் சிக்கினார் காஜா மைதீன். கடனைக் கேட்டு நெருக்கியபைனான்சியர், அதற்கு ஈடாக காஜா மைதீன் மனைவியான நடிகை ஆம்னியின் பெயரில் இருந்த ரூ. 4 கோடி மதிப்பிலானசொத்துக்களை தனது பெயருக்கு மாற்றி எழுதி வாங்கிக் கொண்டார்.

    இதனால் ரொம்பவே நொந்து போய் விட்டார் காஜா மைதீன். இந்த சோகத்தின் காரணமாகவே அவர் தற்கொலைக்கு முயன்று40 தூக்க மாத்திரைகளை சாப்பிட்டுள்ளார். காஜா மைதீனுடன் சேர்ந்து அவரது மனைவி ஆம்னியும் தூக்க மாத்திரைகளைசாப்பிட்டுள்ளது தற்போது தெரியவந்துள்ளது.

    ஆம்னி முன்பு பிரபலமான நடிகையாக திகழ்ந்தவர். விஜயகாந்த்துடன் ஆனஸ்ட் ராஜ் உள்ளிட்ட சில படங்களில்நடித்துள்ளார். தெலுங்குப் படங்களிலும் நடித்துள்ளார்.

    காஜாமைதீனும், அவரும் காதலித்துத் திருமணம் செய்து கொண்டனர். திருமணத்திற்குப் பின்னர் முஸ்லீம் மதத்திற்கு மாறியஆம்னி, தனது பெயரையும் ஆயிஷா என்று மாற்றிக் கொண்டார்.

    கடன் தொல்லை காரணமாக கணவனும், மனைவியுமாக தூக்க மாத்திரைகளை சாப்பிட்டுள்ளனர். ஆம்னி 10 தூக்கமாத்திரைகளை சாப்பிட்டுள்ளதாக தெரிகிறது. ஆனால் அதிர்ஷ்டவசமாக அவர் மயக்க நிலைக்குச் செல்லாமல் உயிர் தப்பினார்.ஆனால் காஜா மைதீன் அதிக அளவில் மாத்திரைகள் சாப்பிட்டதால் மயக்க நிலைக்குப் போய் விட்டார்.

    தற்போது காஜா மைதீன் ஆபத்து கட்டத்தைத் தாண்டி விட்டார். மயக்கம் தெளிந்து குணமடைந்து வருகிறார். அவரைசெய்தியாளர்கள் சிலர் மருத்துவமனைக்கு சென்று சந்தித்தனர். அப்போது, தமிழ் சினிமாவைப் பற்றி நான் நிறையவிஷயங்களைச் சொல்ல வேண்டும்.

    ஆனால் எனது உடல் நிலை காரணமாக அதிகம் பேசக் கூடாது என்று டாக்டர்கள் கூறியுள்ளனர். தமிழ் திரையுலக நன்மைக்காகநான் நிறைய பேச வேண்டியுள்ளது. சனிக்கிழமை உங்களிடம் விரிவாகப் பேசுகிறேன் என்று கூறினார் காஜா மைதீன்.

    திரையுலகை ஆட்டிப் படைத்து வரும் மிகப் பெரிய பிரச்சினையாக தற்போது கூறப்படுவது கந்து வட்டிக்காரர்களின்அட்டகாசம் தான். மிகப் பெரிய திராவிடக் கட்சி ஒன்றின் துணையுடன் சில கந்து வட்டிக்காரர்கள் (குறிப்பாக மதுரையைச்சேர்ந்த ஒரு முக்கியமான புள்ளி) திரையுலகினை ஆட்டிப்படைத்து வருவதாக நீண்ட காலமாகவே முணுமுணுப்பு இருந்துவருகிறது.

    இந்த கந்து வட்டிக் கும்பலிடம் சிக்கி சீரழிந்தவர்கள் பட்டியல் மிகப் பெரியது என்று திரையுலகினர் வருத்தத்துடன்குறிப்பிடுகின்றனர். பிரபல தயாரிப்பாளர் ஜீ.வி. கந்து வட்டிக்காரர்களின் அட்டகாசத்தால் தான் உயிரையே விட்டார்.

    நடிகை தேவயானி, ரம்பா, கார்த்திக் என பலர் தங்களது சொத்துக்களை இழந்தனர். பலரை கந்து வட்டிக் கும்பல் கடத்தி வைத்துமிரட்டி பணத்தையும், சொத்தையும் பறித்துள்ளது.

    அதுபோன்ற ஒரு கும்பலிடம் தான் தற்போது காஜா மைதீன் மாட்டியுள்ளதாக தெரிகிறது. கடன் தொல்லையிலிருந்து தன்னைக்காப்பாற்ற தனக்கு நெருக்கமான சிலரை காஜா மைதீன் அணுகியபோது அவர்கள் கைவிட்டு விட்டதாகவும்,

    அதன் காரணமாகவும், சொத்தை இழந்த சோகம் காரணத்தினாலும் தான் காஜா மைதீனும், அவரது மனைவியும் தற்கொலைக்குமுயன்றதாக கூறப்படுகிறது.

      உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
      Enable
      x
      Notification Settings X
      Time Settings
      Done
      Clear Notification X
      Do you want to clear all the notifications from your inbox?
      Settings X
      X